December 6, 2025, 5:03 AM
24.9 C
Chennai

கொரோனா: அதிர்ச்சி செய்தியை வெளியிட்ட அமெரிக்க நோய் கட்டுப்பாடு!

corona virus
corona virus

கொரோனா தொற்றுநோயை பரப்பி வரும் SARS-CoV-2 வைரஸ், ஒருவர் மூச்சுவிடும் போது, காற்றில் பரவி நீர் துகள்களாக மற்றொருவருக்கு பரவும் என்று அமெரிக்க நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் (சி.டி.சி) ஒப்புக் கொண்டுள்ளது.

சி.டி.சி தனது பொது வழிகாட்டுதல்களை வெள்ளிக்கிழமை திருத்தி அமைத்துள்ளது. SARS-CoV-2 தொற்று நீர் துகள்களை கொரோனா பாதித்தவர் வெளிப்படுத்துவதன் மூலம் பரவுகிறது என்று குறிப்பிட்டுள்ளது.

பேசும் போது, ​​மக்களின் எச்சில் காற்றில் பரவுகிறது. அந்த நீர் துளிகளி காற்றின் மேற்பரப்பில் மிதக்கின்றன. சில நேரங்களில் காற்றில் அப்படியே இடைப்பட்டு நிற்கலாம்.

பெரிய நீர்த்துளிகள் சில நொடிகளில் இருந்து நிமிடங்களுக்குள் காற்றிலிருந்து வேகமாக கீழே விழுந்து விடும்.

அதே வேளையில், மிகச் சிறிய நீர்த்துளிகள் மற்றும் ஏரோசல் துகள்கள் சில நிமிடங்கள் முதல் சில மணி துளிகள் வரை காற்றில் இடைநிறுத்தப்படலாம்.

கொரோனா பாதித்த ஒருவரிடம் இருந்து ஆறு அடி வரை உள்ள தூரத்தில் அவரது நீர் துளிகளை மற்றொருவர் சுவாசிக்கும் போது உள்இழுக்க வாய்ப்பு உள்ளது. அப்படி இழுக்கும் போது கொரோனா வைரஸ் அவரை பாதிக்கும். ( சில சந்தர்பங்களில் 15 நிமிடங்களுக்குள் இது சாத்தியம்) எனவே காற்றில் வைரஸ் , ஆறு அடி தூரத்தில் இருந்தாலும் மக்களை கொரோனா பாதிக்கும் என்று சி.டி.சி புதிய அறிவிப்பில் கூறியுள்ளது

தி லான்செட் பத்திரிகையில் SARS-CoV-2 வைரஸ் காற்று வழியாக பரவுகிறது என்று வெளியான ஒரு மாதத்திற்குப் பிறகு திருத்தப்பட்ட அமெரிக்க சி.டி.சி யின் வழிகாட்டுதல்கள் வெளிவந்துள்ளது.

இங்கிலாந்து, அமெரிக்கா மற்றும் கனடாவைச் சேர்ந்த ஆறு நிபுணர்களின் பகுப்பாய்வு, வைரஸ் காற்றில் பரவுகிறது என்றே சொல்கின்றன

உலகளவில் கொரோனா வைரஸ் பரவியதில் இருந்தே, பல மருத்துவ விஞ்ஞானிகள் , தேசிய மற்றும் சர்வதேச அமைப்புகளின் தலைவர்களும், கோவிட் -19 வான்வழியில் பரவுவதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளதை அங்கீகரிக்குமாறு வேண்டுகோள் விடுத்தனர்

ஆரம்பத்தில் மறுப்பு தெரிவித்த உலக சுகாதார அமைப்பு ஜூலை 2020 இல் ஒப்புக் கொண்டது, மிகவும் நெரிசலான இடங்களில் கொரோனா வைரஸ் காற்றில் எஞ்சியிருப்பதற்கு சாத்தியம், அங்கு “குறுகிய தூர ஏரோசல் பரவுதலை நிராகரிக்க முடியாது” என்று தெரிவித்தது

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories