January 25, 2025, 1:02 AM
24.9 C
Chennai

உலக வரலாற்றில் திருப்புமுனை: வட கொரிய, தென் கொரிய தலைவர்களின் சந்திப்பும் பேச்சுவார்த்தையும்!

உலக வரலாற்றில் திருப்புமுனையாக அமைந்த சந்திப்பு…

கொரிய தீபகற்பத்தில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த வட கொரியா, தென் கொரியா இரு நாட்டுத் தலைவர்கள் இடையிலான உச்சி மாநாடு இன்று தொடங்கியது. கொரியப் போர் 1953-ஆம் ஆண்டு முடிந்த பின்னரும் வட கொரியா, தென்கொரியா இடையே பல ஆண்டுகளாக பனிப் போர் நீடித்து வந்தது. வடகொரியா தொடர் ஆணு ஆயுத சோதனை நடத்தி வந்ததால், அண்மைக்காலமாக இரு நாடுகளுக்கும் இடையே மேலும் பதற்றம் அதிகரித்து வந்தது.

இந்நிலையில் அண்மையில் தென்கொரியாவில் நடந்த குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள், புதிய திருப்பத்தை ஏற்படுத்தியது. அணு ஆயுத சோதனைகளால் தென்கொரியாவை மிரட்டி வந்த வடகொரியா இறங்கி வந்தது. தென்கொரியாவுடன் இணக்கமான போக்கை கடைப்பிடிக்க முன்வந்தது. தொடர்ந்து அணு ஆயுத திட்டங்களை கைவிடுவதாக அறிவித்தது. இதை அடுத்து இரு நாடுகளின் உயர்மட்ட தூதுக் குழுவினர் சந்தித்து பேச்சு வார்த்தை நடத்தினர்.  தொடர்ந்து இரு நாடுகள் இடையேயான பனிப்போர்ச் சூழல் கொஞ்சம் கொஞ்சமாக விலகத் தொடங்கியது.

ALSO READ:  வைகுண்ட ஏகாதசி விழா; ஸ்ரீரங்கம் உள்ளிட்ட தலங்களில் பரமபதவாசல் திறப்பு!

இந்நிலையில், வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஒரு திருப்புமுனை நிகழ்வாக வடகொரியாவின் தலைவர் கிம் ஜாங் அன்னும், தென் கொரியாவின் அதிபர் மூன் ஜே இன்னும் இணைந்து உச்சி மாநாட்டில் சந்தித்துப் பேச முடிவானது. இதற்காக வடகொரிய தலைவர் கிம் ஜாங் அன் தென்கொரியா சென்றார். அவருடன் 9 பேர் அடங்கிய உயர்மட்டக் குழுவினரும் சென்றனர்.

இந்நிலையில் திட்டமிட்டபடி இரு தலைவர்கள் பங்கேற்கும் உச்சி மாநாடு இன்று தொடங்கியது. இரு நாடுகளின் எல்லையை ஒட்டி தென்கொரிய பகுதியில் உள்ள பன்முஞ்சோமில் நடைபெற்ற இந்த மாநாட்டின் துவக்கத்தில், இரு நாட்டு தலைவர்களும் ஒருவரையொருவர் கைகுலுக்கி பரஸ்பரம் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டனர். இது இரு நாடுகளுக்கிடையிலான நட்புறவின் புதிய தொடக்கமாக அமைந்தது.

இந்த மாநாட்டில் எடுக்கப்படும் தீர்மானம், இரு நாடுகள் இடையேயான கொரியப் போரை முறைப்படி முடிவுக்குக் கொண்டு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. கொரியப் போர் முடிந்த பின்னர் வடகொரிய தலைவர் ஒருவர், தென்கொரியாவுக்கு செல்வது இதுவே முதல் முறை!

ALSO READ:  ஃபெங்கல் புயல்: வட தமிழகத்தில் கன மழை! எச்சரிக்கை நடவடிக்கைகள்!

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜன.25 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

டங்க்ஸ்டன் திட்டத்தை வரவிடாமல் செய்ததில்… யாருக்கு வெற்றி?!

டங்க்ஸ்டன் திட்டத்தை வரவிடாமல் தடுத்ததில் யாருக்கு முழு வெற்றி போகவேண்டும் என்று பெரும் கூத்து நடந்துகொண்டிருக்கிறது.

திருப்பரங்குன்றத்தில் பாஜக., எம்.எல்.ஏ., இந்து முன்னணி தலைவர் ஆய்வு!

இந்துமுன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம், பாஜக சட்டமன்ற குழு தலைவர் திருநெல்வேலி சட்டமன்ற உறுப்பினர் நயினார்நாகேந்திரன் ஆகியோருடன்

தினசரி பெரியவா தியானம்: நூல் பெற..!

ரா. கணபதி அண்ணா, மகா பெரியவாளின் கருத்துகளைத் தொகுத்து அவற்றை தெய்வத்தின் குரல் என்று ஏழு பகுதிகள் அடங்கிய நூல் தொகுப்பாக வெளியிட்டுள்ளதை அனைவரும் அறிவோம்.

சிவபதம் – ‘சிதம்பரம் நடராஜ கீர்த்தனைகள்’ நூல் வெளியீடு!

ஆக, ஆக… இப்பணி, தில்லையம்பலத்தான் திருவடிக்கு, இந்த ஸ்ரீராமானுஜ தாஸன் செய்த சிறுதொண்டு!