May 18, 2025, 6:30 PM
32.4 C
Chennai

பிரிட்டன் ராணி எலிசபெத் மரணம்: பாரத பிரதமர் மோடி இரங்கல்!

elizebet britain

பிரிட்டனின் மகாராணியாக சுமார் 70 ஆண்டுகள் இருந்த 96 வயதான மகாராணி 2-ம் எலிசபெத் ஸ்காட்லாந்தில் நேற்றைய தினம் உடல் நலக்குறைவால் காலமானார். கிங் ஜார்ஜ் VI இறந்த பின், அவரது மகள் எலிசபெத் அலெக்சாந்திரா மேரி என்ற இயர் பெயர் கொண்ட இரண்டாம் எலிசபெத் பிப்ரவரி 6, 1952 இல் பதவியேற்றார். 16 மாதங்களுக்குப் பிறகு, அவரது முடிசூட்டு விழா ஜூன் 2, 1953 அன்று நடந்தது.

ஏப்ரல் 21, 1926 மேஃபெயாரில் பிறந்த ராணி எலிசபெத் நேற்று வரை ஆன்டிகுவா மற்றும் பார்புடா, ஆஸ்திரேலியா, பஹாமாஸ், பெலிஸ், கனடா, கிரெனடா, ஜமைக்கா, நியூசிலாந்து, பப்புவா நியூ கினியா, செயிண்ட் கிட்ஸ் மற்றும் நெவிஸ், செயிண்ட் லூசியா, செயின்ட் வின்சென்ட் மற்றும் கிரெனடைன்ஸ், சாலமன் தீவுகள், துவாலு மற்றும் பிரிட்டன் முதலிய 14 நாடுகளுக்கு ராணியாக இருந்தார்.

ராணி எலிசபெத்தின் மூத்த மகனும் தற்போதைய இளவரசுருமான சார்லஸ் பிலிப் அர்துர் ஜார்ஜ் என்ற இயற்பெயர் கொண்ட 3-ம் சார்லஸ் (73) இன்று காலை 11 மணிக்கு அதிகாரப்பூர்வமாக புனித ஜேம்ஸ் அரண்மனையில் உள்ள பிரைவி கவுன்சில் முன் புதிய மன்னராக பதவியேற்பார்.

ALSO READ:  செங்கோட்டை சிவன் கோயிலில் விவேகானந்தா கேந்திரா சார்பில் விளக்கு பூஜை!

அவருடைய இரண்டாவது மனைவி கேமில்லா தற்போது ராணியாகிறார். புதிய மன்னர் சார்லஸ் தன்னுடைய தாயாருக்கு அஞ்சலி செலுத்தும் வகையில், இங்கிலாந்து, எடின்பர்க், பெல்ஃபாஸ்ட் மற்றும் கார்டிஃப் ஆகிய இடங்களுக்கு சுற்றுப்பயணம் செய்து தனது தாயாருக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வார். ராணி இறந்த 4 நாட்களுக்குப் பிறகு, பக்கிங்ஹாம் அரண்மனையிலிருந்து வெஸ்ட்மின்ஸ்டர் மண்டபத்திற்கு ஊர்வலம் நடத்தப்படும். அங்கு அவரது உடல் வைக்கப்படும். முக்கியமான நபர்கள் முதலில் அஞ்சலி செலுத்துவர். அதனையடுத்து, பொதுமக்கள் அஞ்சலி செலுத்துவார்கள்.

இதையடுத்து, ஒன்பதாம் நாள், பிரிட்டன் அரசு மரியாதையுடன் ராணி எலிசபெத்தின் உடலுக்கு இறுதி சடங்குகள் செய்யப்படும். இறுதிச் சடங்கிற்குப் பிறகு, ராணி உடல் விண்ட்சர் கோட்டைக்கு எடுத்துச் செல்லப்படும்., அங்கு அவர் தனது கணவர் இளவரசர் பிலிப் மற்றும் அவரது தந்தை கிங் ஜார்ஜ் VI ஆகியோருக்கு அருகில் அடக்கம் செய்யப்படுவார்.

பிரிட்டன் ராணி இரண்டாம் எலிசெபத் மறைவு குறித்து பிரதமர் மோடி தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார். ‛பிரிட்டன் ராணி நம் காலத்தில் வாழ்ந்த மிகுந்த மரியாதைக்கும், நம்பிக்கைக்கும் உரியவர். தனது நாட்டுக்கும், நாட்டு மக்களுக்கும் தலை சிறந்த ராணியாக பொறுப்பேற்றிருந்தார். பொது வாழ்க்கையில் கண்ணியத்தையும், நாகரீகத்தையும் கடைப்பிடித்து வந்தார். அவருடைய மறைவு மிகுந்த வேதனை அளிக்கிறது. அவருடைய குடும்பத்தாருக்கும் , இங்கிலாந்து நாட்டு மக்களுக்கும் ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொள்கிரேறன்’ இவ்வாறு மோடி தனது இரங்கல் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

ALSO READ:  தேசத்தின் துக்க நாள்: இந்து முன்னணி கண்டனம்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 18 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குற்றாலம் பராசக்தி கல்லூரி மாணவியர் சேர்க்கை – விவரம்!

