ஃபேஸ்புக் தகவல் திருட்டு: மூடப்பட்டது கேம்பிரிட்ஜ் அனாலிட்டிகா

cambridgeanalytica1 - 2026ஃபேஸ்புக்கிலிருந்து பயனாளர்களின் தகவல்களைத் திருடிய கேம்பிரிட்ஜ் அனாலிட்டிகா நிறுவனம் திடீரென மூடப்பட்டுள்ளது. அதன் தாய் நிறுவனமான பிரிட்டனைச் சேர்ந்த எஸ்.சி.எல். எலெக்சன்ஸ் என்ற நிறுவனமும் மூடப்பட்டு விட்டது. தங்கள் ஏராளமான வாடிக்கையாளர்களையும் வர்த்தகத்தையும் இழந்து விட்டதாக அந்த நிறுவனங்கள் விளக்கமளித்துள்ளன.

2016 அமெரிக்க தேர்தலில் ட்ரம்ப் வெற்றி பெற்றதை அடுத்து பெரும் சர்ச்சை வெடித்தது. அமெரிக்க தேர்தலில் டொனால்டு ட்ரம்பிற்கு ஆதரவாக சமூக வலைதளத்தில் பிரசாரத்தை மேற்கொள்ள பெருந்தொகையில் ஒப்பந்தம் செய்யப்பட்டு பிரிட்டனை சேர்ந்த கேம்பிரிட்ஜ் அனாலிட்டிகா என்ற நிறுவனம் பணியமர்த்தப்பட்டது. ஃபேஸ்புக், ட்வீட்டர் போன்ற சமூகவலைதளங்களில், ட்ரம்ப் குறித்த தகவல்களை பரப்புவதற்காகவும், அவருக்கு ஆதரவான கருத்துக்களை கொண்டு சேர்க்கவும் பணிகளை இந்நிறுவனம் மேற்கொண்டது.

அமெரிக்க அதிபர் தேர்தலின் போது டொனால்ட் ட்ரம்புக்காக பணியாற்றிய கேம்பிரிட்ஜ் அனாலிட்டிகா என்ற இணைய நிறுவனம், சுமார் 5 கோடி அமெரிக்கர்களின் பேஸ்புக் விவரங்களை திருடியதாக செய்தி வெளியாகியது. சேனல் 4 செய்தி நிறுவனம் நடத்திய கள ஆய்வில் இந்த அதிர்ச்சி சம்பவம் தெரியவந்துள்ளது.

ALSO READ:  இருதரப்பு மோதலில் எஸ்பி., சமரசம்; அமைதியாக நடைபெற்ற ஸ்வாமி ஊர்வலம்!

இந்நிறுவனம் ஐரோப்பிய யூனியனில் இருந்து பிரிட்டன் வெளியேறுவது தொடர்பாக நடத்தப்பட்ட தேர்தலிலும் தன்னுடைய கைவரிசையை காட்டியதாக தெரிகிறது. விதிமுறைகளை மீறி தகவல்களை தவறாக பயன்படுத்தியதாக கூறி கேம்பிரிட்ஜ் அனாலிடிகா நிறுவனத்துடனான வர்த்தக உறவை பேஸ்புக் நிறுவனம் துண்டித்துள்ளது.

இந்நிலையில், ஃபேஸ்புக்கை டெலிட் செய்ய வேண்டிய தருணம் வந்து விட்டதாக வாட்ஸ் ஆப் செயலியின் இணை நிறுவனர் பிரையன் ஆக்டன் தெரிவித்திருந்தார். கேம்பிரிட்ஜ் அனாலிட்டிகா நிறுவனம் நைஜீரியா, கென்யா, செக் குடியரசு மற்றும் அர்ஜெண்டினா, இந்தியா என உலக முழுவதும் நடைபெற்ற 200க்கும் அதிகமான தேர்தல்களில் இந்நிறுவனம் பணியாற்றி உள்ளதாக தெரிவித்து உள்ளது.

கடந்த 2010 ஆண்டு பீகார் மாநில சட்டசபைத் தேர்தலில் இந்திய அரசியல் கட்சி அல்லது கட்சிகளுக்காக பணியாற்றியதாக கேம்பிரிட்ஜ் அனாலிட்டிகா அதனுடைய இணையதளத்தில் தெரிவித்து உள்ளது. தேர்தலில் பாஜக கூட்டணியுடன் இணைந்த ஐக்கிய ஜனதா தளம் கட்சி வெற்றிப்பெற்றது. இவ்விவகாரம் தொடர்பான தகவல்கள் வெளியாகியது

இந்திய தேர்தல்களிலும் தன்னுடைய உத்திகளை கேக்பிரிட்ஜ் அனாலிட்டிகா பயன்பத்தியதா என்ற மில்லியன் டாலர் கேள்வியை அனைவரது மத்தியிலும் எழ செய்து உள்ளது. இந்திய அரசியல் கட்சிகளுக்கு சார்பாக அந்நிறுவனம் பயன்படுத்தியதா என்பது உறுதிசெய்யப்படாத நிலையில் உள்ளது.

