உலகக் கோப்பை காலிறுதிப் போட்டியில் இன்று நடைபெற்ற நியூசிலாந்து, மேற்கு இந்தியத் தீவுகள் அணிகளுக்கு இடையிலான போட்டியில், நியூசிலாந்து அணி 143 ரன் வித்தியாசத்தில் மேற்கு இந்தியத் தீவுகள் அணியை வெற்றி கொண்டது. முதலில் பேட் செய்து விளையாடிய நியூசிலாந்து அணி 393 ரன் எடுத்து 394 ரன் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்கை நிர்ணயித்தது. பின்னர் களம் இறங்கிய மேற்கு இந்தியத் தீவுகள் அணி, துவக்கம் முதலே அதிரடியாக ஆடியது. ஆனால், சீரான இடைவெளியில் விக்கெட்டுகள் சரிந்தன. கிறிஸ் கெய்ல் அதிரடி காட்டி 33 பந்துகளில் 61 ரன் எடுத்தார். இதில் 8 சிக்ஸ்களும் 2 பவுண்டரிகளும் அடங்கும். சார்ல்ஸ் 3 ரன்னில் ஆட்டம் இழந்ததும், சிம்மன்ஸ் 12 ரன்னிலும், ராம்தின் ரன் ஏதும் எடுக்காமலும் அடுத்தடுத்து ஆட்டம் இழந்து அணிக்கு பெரிய நெருக்கடியைக் கொடுத்தனர். இருந்தபோதும், இந்த அணியின் ரன் ரேட் அதிகமாகவே இருந்தது. ஓவருக்கு 8 ரன்களுக்கு மேல் எடுத்து வந்தபோதிலும், தொடர்ச்சியாக விக்கெட்களை பறிகொடுத்ததால், அணி 30.3 ஓவரில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 250 ரன்னுக்கு ஆட்டம் இழந்தது. இதை அடுத்து நியூசிலாந்து அணி இந்தப் போட்டியில் வெற்றி பெற்று அரையிறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது. அரையிறுதியில் தென்னாப்பிரிக்காவுடன் மோதுகிறது நியூசிலாந்து.
நியூசிலாந்து அபார வெற்றி: அரையிறுதியில் தென்னாப்பிரிக்காவை எதிர்கொள்கிறது
செங்கோட்டை ஸ்ரீராம்https://www.dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். |
தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

