காதலிக்கு பாலியல் தொந்தரவு தந்த நபர்! ஆண் உறுப்பை அறுத்து பன்றிக்குப் போட்ட காதலன்!

Published:

man - 2026

தனது காதலியை கற்பழிக்க முயன்ற உறவினரின் ஆண் உறுப்புகளை காதலன் வெட்டி காட்டுப்பன்றிகளுக்கு இரையாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பிரேசில் நாட்டில் minas gerais மாகாணத்தில் வசித்து வருபவர் 20 வயதுள்ள பெண். இவருடைய உறவினர் 35 வயது மதிக்கத்தக்க ஒருவர் அப்பெண்ணின் வீட்டிற்கு அடிக்கடி வந்து செல்வார். அவரின் நோக்கம் அந்த இளம் பெண்ணை கற்பழிக்க வேண்டும் என்பதாகும்.

இதனை அறிந்த பெண்ணின் காதலன் தனது உறவினரை கூட்டு சேர்த்துக்கொண்டு காதலியை கற்பழிக்க முயன்ற நபரை பழிவாங்க நினைத்து கரும்பு தோட்டத்திற்கு அழைத்துள்ளார்.

அங்கு வைத்து அவர்கள் இருவரும் அந்த நபரை சரமாரியாக தாக்கி மயக்கமடைய செய்துள்ளனர்.

அதன்பின் ஆத்திரத்தில் இருந்த காதலன் அந்த நபரின் பிறப்புறுப்புகளை கத்தியால் அறுத்து காட்டு பன்றிகளுக்கு இரையாக்கி உள்ளார்.

இந்நிலையில் ரத்தவெள்ளத்தில் கடும் வழியில் இருந்த பாதிக்கப்பட்ட நபர் doutor gil alves நகராட்சி மருத்துவமனைக்கு சென்றுள்ளார். அங்கு அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து ரத்தப்போக்கை நிறுத்தியுள்ளனர்.

ALSO READ:  சோலைமலை முருகன் கோயிலில் மகா கும்பாபிஷேகம்!

அதன்பின் பிறப்புறுப்புகள் கிடைக்காததால் அதனை திரும்பவும் ஒட்ட வைக்க முடியாது என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். ஆனால் சிரமமின்றி இயற்கை உபாதைகளை கழிப்பதற்கு உரிய வழிவகை செய்ய இருப்பதாகவும் அவர்கள் கூறியுள்ளனர்.

இந்த சம்பவத்தை செய்த பெண்ணின் காதலன் மற்றும் அவருடைய உறவினரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

ஆனால் கற்பழிக்க முயன்ற நபர் மீது இதுவரை அந்தப் பெண்ணின் உறவினர்கள் யாரும் புகார் அளிக்காததால் அவர் மீது வழக்கு தொடுக்க முடியவில்லை.

Related articles

Recent articles

spot_img