கொரோனா: அதிர்ச்சி செய்தியை வெளியிட்ட அமெரிக்க நோய் கட்டுப்பாடு!

corona virus
corona virus

கொரோனா தொற்றுநோயை பரப்பி வரும் SARS-CoV-2 வைரஸ், ஒருவர் மூச்சுவிடும் போது, காற்றில் பரவி நீர் துகள்களாக மற்றொருவருக்கு பரவும் என்று அமெரிக்க நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் (சி.டி.சி) ஒப்புக் கொண்டுள்ளது.

சி.டி.சி தனது பொது வழிகாட்டுதல்களை வெள்ளிக்கிழமை திருத்தி அமைத்துள்ளது. SARS-CoV-2 தொற்று நீர் துகள்களை கொரோனா பாதித்தவர் வெளிப்படுத்துவதன் மூலம் பரவுகிறது என்று குறிப்பிட்டுள்ளது.

பேசும் போது, ​​மக்களின் எச்சில் காற்றில் பரவுகிறது. அந்த நீர் துளிகளி காற்றின் மேற்பரப்பில் மிதக்கின்றன. சில நேரங்களில் காற்றில் அப்படியே இடைப்பட்டு நிற்கலாம்.

பெரிய நீர்த்துளிகள் சில நொடிகளில் இருந்து நிமிடங்களுக்குள் காற்றிலிருந்து வேகமாக கீழே விழுந்து விடும்.

அதே வேளையில், மிகச் சிறிய நீர்த்துளிகள் மற்றும் ஏரோசல் துகள்கள் சில நிமிடங்கள் முதல் சில மணி துளிகள் வரை காற்றில் இடைநிறுத்தப்படலாம்.

கொரோனா பாதித்த ஒருவரிடம் இருந்து ஆறு அடி வரை உள்ள தூரத்தில் அவரது நீர் துளிகளை மற்றொருவர் சுவாசிக்கும் போது உள்இழுக்க வாய்ப்பு உள்ளது. அப்படி இழுக்கும் போது கொரோனா வைரஸ் அவரை பாதிக்கும். ( சில சந்தர்பங்களில் 15 நிமிடங்களுக்குள் இது சாத்தியம்) எனவே காற்றில் வைரஸ் , ஆறு அடி தூரத்தில் இருந்தாலும் மக்களை கொரோனா பாதிக்கும் என்று சி.டி.சி புதிய அறிவிப்பில் கூறியுள்ளது

தி லான்செட் பத்திரிகையில் SARS-CoV-2 வைரஸ் காற்று வழியாக பரவுகிறது என்று வெளியான ஒரு மாதத்திற்குப் பிறகு திருத்தப்பட்ட அமெரிக்க சி.டி.சி யின் வழிகாட்டுதல்கள் வெளிவந்துள்ளது.

இங்கிலாந்து, அமெரிக்கா மற்றும் கனடாவைச் சேர்ந்த ஆறு நிபுணர்களின் பகுப்பாய்வு, வைரஸ் காற்றில் பரவுகிறது என்றே சொல்கின்றன

உலகளவில் கொரோனா வைரஸ் பரவியதில் இருந்தே, பல மருத்துவ விஞ்ஞானிகள் , தேசிய மற்றும் சர்வதேச அமைப்புகளின் தலைவர்களும், கோவிட் -19 வான்வழியில் பரவுவதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளதை அங்கீகரிக்குமாறு வேண்டுகோள் விடுத்தனர்

ஆரம்பத்தில் மறுப்பு தெரிவித்த உலக சுகாதார அமைப்பு ஜூலை 2020 இல் ஒப்புக் கொண்டது, மிகவும் நெரிசலான இடங்களில் கொரோனா வைரஸ் காற்றில் எஞ்சியிருப்பதற்கு சாத்தியம், அங்கு “குறுகிய தூர ஏரோசல் பரவுதலை நிராகரிக்க முடியாது” என்று தெரிவித்தது

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் கோலாகலம்..

உலகப் பிரசித்தி பெற்ற மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில் சித்திரை திருவிழா...

திமுக வேட்பாளர் வீட்டில் நகை கொள்ளை – வேட்பாளரின் மருமகள் உள்ளிட்ட 3 பேர் கைது…

விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் திமுக வேட்பாளர் வீட்டில் 122 சவரன் கொள்ளையடிக்கப்பட்ட...

பஞ்சாங்கம் ஏப்ரல் 28 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

யானைகள் அணிவகுப்புடன், திருச்சூர் பூரம் விழா கொண்டாட்டம்!

யானைகளின் அணிவகுப்பு.. இலஞ்சித்தார மேளம்.. திருச்சூர் பூரம் விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.

நாடு திரும்புங்க; அமெரிக்க வாழ் இந்தியர்களுக்கு ஸோஹோ ஸ்ரீதர் வேம்புவின் மடல்!

37 ஆண்டுகளுக்கு முன்பு நான் வந்தது போலவே, நீங்களும் பணமின்றி, ஆனால் பாரதத்தின் நல்ல கல்வி மற்றும் கலாச்சாரப் பாரம்பரியத்துடன் அமெரிக்காவிற்கு வந்தீர்கள்.

Topics

மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் கோலாகலம்..

உலகப் பிரசித்தி பெற்ற மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில் சித்திரை திருவிழா...

திமுக வேட்பாளர் வீட்டில் நகை கொள்ளை – வேட்பாளரின் மருமகள் உள்ளிட்ட 3 பேர் கைது…

விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் திமுக வேட்பாளர் வீட்டில் 122 சவரன் கொள்ளையடிக்கப்பட்ட...

பஞ்சாங்கம் ஏப்ரல் 28 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

யானைகள் அணிவகுப்புடன், திருச்சூர் பூரம் விழா கொண்டாட்டம்!

யானைகளின் அணிவகுப்பு.. இலஞ்சித்தார மேளம்.. திருச்சூர் பூரம் விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.

நாடு திரும்புங்க; அமெரிக்க வாழ் இந்தியர்களுக்கு ஸோஹோ ஸ்ரீதர் வேம்புவின் மடல்!

37 ஆண்டுகளுக்கு முன்பு நான் வந்தது போலவே, நீங்களும் பணமின்றி, ஆனால் பாரதத்தின் நல்ல கல்வி மற்றும் கலாச்சாரப் பாரம்பரியத்துடன் அமெரிக்காவிற்கு வந்தீர்கள்.

ஆண் நாடாளுமன்ற உறுப்பினர்களின் கோர முகம்!

பெண்கள் தங்களுக்காக போராட முடியாதவர்கள் என்றல்ல. அவர்கள் கடந்த மூன்று தசாப்தங்களாக போராடிக் கொண்டுதான் இருக்கிறார்கள். ஆனால் அவையில் 85 சதவீதத்தினர் ஆண்களாக இருப்பதால் அவர்களின் யாராவது கதவைத் திறந்து வழிவிட வேண்டும்.

பஞ்சாங்கம் ஏப்ரல் 27 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள்தொகைக் கனக்கெடுப்பு பற்றி, மனதின் குரலில் பிரதமர் மோடி!

வடகிழக்குப் பகுதி நம்மனைவருக்கும் அஷ்டலக்ஷ்மிக்குச் சமானம்.  இங்கே நிறைவாக திறன்கள் இருக்கின்றன, வடகிழக்கின் இயற்கை வனப்பு அனைவரின் கவனத்தையும் ஈர்த்துவிடும். 

Entertainment News

Popular Categories