February 16, 2025, 8:08 PM
28 C
Chennai

உக்ரைனில் பிரதமர் மோடி! உலகை ஆச்சரியப்படுத்திய தருணம்!

#image_title

30 ஆண்டுகள் கழித்து உக்ரைன் சென்றுள்ள முதல் பாரதப் பிரமதர் என்ற பெருமையை பிரதமர் மோடி பெற்றுள்ளார்! இந்த முறை, தனது ஐரோப்பிய பயணத்தில், போலந்து, பின் போரினால் பாதிக்கப்பட்டுள்ள உக்ரைன் ஆகிய நாடுகளுக்கும் விஜயம் செய்தார் பிரதமர் மோடி. 

உக்ரைன் தலைநகர் கீவ் பகுதியில் உள்ள அதிபர் மாளிகையில் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியுடன் பிரதமர் மோடி சந்தித்துப் பேசினார். உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியின் தோளில் கை போட்டபடி, தனது அன்பை பிரதமர் மோடி வெளிப்படுத்தினார். இது உலகின் கவனத்தைக் கவர்ந்திருந்தது.

அரசு முறை பயணமாக உக்ரைன் சென்றுள்ள பிரதமர் மோடி, கீவ் நகரில் உள்ள மகாத்மா காந்தி சிலைக்கு முதலில் மலர்தூவி மரியாதை செலுத்தினார். பிறகு, போரில் உயிரிழந்த குழந்தைகளுக்கு பிரதமர் மோடி, உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி ஆகியோர் அஞ்சலி செலுத்தினார்கள். பின்னர் போரினால் ஏற்பட்டுள்ள பேரழிவுகளைக் குறிப்பிட்டு, ரஷ்யாவுடனான போரை பேச்சுவார்த்தை மூலம் முடிவுக்குக் கொண்டு வருவது குறித்து இரு நாட்டு தலைவர்களும் பேசியதாகத் தெரிகிறது.

உலக நாடுகளுக்கு பிரதமர் மோடி பயணிப்பது எப்போதுமே அதிக முக்கியத்துவம் கொண்டு உன்னிப்பாகப் பார்க்கப்படும். அவர் தங்கள் நாடுகளுக்கு வர வேண்டும் என்ற ஆவலில், உலக நாடுகள் பலவும் ஆர்வமுடன் அழைப்பு விடுத்த வண்ணம் உள்ளன.

பிரதமர் மோடியின் முக்கியத்துவம் வாய்ந்த வெளிநாட்டு பயணங்களில் தற்போது ரஷ்யாவுக்கு அடுத்தபடியாக, உலக நாடுகளின் பார்வையில் உற்று நோக்கப்படுவது உக்ரைன் பயணம்! போரினால் சகஜ நிலையில் இல்லாமல் தத்தளித்து வரும் அந்நாட்டுக்கு பிரதமர் மோடி இன்று பயணம் செய்தார். 

வழக்கமாக மேற்கொள்ளும் விமான பயணமாக இல்லாமல், இம்முறை ரயிலில் உக்ரைன் தலைநகர் கீவுக்கு பயணித்தார் பிரதமர் மோடி. இதற்காக அவருக்கு என சிறப்பு ரயில் ஒன்றும் தேர்வு செய்யப்பட்டிருந்தது. Force One எனப் பெயர் கொண்ட அந்த ரயிலில் பாதுகாப்பு வசதிகள் பல உண்டு. சிறந்த தொழில்நுட்ப வசதிகளுடன்,  அதிக சொகுசு வசதிகளும் கொண்ட ரயிலாக Force One உள்ளது.  

Force One ரயிலில் பிரதமர் மோடிக்கு முன்பாக, அமெரிக்க அதிபர் ஜோ பைடன், பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான், ஜெர்மனி பிரதமர் ஷோல்ஸ் ஆகியோர் உக்ரைன் சென்றுள்ளனர். சுற்றுலா பயணிகளுக்கு என்றே 10 ஆண்டுக்கு முன்பு இந்த ரயில் உருவாக்கப்பட்டது.  அதன் பின்னர் போர்க்கள பூமியாக உக்ரைன் நாடு மாறிய நிலையில், அங்கு வி.வி.ஐ.பி.க்கள் செல்வதற்காக பயன்படுத்தப்படும் ரயிலாக மாறிவிட்டது!

உக்ரைனில் இரு தரப்பு உறவுகள் குறித்தும் விவாதிக்கப்பட்டது. போரினால் பாதிக்கப்பட்டுள்ள உக்ரைனில் இந்தியா சார்பில் மருத்துவ உதவிகள் வழங்கப்பட்டன. இதனை பிரதமர் மோடி உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியிடம் ஒப்படைத்தார்.

