இலங்கையில் தமிழிலும் தேசிய கீதம்: சிறிசேன அனுமதிக்கு சுதந்திர கட்சி போர்க்கொடி

கொழும்பு: srilanka-government இலங்கையில் சிங்கள மொழியில் உள்ளது போலவே நாட்டின் இரண்டாவது பெரும்பான்மை மக்களான தமிழர்களின் தாய்மொழியான தமிழிலும் அந்நாட்டின் தேசிய கீதத்தை பாடுவதற்கு அதிபர் மைத்ரிபாலா சிறிசேன தலைமையிலான அரசு அனுமதி அளித்துள்ளது. இதனைக் கண்டித்து ஆளும் இலங்கை சுதந்திர கட்சி போர்க்கொடி தூக்கியுள்ளது. இலங்கையில் 1951-ம் ஆண்டில் இருந்து தமிழ் மொழியிலும் தேசிய கீதம் இசைக்கப்பட்டு வந்தது. இதற்கு கடந்த 2010-ம் ஆண்டு ராஜபட்ச அரசு தடை விதித்தது. தற்போது ஆட்சி மாற்றத்துக்குப் பிறகு பழைய நடைமுறைப் படி, தமிழிலும் தேசிய கீதத்தைப் பாட அதிபர் மைத்ரிபால சிறிசேன ஒப்புதல் அளித்தார். அதிபரின் இந்த முடிவுக்கு ஆளும் இலங்கை சுதந்திர கட்சியின் தலைவர்களில் ஒருவரும், முன்னாள் ராணுவ கமாண்டருமான சரத் வீரசேகரா எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கருத்து தெரிவித்தபோது… ‘ நமது அரசியலமைப்புச் சட்டத்தின்படி, தேசிய கீதம் நாட்டின் தாய்மொழியில்தான் இருக்க வேண்டும் என தெளிவாக கூறப்பட்டுள்ளது. மைத்ரிபாலாவின் இந்த முடிவு வெறும் 20 லட்சம் (தமிழ்) மக்கள் தொகையை திருப்திப்படுத்தும் செயலாகும். இந்தியாவில் ஆறரை கோடி தமிழ் மக்கள் வாழ்கின்றனர். ஆனால், அங்கு தமிழில் தேசிய கீதம் பாடப்படுவதில்லை’ என்றார். ஆனால், இலங்கை சுதந்திர கட்சியின் தற்போதைய செய்தி தொடர்பாளர் டிலன் பெரேரா. ‘இந்தக் கருத்து சரத் வீரசேகராவின் தனிப்பட்ட கருத்து. கட்சியின் ஒட்டுமொத்த கருத்தல்ல. தமிழிலும் தேசிய கீதம் பாடப்படலாம் என்ற அரசியலமைப்பு சட்டத்தின் பிரிவின் மீது நாங்கள் நம்பிக்கை வைத்துள்ளோம். இதைப்போன்ற இனவெறி மனப் போக்கினால்தான் ராஜபட்ச தோல்வியை தழுவினார்’ என்று கூறியுள்ளார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஏப்ரல் 06 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

திமுக.,விலேயே சேர்ந்துவிடலாமே வைகோ!

தி.மு.க., இன்று சின்னம் கொடுக்கிறது. நாளை வேட்பாளர்களையும் தரும் நிலை உருவானால், மெல்லவும் முடியாமல், விழுங்கவும் முடியாமல் திணறும் சூழலில்

பஞ்சாங்கம் ஏப்ரல் 5 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

இந்த ரயில்கள் எல்லாம் எழும்பூர் வராது; தாம்பரத்தோடு சரி

சென்னை எழும்பூரில் நடைபெற்று வரும் மறு சீரமைப்பு பணிகள் காரணமாக இந்த மாற்றங்கள் தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளதாக‌

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

Topics

பஞ்சாங்கம் ஏப்ரல் 06 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

திமுக.,விலேயே சேர்ந்துவிடலாமே வைகோ!

தி.மு.க., இன்று சின்னம் கொடுக்கிறது. நாளை வேட்பாளர்களையும் தரும் நிலை உருவானால், மெல்லவும் முடியாமல், விழுங்கவும் முடியாமல் திணறும் சூழலில்

பஞ்சாங்கம் ஏப்ரல் 5 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

இந்த ரயில்கள் எல்லாம் எழும்பூர் வராது; தாம்பரத்தோடு சரி

சென்னை எழும்பூரில் நடைபெற்று வரும் மறு சீரமைப்பு பணிகள் காரணமாக இந்த மாற்றங்கள் தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளதாக‌

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மண்ணின் மணத்தை மலர வைத்த ஒடிஷா!

இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி

IPL 2026: வெற்றிகரமான தொடக்கம்!

ஐபிஎல் 2026 மார்ச்சு 28ஆம் தேதி பெங்களூருவில் ஹைதரபாத், பெங்களூரு அணிகளுக்கிடையேயான ஆட்டத்துடன் தொடங்கியது.

Entertainment News

Popular Categories