January 25, 2025, 5:05 PM
29 C
Chennai

நில நடுக்கத்தால் எவரெஸ்ட் சிகரம் சுருங்கியுள்ளது: செயற்கைக்கோள் தகவல்

காத்மாண்டு: நேபாள தலைநகர் காட்மாண்டு அருகே கடந்த ஏப்.25 சனிக்கிழமை ஏற்பட்ட நிலநடுக்கம் நேபாளத்தையே உலுக்கிவிட்டது. கடந்த 80 ஆண்டுகளில் இல்லாத பேரழிவைச் சந்தித்துள்ளது நேபாளம். அங்கு இதற்கு முன்பும் பல நிலநடுக்கங்கள் ஏற்பட்டுள்ளன. ஆனால் தற்போது உலகின் மிக உயரமான இமயமலையின் எவரெஸ்ட் சிகரம் அருகே நிலநடுக்கம் உருவாகியுள்ளது. பூமியின் மிகப்பெரிய 2 ராட்சத நிலத்தட்டுகள் ஒன்றுடன் ஒன்று அதிவேகமாக மோதிக் கொண்டதால் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம், 80 ஆண்டுகளில் ஏற்கெனவே உருவான நிலநடுக்கங்களை விட மிகப்பெரியதாகும். இந்த பூகம்பம் 20 அணுகுண்டுகள் வெடித்ததற்கு சமம் என தெரிவித்துள்ளனர் நிபுணர்கள். ஜப்பானின் ஹிரோஷிமா நகரில் வீசிய அணுகுண்டைவிட சக்தி வாய்ந்ததாக இது கருதப்படுகிறது. இந்நிலையில் நிலநடுக்கத்தால் எவரெஸ்ட் சிகரம் சுருங்கியுள்ளது தெரிய வந்துள்ளது. ஐரோப்பாவைச் சேர்ந்த சென்டினல்- 1ஏ ராடார் செயற்கைக்கோள் கடந்த புதன்கிழமை நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட நேபாளத்தின் பகுதி வழியாகச் சென்றபோது எவரெஸ்ட் சிகரத்தின் அளவு 2.8 செ.மீ., குறைந்துள்ளதை செயற்கைக்கோள் படம் பிடித்துள்ளது. இந்த செயற்கைக்கோள் தகவலை விஞ்ஞானிகள் குழு ஆய்வு செய்து தனது அறிக்கையை இன்னும் சில வாரங்களில் அளிக்கும் என்று தெரிவித்துள்ளது.

ALSO READ:  உலக சாம்பியன் தொம்மராஜு குகேஷ்

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

டங்ஸ்டன் அரசியல்; ஸ்டாலின் கருத்துக்கு ராம சீனிவாசன் பதிலடி!

டங்ஸ்டன் திட்டத்தை அரசியலாக்க விரும்பவில்லை அனைத்துக் கட்சியினருமே போராடி இருக்கின்றனர் என்று

பஞ்சாங்கம் ஜன.25 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

டங்க்ஸ்டன் திட்டத்தை வரவிடாமல் செய்ததில்… யாருக்கு வெற்றி?!

டங்க்ஸ்டன் திட்டத்தை வரவிடாமல் தடுத்ததில் யாருக்கு முழு வெற்றி போகவேண்டும் என்று பெரும் கூத்து நடந்துகொண்டிருக்கிறது.

திருப்பரங்குன்றத்தில் பாஜக., எம்.எல்.ஏ., இந்து முன்னணி தலைவர் ஆய்வு!

இந்துமுன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம், பாஜக சட்டமன்ற குழு தலைவர் திருநெல்வேலி சட்டமன்ற உறுப்பினர் நயினார்நாகேந்திரன் ஆகியோருடன்

தினசரி பெரியவா தியானம்: நூல் பெற..!

ரா. கணபதி அண்ணா, மகா பெரியவாளின் கருத்துகளைத் தொகுத்து அவற்றை தெய்வத்தின் குரல் என்று ஏழு பகுதிகள் அடங்கிய நூல் தொகுப்பாக வெளியிட்டுள்ளதை அனைவரும் அறிவோம்.