உக்ரைனில் கால் பதித்து இறங்கிய தொடக்கம் முதலே அந்நாட்டின் அதிபர் ஜெலன்ஸ்கியுடன் நெருக்கம் காட்டி தோளில் கைபோட்டபடி, வருத்தங்களையும் பகிர்ந்து கொண்டு, சமாதானப் பேச்சுகளைத் தொடங்கும்படி அவர் உக்ரைன் அதிபரிடம் வலியுறுத்தியதாகத் தெரிகிறது. அதனால் தான் காந்தி சிலைக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தி, அடுத்து போரினால் உயிரிழந்த குழந்தைகளின் நினைவு இடத்துக்குச் சென்று மலரஞ்சலி செலுத்தினார் மோடி.

பிரதமர் மோடி உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியுடன் நெருக்கம் காட்டியுள்ள படங்கள் சமூகத் தளங்களில் அதிகம் பகிரப்பட்டன. இதனிடையே பிரதமர் மோடி உக்ரைனில் இருப்பதால், ரஷ்யா தனது தாக்குதல்களை இன்று நிறுத்தி வைத்தது.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

திருப்பரன் குன்றத்துக்காக குரல் கொடுங்க! மதுரை வந்த பவன் கல்யாணிடம் ‘கோரிக்கை’!

எனது நீண்ட ஆண்டு கனவு மீனாட்சியம்மன் கோவிலில் தரிசனம் செய்ய வேண்டும் என்பது, இப்போது நிறைவேறி இருக்கிறது என்று செய்தியாளர்களிடம்

பஞ்சாங்கம் பிப்.16 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

நல்லதங்காள் கோயில் சிலை உடைப்பு வழக்கை சிபிசிஐடி.,க்கு மாற்றக் கோரி கருப்புக் கொடி ஏற்றி ஆர்ப்பாட்டம்!

நல்லதங்காள் கோயில் சிலை உடைப்பு வழக்கை சி பி சி ஐ டி க்கு மாற்றக்கோரி கிராமத்தினர் கருப்புக் கொடி ஏற்றி ஆர்ப்பாட்டம்

பந்தளம் ஐயப்பன் மாசி உத்திர அவதார நன்னாள் கோலாகலம்!

கேரளத்தில் பிரசித்தி பெற்ற பந்தளம் வலிய கோயிக்கல் ஐயப்பன் கோயிலில் மாசி உத்திரமான இன்று, சுவாமி ஐயப்பனின் ஜன்ம தினமாகக் கொண்டாடப்படுகிறது.

Astro around Indian Stock Market and our future generation!

Indian Stock Market : For the consecutive 8th session Indian markets are in negative barring one or two of flat closing.

Topics

திருப்பரன் குன்றத்துக்காக குரல் கொடுங்க! மதுரை வந்த பவன் கல்யாணிடம் ‘கோரிக்கை’!

எனது நீண்ட ஆண்டு கனவு மீனாட்சியம்மன் கோவிலில் தரிசனம் செய்ய வேண்டும் என்பது, இப்போது நிறைவேறி இருக்கிறது என்று செய்தியாளர்களிடம்

பஞ்சாங்கம் பிப்.16 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

நல்லதங்காள் கோயில் சிலை உடைப்பு வழக்கை சிபிசிஐடி.,க்கு மாற்றக் கோரி கருப்புக் கொடி ஏற்றி ஆர்ப்பாட்டம்!

நல்லதங்காள் கோயில் சிலை உடைப்பு வழக்கை சி பி சி ஐ டி க்கு மாற்றக்கோரி கிராமத்தினர் கருப்புக் கொடி ஏற்றி ஆர்ப்பாட்டம்

பந்தளம் ஐயப்பன் மாசி உத்திர அவதார நன்னாள் கோலாகலம்!

கேரளத்தில் பிரசித்தி பெற்ற பந்தளம் வலிய கோயிக்கல் ஐயப்பன் கோயிலில் மாசி உத்திரமான இன்று, சுவாமி ஐயப்பனின் ஜன்ம தினமாகக் கொண்டாடப்படுகிறது.

Astro around Indian Stock Market and our future generation!

Indian Stock Market : For the consecutive 8th session Indian markets are in negative barring one or two of flat closing.

பஞ்சாங்கம் பிப்.15 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

ஒப்புமை இல்லா உயர்வு! பட்டொளி வீசும் பாரதத்தின் புகழ்!

அங்கு பிரச்சனையை உருவாக்கிய அமெரிக்காவையே இப்பொழுது அங்கு இருந்து விலகிக் கொள்கிறோம் என்று இப்போதைய அமெரிக்க அதிபர் ட்ரம்பை வைத்து அறிவித்து

திரிச்சி பேசிய சிவா! திருச்சி அடிச்ச நிர்மலா சீதாராமன்!

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கும், திமுக எம்.பி திருச்சி சிவாவுக்கும் இடையே வார்த்தை மோதலால் நாடளுமன்றத்தில் பரபரப்பு ஏற்பட்டது. 

Entertainment News

Popular Categories