2024 குடியரசு தின விழாவில் பங்கேற்க ஜோ பைடனுக்கு அழைப்பு!

new parliament buliding - 2026
#image_title

2024 ஜனவரி 26-ஆம் தேதி நடைபெறும் இந்திய குடியரசு தின விழாவில் பங்கேற்குமாறு, அமெரிக்க அதிபர் ஜோ பைடனுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருப்பதாக இந்தியாவுக்கான அமெரிக்கத் தூதர் எரிக் கார்செட்டி தெரிவித்திருக்கிறார்.

இந்தியாவில் நடைபெறும் குடியரசு தின அணிவகுப்பில் பங்கேற்க, உலக நாடுகளின் தலைவர்களை அழைப்பது வழக்கமாக இருந்து வருகிறது. அந்த வகையில், கடந்த 2015-ம் ஆண்டு அமெரிக்க அதிபராக இருந்த பராக் ஒபாமா அழைக்கப்பட்டிருந்தார்.

அதேபோல, இந்தாண்டு குடியரசு தின விழா அணிவகுப்பில் எகிப்து அதிபர் அப்தெல் பத்தாஹ் எல் சிசி பங்கேற்றார். இதைத் தொடர்ந்து, வரும் 2024 ஜனவரி 26-ம் தேதி நடைபெறும் குடியரசு தின விழா அணிவகுப்பில் பங்கேற்க, அமெரிக்க அதிபர் ஜோ பைடனுகக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருக்கிறது. இத்தகவலை, இந்தியாவுக்கான அமெரிக்கத் தூதர் எரிக் கார்செட்டி தெரிவித்திருக்கிறார்.

இதுகுறித்து எரிக் கார்செட்டி கூறுகையில், “இந்தியாவில் 2024 ஜனவரி மாதம் நடைபெறும் குடியரசு தின விழா அணிவகுப்பில் கலந்துகொள்ளுமாறு அமெரிக்க அதிபர் ஜோ பைடனுக்கு, இந்திய பிரதமர் நரேந்திர மோடி அழைப்பு விடுத்திருக்கிறார்.

இதன் மூலம், இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான நெருக்கமான மற்றும் நீடித்த கூட்டாண்மையை மீண்டும் உறுதிப்படுத்தி இருக்கிறார். 2023 ஜூன் மாதம் பிரதமர் மோடியின் வரலாற்றுச் சிறப்புமிக்க வாஷிங்டன் பயணத்தின் சாதனைகளை செயல்படுத்துவதற்கான கணிசமான முன்னேற்றத்திற்கு தலைவர்கள் தங்கள் பாராட்டுகளை தெரிவித்தனர்” என்று தெரிவித்திருக்கிறார்.

சமீபத்தில் நடந்து முடிந்த இந்தியா தலைமையிலான ஜி20 உச்சிமாநாட்டில் ஜோ பைடன் கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது. அப்போது, இருதரப்பு பேச்சுவார்த்தையின் மூலம் இந்தியாவும் அமெரிக்காவும் 7ஆவது மற்றும் கடைசியாக நிலுவையில் இருந்த உலக வர்த்தக அமைப்பின் தகராறையும் தீர்த்துக் கொண்டன. பிரதமர் மோடியின் அமெரிக்க அரசு பயணத்தின்போது 6 பிரச்னைகள் தீர்க்கப்பட்டன.

மேலும், நம்பிக்கை மற்றும் பரஸ்பர புரிதலின் அடிப்படையில் நமது பன்முக உலகளாவிய நிகழ்ச்சி நிரலின் அனைத்து பரிமாணங்களிலும் இந்தியா-அமெரிக்க மூலோபாய கூட்டாண்மையை மாற்றும் பணியைத் தொடர இரு தலைவர்களும் தங்கள் அரசாங்கங்களுக்கு அழைப்பு விடுத்தது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

Topics

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

அரசியல்வாதிகள் போல் செயல்படும் அரசு அதிகாரிகள்: இந்து முன்னணி கண்டனம்!

எனவே அரசியல் சாசன சட்டத்தை மதித்து மக்கள் நலனை கருத்தில் கொண்டு அரசு அதிகாரிகள் செயல்பட வேண்டும் என்று இந்துமுன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

தமிழகத்தில் பெட்ரோல் டீசலுக்கு தட்டுப்பாடா? உண்மை என்ன?

தமிழ்நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் தடையின்றி தொடர்ந்து கிடைக்கும் என்பதை மீண்டும் உறுதி செய்கிறது.

Entertainment News

Popular Categories