ஆசிய தடகளம்: இந்தியா 5 தங்கத்துடன் பட்டியலில் மூன்றாமிடம்!

asian athlet - 2026

ஆசிய தடகளத்தில் மூன்றாம் நாள் முடிவில், இந்தியா, 5 தங்கம், 1 வெள்ளி, 3 வெண்கலம் என மொத்தம் 9 பதக்கம் பெற்று பட்டியலில் 3ஆம் இடத்தில் உள்ளது.

தாய்லாந்தில் ஆசிய தடகள சாம்பியன்ஷிப் தொடர் நடக்கிறது. இந்தியா சார்பில் 28 வீரர்கள், 26 வீராங்கனைகள் என மொத்தம் 54 பேர் பங்கேற்கின்றனர்.

பெண்களுக்கான 100 மீ., தடை ஓட்டத்தின் பைனல் நடந்தது. இந்தியா சார்பில் ஜோதி, நித்யா களமிறங்கினர். மழை காரணமாக மைதானம் ஈரமாக இருந்தது. இருப்பினும் அபாரமாக ஓடிய ஜோதி(13.09 வினாடி) முதலிடம் பிடித்து, இந்தியாவுக்கு முதல் தங்கப்பதக்கம் பெற்று தந்தார். நித்யா (13.55) நான்காவது இடம் பெற்றார்.

ஆண்களுக்கான ‘டிரிபிள் ஜம்ப்’ போட்டியில் இந்தியாவின் அப்துல்லா அபூபக்கர் களமிறங்கினார். அதிகபட்சம் 16.92 மீ., துாரம் தாண்டிய இவர், தங்கப்பதக்கம் வசப்படுத்தினார்.

ஆண்களுக்கான 1500 மீ., ஓட்டத்தில் இந்திய வீரர் அஜய் குமார் சிரோஜ் 26, 3 நிமிடம் 41.51 வினாடி நேரத்தில் ஓடி, தங்கம் கைப்பற்றினார்.

ALSO READ:  IND Vs ENG T20: இங்கிலாந்தின் த்ரில் வெற்றி!

ஆசிய சாம்பியன்ஷிப்பில் 2017 (தங்கம்), 2019 (வெள்ளி), தற்போது தங்கம் என இவர் வென்ற மூன்றாவது பதக்கம் இது.

ஆண்களுக்கான ‘டெகாத்லான்’ போட்டியில் இந்தியாவின் தேஜஸ்வின் ஷங்கர் பங்கேற்றார். நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல், குண்டு எறிதல், 100, 400, 1500 மீ., ஓட்டம் உட்பட 10 போட்டியில் பங்கேற்று 7,527 புள்ளி பெற்று வெண்கலம் கைப்பற்றினார்.

பெண்களுக்கான 400 மீ., ஓட்டத்தில் இந்தியாவின் ஐஸ்வர்யா, 53.07 வினாடி நேரத்தில் வந்து, வெண்கலப் பதக்கம் கைப்பற்றினார்.

ஆண்கள் 400 மீ., ஓட்டத்தில் இந்தியாவின் அஜ்மல் (45.36 வினாடி) 4வது, ராஜேஷ் (45.67 வினாடி) 6வது இடம் பிடித்தனர். பெண்களுக்கான 10,000 மீ., நடை பந்தயத்தில் சஞ்ஜீவனி (34 நிமிடம், 04.47 வினாடி) 4வது இடம் பெற்றார்.

இதுவரை இந்தியா 3 தங்கம், 3 வெண்கலம் என மொத்தம் 6 பதக்கம் வென்றுள்ளது.

asian athlet list - 2026

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

ஒருவர், தன் இந்து மதத்தை வீட்டுக்குள் வைத்து எதற்குப் பூட்ட வேண்டும்?

ஒரு விஷயத்தை வெளியில் காட்டிக் கொள்ளமாட்டேன் என்று சொன்னால் அதை வெளியில் காட்டத் தகுந்ததாக மதிக்கவில்லை என்றுதான் அர்த்தம்.

பஞ்சாங்கம் ஜூலை 13 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் ஜூலை 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

விதிமீறல் பட்டாசு ஆலைகளின் உரிமங்களை ரத்து செய்து போலீஸார் நடவடிக்கை!

மேலும் இது போன்ற தொடர் ஆய்வுகள் நடத்தப்படும் எனவும் விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் உரிமைத்தை தற்காலிகமாக ரத்து செய்யும் நடவடிக்கை தொடரும் எனவும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சிவகாசி அச்சக அதிபர் வீட்டில் கொள்ளை; கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்த 4 பேர் கைது!

விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் அச்சக அதிபர் வீட்டில் 75 பவுன் நகையை கொள்ளையடித்த கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்து கொள்ளைக்கு உதவியதாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்!

Topics

ஒருவர், தன் இந்து மதத்தை வீட்டுக்குள் வைத்து எதற்குப் பூட்ட வேண்டும்?

ஒரு விஷயத்தை வெளியில் காட்டிக் கொள்ளமாட்டேன் என்று சொன்னால் அதை வெளியில் காட்டத் தகுந்ததாக மதிக்கவில்லை என்றுதான் அர்த்தம்.

பஞ்சாங்கம் ஜூலை 13 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் ஜூலை 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

விதிமீறல் பட்டாசு ஆலைகளின் உரிமங்களை ரத்து செய்து போலீஸார் நடவடிக்கை!

மேலும் இது போன்ற தொடர் ஆய்வுகள் நடத்தப்படும் எனவும் விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் உரிமைத்தை தற்காலிகமாக ரத்து செய்யும் நடவடிக்கை தொடரும் எனவும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சிவகாசி அச்சக அதிபர் வீட்டில் கொள்ளை; கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்த 4 பேர் கைது!

விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் அச்சக அதிபர் வீட்டில் 75 பவுன் நகையை கொள்ளையடித்த கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்து கொள்ளைக்கு உதவியதாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்!

பிரபல பின்னணி பாடகி எஸ்.ஜானகி மைசூரில் காலமானார்!

பல ஆயிரக்கணக்கான பாடல்களால் ரசிகர்களைக் கவர்ந்து இழுத்த பிரபல பின்னணிப் பாடகி எஸ். ஜானகி தமது 88வது வயதில் மைசூரில் இன்று காலமானார்.

முக்கிய அரசு விழாக்களில் ‘வந்தே மாதரம்’ பாடலே முதலில் : உள்துறை அமைச்சகம்!

இந்தியாவின் தேசியப் பாடலான 'வந்தே மாதரம்'-பாடலை இசைப்பது அல்லது பாடுவது குறித்த விரிவான வழிகாட்டுதல்களை அரசு வெளியிட்டுள்ளது.

ஆக்கிரமிப்பாளர்களுக்கே கோயில் சொத்துகளை பட்டா போடுவதா? தவெக., அரசுக்கு வலுக்கும் கண்டனங்கள்!

அரசு நிலத்தை ஆக்கிரமிப்பது சட்டவிரோதம் என்றால் கோவில் நிலத்தை ஆக்கிரமித்து அபகரிப்பதை தமிழக அரசு அனுமதிக்கலாமா?

Entertainment News

Popular Categories