டாக்கா: வங்க தேசத்தில் ஜமாத் இஸ்லாமி கட்சியின் துணைத் தலைவராக இருப்பவர் அப்துஸ் சுபான் (79). இவர், மார்ச் 25 – 1971ல் வங்கதேச சுதந்திரப் போராட்டத்தில், பாகிஸ்தானுக்கு ஆதரவாக செயல்பட்டு, நூற்றுக்கணக்கான அப்பாவி கிராமத்தினர், சிறுபான்மை இந்துக்கள் கொல்லப்பட்டதில் முக்கியப் பங்கு வகித்தார் என்ற குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக அவர் மீது போர்க்குற்ற வழக்கு பதிவு செய்யப்பட்டு, டாக்காவில் உள்ள 2-வது சர்வதேச போர்க்குற்ற தீர்ப்பாயம் 2-ல் ஒபைதுல் ஹஸன் முன்பு வழக்கு நடைபெற்றது. விசாரணை முடிவில், அப்துஸ் சுபான் மீது சுமத்தப்பட்ட 9 குற்றச்சாட்டுகளில் 6 குற்றச்சாட்டுகள் சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டுள்ளதாகக் கண்டறிந்த தீர்ப்பாயம், அவருக்கு மரண தண்டனை விதித்து நேற்று தீர்ப்பு வழங்கியது. இவர், போர்க்குற்ற வழக்கில் தண்டிக்கப்பட்ட 17-வது நபர் ஆவார். இந்நிலையில், சுபான் மீதான குற்றச்சாட்டுகள் ஆதாரம் அற்றவை என்று அவரது வழக்குரைஞர்கள் தெரிவித்தனர். இதனால், இந்தத் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்போவதாக அவரக்ள் கூறினர். சுபானுக்கு மரண தண்டனை விதிக்கப் பட்டு தீர்ப்பு வெளியான சில நிமிடங்களில், மர்ம நபர்கள் தீர்ப்பாயத்தின் வெளியே 3 நாட்டு வெடிகுண்டுகளை வீசி வன்முறையில் ஈடுபட்டனர். மேலும் வன்முறைச் சம்பவங்கள் நிகழலாம் என எதிர்ப்பார்க்கப்படுவதால், பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது வங்கதேச அரசு.
போர்க்குற்ற வழக்கு: வங்கதேச ஜமாத் இஸ்லாமி கட்சி தலைவருக்கு மரண தண்டனை
Published:

