ஆசிய தடகளம்: இந்தியா 5 தங்கத்துடன் பட்டியலில் மூன்றாமிடம்!

asian athlet - 2026

ஆசிய தடகளத்தில் மூன்றாம் நாள் முடிவில், இந்தியா, 5 தங்கம், 1 வெள்ளி, 3 வெண்கலம் என மொத்தம் 9 பதக்கம் பெற்று பட்டியலில் 3ஆம் இடத்தில் உள்ளது.

தாய்லாந்தில் ஆசிய தடகள சாம்பியன்ஷிப் தொடர் நடக்கிறது. இந்தியா சார்பில் 28 வீரர்கள், 26 வீராங்கனைகள் என மொத்தம் 54 பேர் பங்கேற்கின்றனர்.

பெண்களுக்கான 100 மீ., தடை ஓட்டத்தின் பைனல் நடந்தது. இந்தியா சார்பில் ஜோதி, நித்யா களமிறங்கினர். மழை காரணமாக மைதானம் ஈரமாக இருந்தது. இருப்பினும் அபாரமாக ஓடிய ஜோதி(13.09 வினாடி) முதலிடம் பிடித்து, இந்தியாவுக்கு முதல் தங்கப்பதக்கம் பெற்று தந்தார். நித்யா (13.55) நான்காவது இடம் பெற்றார்.

ஆண்களுக்கான ‘டிரிபிள் ஜம்ப்’ போட்டியில் இந்தியாவின் அப்துல்லா அபூபக்கர் களமிறங்கினார். அதிகபட்சம் 16.92 மீ., துாரம் தாண்டிய இவர், தங்கப்பதக்கம் வசப்படுத்தினார்.

ஆண்களுக்கான 1500 மீ., ஓட்டத்தில் இந்திய வீரர் அஜய் குமார் சிரோஜ் 26, 3 நிமிடம் 41.51 வினாடி நேரத்தில் ஓடி, தங்கம் கைப்பற்றினார்.

ஆசிய சாம்பியன்ஷிப்பில் 2017 (தங்கம்), 2019 (வெள்ளி), தற்போது தங்கம் என இவர் வென்ற மூன்றாவது பதக்கம் இது.

ஆண்களுக்கான ‘டெகாத்லான்’ போட்டியில் இந்தியாவின் தேஜஸ்வின் ஷங்கர் பங்கேற்றார். நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல், குண்டு எறிதல், 100, 400, 1500 மீ., ஓட்டம் உட்பட 10 போட்டியில் பங்கேற்று 7,527 புள்ளி பெற்று வெண்கலம் கைப்பற்றினார்.

பெண்களுக்கான 400 மீ., ஓட்டத்தில் இந்தியாவின் ஐஸ்வர்யா, 53.07 வினாடி நேரத்தில் வந்து, வெண்கலப் பதக்கம் கைப்பற்றினார்.

ஆண்கள் 400 மீ., ஓட்டத்தில் இந்தியாவின் அஜ்மல் (45.36 வினாடி) 4வது, ராஜேஷ் (45.67 வினாடி) 6வது இடம் பிடித்தனர். பெண்களுக்கான 10,000 மீ., நடை பந்தயத்தில் சஞ்ஜீவனி (34 நிமிடம், 04.47 வினாடி) 4வது இடம் பெற்றார்.

இதுவரை இந்தியா 3 தங்கம், 3 வெண்கலம் என மொத்தம் 6 பதக்கம் வென்றுள்ளது.

asian athlet list - 2026

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

இருதரப்பு மோதலில் எஸ்பி., சமரசம்; அமைதியாக நடைபெற்ற ஸ்வாமி ஊர்வலம்!

உசிலம்பட்டி அருகே எழுமலை அடுத்துள்ள ஆத்தங்கரைப்பட்டியில் சுமார் 400 ஆண்டுகள் பழமையான இந்து அறநிலையத்துறைக்கு

Topics

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

இருதரப்பு மோதலில் எஸ்பி., சமரசம்; அமைதியாக நடைபெற்ற ஸ்வாமி ஊர்வலம்!

உசிலம்பட்டி அருகே எழுமலை அடுத்துள்ள ஆத்தங்கரைப்பட்டியில் சுமார் 400 ஆண்டுகள் பழமையான இந்து அறநிலையத்துறைக்கு

சிவசைலநாதர் பரமகல்யாணி எழுந்தருள, மீன்பிடி திருவிழா!

ஸ்ரீ சிவசைலநாதரும் ஸ்ரீ பரமகல்யாணி அம்பாளும் மீன்பிடிக்கக் கிளம்பும் திருவிழா!

பஞ்சாங்கம் மே 2 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பக்தர்கள் திரளில் மதுரை – வைகை நதியில் இறங்கிய கள்ளழகர்!

மதுரையில் வைகை நதியில் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கி பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.

Entertainment News

Popular Categories