நேர்முகத்தேர்வு விவரங்களுக்கு கீழ்க்காணும் ~link 🔗~ஐ அழுத்தவும்

பெரியண்ணன் டிரம்ப்புக்கு… இந்திய தேசபக்தையின் கடிதம்!

ஏனெனில் அவருக்கு அரணாக 140 கோடியில் ஒரு சில உள்நாட்டு துரோகிகளை கழித்தால்கூட மீதமுள்ள மக்கள் உறுதுணையாக நிற்கிறோம். சத்தியம் சோதனைகளுக்கு ஆளானாலும் என்றும் தோற்றதில்லை தோற்பதுமில்லை.

வெளிவராத ரகசியங்கள்! என்ன செய்யப் போகிறது பாகிஸ்தான்?

மசூத் அஸார் குடும்பத்தினருக்கு 50,000 டாலர்கள் தந்திருக்கிறது பாகிஸ்தான். அதாவது நிவாரண நிதியாக! நம் இந்திய தாக்குதலில் பலியானவர்களுக்கு கொடுக்கப் போவதாக அறிவித்திருக்கிறார்கள்.

மாமன் பட வெளியீடு; மதுரையில் சூரியின் ரசிகர்கள் கொண்டாட்டம்!

மதுரை திருநகர் பகுதிகளில் சூரியின் அகில இந்திய தலைமை ரசிகர் மன்றம் சார்பில் பெண் ரசிகைகள் 10 பேர் பால்குடம் எடுத்து ட்ரம் செட் முழங்க ரசிகர் மன்ற

Topics

பஞ்சாங்கம் மே 18 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குற்றாலம் பராசக்தி கல்லூரி மாணவியர் சேர்க்கை – விவரம்!

நேர்முகத்தேர்வு விவரங்களுக்கு கீழ்க்காணும் ~link 🔗~ஐ அழுத்தவும்

பெரியண்ணன் டிரம்ப்புக்கு… இந்திய தேசபக்தையின் கடிதம்!

ஏனெனில் அவருக்கு அரணாக 140 கோடியில் ஒரு சில உள்நாட்டு துரோகிகளை கழித்தால்கூட மீதமுள்ள மக்கள் உறுதுணையாக நிற்கிறோம். சத்தியம் சோதனைகளுக்கு ஆளானாலும் என்றும் தோற்றதில்லை தோற்பதுமில்லை.

வெளிவராத ரகசியங்கள்! என்ன செய்யப் போகிறது பாகிஸ்தான்?

மசூத் அஸார் குடும்பத்தினருக்கு 50,000 டாலர்கள் தந்திருக்கிறது பாகிஸ்தான். அதாவது நிவாரண நிதியாக! நம் இந்திய தாக்குதலில் பலியானவர்களுக்கு கொடுக்கப் போவதாக அறிவித்திருக்கிறார்கள்.

மாமன் பட வெளியீடு; மதுரையில் சூரியின் ரசிகர்கள் கொண்டாட்டம்!

மதுரை திருநகர் பகுதிகளில் சூரியின் அகில இந்திய தலைமை ரசிகர் மன்றம் சார்பில் பெண் ரசிகைகள் 10 பேர் பால்குடம் எடுத்து ட்ரம் செட் முழங்க ரசிகர் மன்ற

பஹல்காம்: இந்தியாவைப் பெருமைப் படுத்தும் மோடி!

பல இந்தியர்கள் தமது நலன் அறியாத அப்பாவிகளாக இருந்தாலும், பல சமயங்களில் சரியான வேட்பாளர்களுக்கு ஓட்டுப் போடத் தெரியாமல் இருந்தாலும், அவர்களின் பூர்வ ஜென்ம பலன் மோடி காலத்தில் வேலை செய்கிறதோ?

‘சிங்காரவேலனே தேவா’ மூலம் நினைவில் நிற்கும் பாடலாசிரியர்!

திரைப்படப் பாடலாசிரியர் கு. மா. பாலசுப்பிரமணியம் (மே 13, 1920 – நவம்பர் 4, 1994)

Entertainment News

Popular Categories