மோசமடைந்த ‘பெண்கள் நிலை’! தாலிபான் குறித்து அச்சத்துடன் பகிர்ந்த கல்லூரி மாணவி!

thalibhan
thalibhan

தாலிபான்களின் உண்மை முகம் குறித்து 22 வயது மாணவி ஒருவர் வெளியிட்டுள்ள வீடியோ கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

ஆப்கானைத் தாலிபான்கள் முழுமையாகக் கைப்பற்றிவிட்ட நிலையில், இனிமேல் அங்கு என்ன நடக்கப் போகிறதோ என்பது தான் உலக நாடுகளின் பெரும் கவலையாக உள்ளது. ஒரு பக்கம் உயிரைக் காப்பாற்றிக்கொள்ள மக்கள் போராடும் நிலையில் மறுபக்கம் பெண்களின் பாதுகாப்பு மற்றும் உரிமைகள் என்ன ஆகப் போகிறதோ என்பதும் பெரும் அச்சமாக உள்ளது.

பல்கலைக்கழகங்களில் படித்து வரும் மாணவிகள் இனிமேல் படிப்பைக் கனவில் கூட நினைத்துப் பார்க்க முடியாதோ என்ற பெரும் அச்சத்தில் உள்ளார்கள். இந்நிலையில் காபூலில் உள்ள பல்கலைக்கழகத்தில் இறுதியாண்டு படித்து வரும் ஆயிஷா குராம் என்ற 22 வயது மாணவி ஒருவர் அதிர்ச்சி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், ”தாலிபான்கள் நாட்டை கைப்பற்றிய முதல் நாளிலேயே தங்களது ஆட்டத்தை ஆரம்பித்து விட்டார்கள். எனது வீட்டு வாசலில் ஏதோ சத்தம் கேட்கிறது என எனக்குத் தோன்றியது. ஆனால் கதவைத் திறந்து பார்க்கும் நிலையில் நான் இல்லை. அப்போது தான் எனது வீட்டு வாசலில் துப்பாக்கி சுடும் சத்தத்தையும், அலறல் சத்தத்தையும் கேட்டு என்ன நடக்கிறது என்பதை ஒளிந்து இருந்து பார்த்தேன்.

மேலும் சில திருடர்கள் தங்களைத் தாலிபான்களின் ஒரு பகுதியான முஜாயிதீன் எனக் கூறிக் கொண்டு பொதுமக்களின் பொருட்களையும், கார்களையும் திருட முயன்றனர். தாலிபான்கள் நாட்டை கைப்பற்றிய அன்றைய தினம் கல்லூரி ஆசிரியர், ஆசிரியைகள் மாணவிகளுக்கு மட்டும் குட்பை சொன்னார்கள். பெண்கள் இனி பல்கலைக்கழகம் வரக்கூடாது அல்லது ஆண் மாணவர்களுடன் சேர்ந்து பல்கலைக்கழகத்தில் இருக்கக்கூடாது என்ற தாலிபான்களின் மிரட்டலைப் பிரதிபலிப்பதாகவே அந்த குட்பை இருந்தது.

நாங்கள் பெண்களின் பாதுகாப்பிற்கும், உரிமைக்கும் முக்கியத்துவம் கொடுப்போம் என தாலிபான்கள் கூறினார்கள். ஆனால் நடப்பதைப் பார்த்தால் நிச்சயம் அப்படி இருக்கப் போவதில்லை என்பது மட்டும் தெளிவாகத் தெரிகிறது.

எங்களது எதிர்காலம் என்ன ஆகப் போகிறது என்பது குறித்த அச்சம் நிலவுகிறது. ஆனால் உலகம் எங்களைத் தனித்து விடாது என்ற நம்பிக்கையில் ஒவ்வொரு பொழுதையும் கழித்துக் கொண்டு இருக்கிறோம்” என வேதனையுடன் கூறியுள்ளார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

சபரிமலை கோயிலுக்குள் அனைத்து வயது பெண்களும் நுழையலாமா?

உலக பிரசித்தி பெற்ற கேரளாவில் உள்ள தனித்துவம் வாய்ந்த சபரிமலை சுவாமி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 25 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் ஏப்ரல் 24 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

Topics

சபரிமலை கோயிலுக்குள் அனைத்து வயது பெண்களும் நுழையலாமா?

உலக பிரசித்தி பெற்ற கேரளாவில் உள்ள தனித்துவம் வாய்ந்த சபரிமலை சுவாமி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 25 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் ஏப்ரல் 24 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

Entertainment News

Popular Categories