December 5, 2025, 10:31 PM
26.6 C
Chennai

மோசமடைந்த ‘பெண்கள் நிலை’! தாலிபான் குறித்து அச்சத்துடன் பகிர்ந்த கல்லூரி மாணவி!

thalibhan
thalibhan

தாலிபான்களின் உண்மை முகம் குறித்து 22 வயது மாணவி ஒருவர் வெளியிட்டுள்ள வீடியோ கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

ஆப்கானைத் தாலிபான்கள் முழுமையாகக் கைப்பற்றிவிட்ட நிலையில், இனிமேல் அங்கு என்ன நடக்கப் போகிறதோ என்பது தான் உலக நாடுகளின் பெரும் கவலையாக உள்ளது. ஒரு பக்கம் உயிரைக் காப்பாற்றிக்கொள்ள மக்கள் போராடும் நிலையில் மறுபக்கம் பெண்களின் பாதுகாப்பு மற்றும் உரிமைகள் என்ன ஆகப் போகிறதோ என்பதும் பெரும் அச்சமாக உள்ளது.

பல்கலைக்கழகங்களில் படித்து வரும் மாணவிகள் இனிமேல் படிப்பைக் கனவில் கூட நினைத்துப் பார்க்க முடியாதோ என்ற பெரும் அச்சத்தில் உள்ளார்கள். இந்நிலையில் காபூலில் உள்ள பல்கலைக்கழகத்தில் இறுதியாண்டு படித்து வரும் ஆயிஷா குராம் என்ற 22 வயது மாணவி ஒருவர் அதிர்ச்சி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், ”தாலிபான்கள் நாட்டை கைப்பற்றிய முதல் நாளிலேயே தங்களது ஆட்டத்தை ஆரம்பித்து விட்டார்கள். எனது வீட்டு வாசலில் ஏதோ சத்தம் கேட்கிறது என எனக்குத் தோன்றியது. ஆனால் கதவைத் திறந்து பார்க்கும் நிலையில் நான் இல்லை. அப்போது தான் எனது வீட்டு வாசலில் துப்பாக்கி சுடும் சத்தத்தையும், அலறல் சத்தத்தையும் கேட்டு என்ன நடக்கிறது என்பதை ஒளிந்து இருந்து பார்த்தேன்.

மேலும் சில திருடர்கள் தங்களைத் தாலிபான்களின் ஒரு பகுதியான முஜாயிதீன் எனக் கூறிக் கொண்டு பொதுமக்களின் பொருட்களையும், கார்களையும் திருட முயன்றனர். தாலிபான்கள் நாட்டை கைப்பற்றிய அன்றைய தினம் கல்லூரி ஆசிரியர், ஆசிரியைகள் மாணவிகளுக்கு மட்டும் குட்பை சொன்னார்கள். பெண்கள் இனி பல்கலைக்கழகம் வரக்கூடாது அல்லது ஆண் மாணவர்களுடன் சேர்ந்து பல்கலைக்கழகத்தில் இருக்கக்கூடாது என்ற தாலிபான்களின் மிரட்டலைப் பிரதிபலிப்பதாகவே அந்த குட்பை இருந்தது.

நாங்கள் பெண்களின் பாதுகாப்பிற்கும், உரிமைக்கும் முக்கியத்துவம் கொடுப்போம் என தாலிபான்கள் கூறினார்கள். ஆனால் நடப்பதைப் பார்த்தால் நிச்சயம் அப்படி இருக்கப் போவதில்லை என்பது மட்டும் தெளிவாகத் தெரிகிறது.

எங்களது எதிர்காலம் என்ன ஆகப் போகிறது என்பது குறித்த அச்சம் நிலவுகிறது. ஆனால் உலகம் எங்களைத் தனித்து விடாது என்ற நம்பிக்கையில் ஒவ்வொரு பொழுதையும் கழித்துக் கொண்டு இருக்கிறோம்” என வேதனையுடன் கூறியுள்ளார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories