எல்லைக்குள் அத்துமீறி நுழைந்தால் சுடும் அதிகாரம் கடற்படைக்கு உள்ளது: ரணில் மீண்டும் உறுதி

ranil-wickramasinge புது தில்லி: எல்லைக்குள் அத்துமீறி நுழைபவர்களை சுடும் அதிகாரம் கடற்படைக்கு உள்ளது என்று இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்க மீண்டும் உறுதிபடக் கூறியுள்ளார். இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் இலங்கை பயணத்தை முன்னிட்டு, ஆங்கில செய்தி சேனலான என்.டி.டி.வி.க்கு அவர் பேட்டி அளித்துள்ளார். அதில், “இலங்கையின் எந்த ஒரு பகுதியிலும், யாராவது எங்களது கடற்பகுதிக்குள் அத்துமீறி நுழைந்தால் அவர்களைச் சுடும் உரிமை இலங்கைக் கடற்படைக்கு உள்ளது. இது ஒன்றும் புதிதல்ல” என்று கூறியுள்ளார். முன்னதாக, பிரதமர் மோடி இலங்கைக்கு பயணம் செய்வதற்கு முன்னால், சென்னையில் இருந்து இயங்கும் செய்தி சேனலான தந்தி டிவிக்கு அளித்த பேட்டியில் ரணில் விக்ரமசிங்க, “அனுமதியின்றி என்னுடைய வீட்டுக்குள் யாரேனும் நுழைந்தால், அவர்களை நான் சுட முடியும், அதனால் அவர்கள் உயிரிழக்கலாம். நான் இதனைச் செய்ய சட்டம் அனுமதித்துள்ளது. இலங்கை கடற்பகுதியில் அத்துமீறி நுழையும் மீனவர்களைச் சுட கடற்படைக்கு அதிகாரம் உள்ளது,” என்று கூறினார். ரணீலின் இக்கருத்துக்கு தமிழகத்தில் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டதை அடுத்து, இந்திய வெளியுறவு அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜிடம், மோடி பயணம் மேற்கொள்ளவுள்ள நிலையில் இப்படி தெரிவித்திருக்கக் கூடாது என்று அவர் வருத்தம் தெரிவித்ததாக சுஷ்மா ஸ்வராஜ் நாடாளுமன்றத்தில் கூறினார். ஆனால் மீண்டும் அதே கருத்தையே ரணில் இப்போது தெரிவித்துள்ளார். விக்ரமசிங்க மேலும் கூறுகையில், இந்திய பிரதமர் மோடியின் இலங்கை பயணம் வெற்றிகரமாக அமைந்தது என்றும், இரு நாடுகளும் மீனவர் பிரச்னையை சுமூகமாகப் பேசித் தீர்க்க முயற்சித்து வருவதாகவும் கூறினார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

கமலாலயத்துக்கும் சத்தியமூர்த்தி பவனுக்கும் வேறுபாடில்லை!

முரளி சீதாராமன்1) காலையில் நயினார் நாகேந்திரன் செய்தியாளர் சந்திப்பில்:- "ஏப்ரல் 4...

அதிகாரத்தில் இல்லாததற்காக, இவர்களுக்கு நன்றிக்கடன் பட்டுள்ளேன்!

இந்த இக்கட்டான சூழ்நிலையில் ஏதாவது ஒரு விஷயத்திற்கு நாம் நன்றிக்கடன் பட்டுள்ளோம் என்றால் அது, இப்போது காங்கிரஸ் கட்சி அதிகாரத்தில் இல்லாததற்கே!

பஞ்சாங்கம் – ஏப்ரல் 1 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

‘தனி’ தொகுதிகளில் தனியா கவனித்து மனுவை தள்ளுபடி செய்யுங்க: இந்து முன்னணி வலியுறுத்தல்!

போலிச் சான்றிதழ் குறித்து உடனடியாக நடவடிக்கை எடுத்து அதனை ரத்து செய்து இந்து பட்டியலின மக்கள் உரிமைகளை பாதுகாக்க வேண்டும் என இந்துமுன்னணி வலியுறுத்துகிறது!

பங்குனி உத்திர ஆராட்டு விழாவுக்கு தயாராகிறது பம்பை!

ஆற்றின் தூய்மையைப் பாதுகாக்க, பக்தர்கள் தங்கள் ஆடைகளை ஆற்றில் வீசி எறிவதற்குத் தற்போது தடை விதிக்கப்பட்டுள்ளது.

Topics

கமலாலயத்துக்கும் சத்தியமூர்த்தி பவனுக்கும் வேறுபாடில்லை!

முரளி சீதாராமன்1) காலையில் நயினார் நாகேந்திரன் செய்தியாளர் சந்திப்பில்:- "ஏப்ரல் 4...

அதிகாரத்தில் இல்லாததற்காக, இவர்களுக்கு நன்றிக்கடன் பட்டுள்ளேன்!

இந்த இக்கட்டான சூழ்நிலையில் ஏதாவது ஒரு விஷயத்திற்கு நாம் நன்றிக்கடன் பட்டுள்ளோம் என்றால் அது, இப்போது காங்கிரஸ் கட்சி அதிகாரத்தில் இல்லாததற்கே!

பஞ்சாங்கம் – ஏப்ரல் 1 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

‘தனி’ தொகுதிகளில் தனியா கவனித்து மனுவை தள்ளுபடி செய்யுங்க: இந்து முன்னணி வலியுறுத்தல்!

போலிச் சான்றிதழ் குறித்து உடனடியாக நடவடிக்கை எடுத்து அதனை ரத்து செய்து இந்து பட்டியலின மக்கள் உரிமைகளை பாதுகாக்க வேண்டும் என இந்துமுன்னணி வலியுறுத்துகிறது!

பங்குனி உத்திர ஆராட்டு விழாவுக்கு தயாராகிறது பம்பை!

ஆற்றின் தூய்மையைப் பாதுகாக்க, பக்தர்கள் தங்கள் ஆடைகளை ஆற்றில் வீசி எறிவதற்குத் தற்போது தடை விதிக்கப்பட்டுள்ளது.

தொகுதி, வேட்பாளர் தேர்வில் அதிருப்தி: காங்கிரஸில் என்ன நடக்கிறது?

காங்கிரசை எங்க கொண்டு வந்து நிறுத்தியிருக்கீங்க பாத்தீங்களா செல்வப்பெருந்தகை? என்று கட்சியினர் குமுறும் அளவுக்கு அவரது செயல்பாடு இருக்கிறது.

பஞ்சாங்கம் மார்ச் 31 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

‘இல்லத்தரசி கூப்பன்’ நன்மையா? நிதிச்சுமையா?

சட்டமன்ற தேர்தலுக்காக தி.மு.க. கொடுத்திருக்கும் தேர்தல் வாக்குறுதிகளில் மகளிர் உரிமைத்தொகை ரூ.2000 ஆக உயர்த்தப்படும் அறிவிப்பும், ரூ.8000 இல்லத்தரசி கூப்பன்

Entertainment News

Popular Categories