ALSO READ:  நீட்டிப்பு பெற்ற நெல்லை- மேட்டுப்பாளையம் ரயில்!

அந்நிறுவனம் லண்டனில் உள்ள எஸ்சிஎல் குரூப்புடன் தொடர்பில் உள்ளதாக தெரிவித்து உள்ளது. ஓபிஐ நிறுவனத்தின் இணையதளத்தில் பாஜக, காங்கிரஸ் மற்றும் ஐக்கிய ஜனதா தளம் கட்சிகள் தங்களுடைய வாடிக்கையாளர்கள் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதனிடையே கேம்பிரிட்ஜ் அனாலிடிகா நிறுவனத்திற்கும் காங்கிரஸ் கட்சிக்கும் தொடர்பு இருப்பதாக ரவிசங்கர் பிரசாத் குற்றம் சாட்டினார்.

அனைவரின் கருத்து சுதந்திரம், ஊடக சுதந்திரம், தங்களது கருத்துக்களை சமூக வலைதளங்களில் பகிர்வதையும் இந்திய அரசு மதிக்கிறது. ஆனால், தேர்தல்களில் பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்கள் மூக்கை நுழைக்க நினைத்தால் அதற்கு கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் கூறினார்.

காங்கிரஸ் கட்சியின் ஐடி அணியின் தலைவர் திவ்யா, இதற்கு மறுப்பு தெரிவித்துள்ளார்.கேம்பிரிட்ஜ் அனாலிடிகாவின் சேவையை ஒருபோதும் பயன்படுத்தியதில்லை என்றும், பாஜகவிற்கு சேவை செய்ததாகத்தான் கேம்பிரிட்ஜ் அனாலிடிகாவின் இணைய தள பக்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார் திவ்யா.

இதேபோல காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர் ரந்தீப் சுர்ஜீவாலாவும் அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் கருத்துக்கு கடும் கண்டனத்தை பதிவு செய்துள்ளார். பாஜக போலியான செய்திகள் மற்றும் போலியான அறிக்கைகளை வெளியிடுவது வழக்கம். இதுவும் அதுபோல தான் தோன்றுகின்றது. போலியான செய்தியாளர்கள் சந்திப்பு, போலியான அறிக்கைகள் போலியான நிகழ்ச்சி நிரல் ஆகியவற்றை பாஜக தினந்தோறும் நடத்தி வருகிறது.

ALSO READ:  திருப்பரங்குன்றம் மலை மீது தொழுகைக்குச் சென்றவர்கள் போலீஸாருடன் வாக்குவாதம்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூன் 4 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – ஜூன் 3 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

தாமிரபரணிக் கரை ஆலயத்தில்… வழிபாட்டில் திருவள்ளுவர்!

தெய்வத் தமிழ் வளர்த்த நம் நெல்லையம்பதியில் தாமிரபரணிக் கரை சிவாலயம் ஒன்று திருவள்ளுவரை தெய்வத்தின் வரிசையில் தன்னுள் தாங்கியுள்ளது...

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் வைகாசி தேரோட்டம் கோலாகலம்!

ஜெனகை மாரியம்மன் கோவில் அர்ச்சகர் சண்முகவேல் தலைமையில் அர்ச்சகர்கள் பூஜைகள் செய்தனர் வழிநெடுகிலும் பொதுமக்கள் தேங்காய் உடைத்து ஜெனகை மாரியம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் ஜூன் 4 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – ஜூன் 3 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

தாமிரபரணிக் கரை ஆலயத்தில்… வழிபாட்டில் திருவள்ளுவர்!

தெய்வத் தமிழ் வளர்த்த நம் நெல்லையம்பதியில் தாமிரபரணிக் கரை சிவாலயம் ஒன்று திருவள்ளுவரை தெய்வத்தின் வரிசையில் தன்னுள் தாங்கியுள்ளது...

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் வைகாசி தேரோட்டம் கோலாகலம்!

ஜெனகை மாரியம்மன் கோவில் அர்ச்சகர் சண்முகவேல் தலைமையில் அர்ச்சகர்கள் பூஜைகள் செய்தனர் வழிநெடுகிலும் பொதுமக்கள் தேங்காய் உடைத்து ஜெனகை மாரியம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

வங்கத் தீர்ப்பு: இந்திய அரசியலில் நிலநடுக்கம்!

நேற்று எனக்கு ஒரு தகவல் கூறப்பட்டது. 'இண்டி' கூட்டணியில் உள்ள எந்தக் கட்சித் தலைவர்களும் மம்தா பானர்ஜியின் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை என்று கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு இதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் அது இனி வெளிப்படவிருக்கும் நிகழ்வுகளுக்கான ஒரு முன்னோட்டம் மட்டுமே.

Entertainment News

Popular Categories