ஆபாசப் படத்தில் நடித்த ஆசிரியை: பணிநீக்கம் செய்த பள்ளி நிர்வாகம்

Published:

sex-video-teacherசெக் குடியரசு நாட்டில், ஆசிரியை ஒருவரின் ஆபாசப் படம் இணைய தளத்தில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது. பெற்றோர் கொடுத்த புகாரில் அந்த ஆசிரியை பள்ளி நிர்வாகத்தால் பணி நீக்கம் செய்யப்பட்டார். 1d8529323aa9b6667932605a4e60eb83 - 2026 செக் குடியரசு நாட்டின் செஸ்கா லிப்பா பகுதியில் உள்ள பள்ளி ஒன்றில் ஆசிரியையாகப் பணியாற்றியவர் லூசி. 35 வயதான இவர், ஆண் ஒருவருடன் ஆபாசப் படத்தில் நடித்த 40 நிமிட காட்சி இணைய தளத்தில் வெளியானது. அந்த வீடியோவில் திடகாத்திரமான இளைஞருக்கு எண்ணெய் தேய்த்துவிட்டு அவருடன் லூசி ஆபாசமாகத் தோன்றிய வகையில் இருக்கும் காட்சிகள் இடம்பெற்றன. c4bbe7a26e174a5303fd84c5af769484 - 2026 40 நிமிடம் ஓடும் அந்தக் காட்சிகள் இணைய தளத்தில் வெளியானது. அதனை அவர் பணியாற்றும் பள்ளியில் உள்ள ஆசிரியர்களும் மாணவர்களுமே அதிகம் பார்க்கும் படி ஆனது. இதனிடையே இந்தக் காட்சிகளைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த மாணவர்களின் பெற்றோர் பள்ளி நிர்வாகத்தில் புகார் செய்தனர். இதையடுத்து அந்த ஆசிரியை பள்ளி நிர்வாகத்தால் பணிநீக்கம் செய்யப்பட்டார். ஆனால், இந்த விவகாரம் குறித்து தனியார் தொலைக்காட்சி ஒன்றில் பேட்டி அளித்த லூசி , “நான் எந்தத் தவறும் செய்யவில்லை. விளம்பரப் படத்தில் நடிக்க அழகான முகம் கொண்டவர்கள் தேவை என ஒரு விளம்பரம் வந்தது. அதைப் பார்த்து, வருமானம் கிடைக்கும் என்ற ஆசையில் அங்கே சென்றேன். ஆனால், அங்கே எனக்கே தெரியாமல், கோகைன் போன்ற போதைப் பொருளைக் கொடுத்து, என்னை பயன்படுத்திக் கொண்டனர். சுய உணர்வுடன் இருந்திருந்தால் நான் அவ்வாறு நடந்து கொண்டிருக்க மாட்டேன்” என தெரிவித்துள்ளார். ஆனால் இவரது விளக்கத்தை பள்ளி நிர்வாகமோ பெற்றோரோ ஏற்றுக்கொண்டதாகத் தெரியவில்லை. பள்ளி ஆசிரியை ஒருவரே ஆபாசப் படத்தில் நடித்து மாணவர்கள் மத்தியில் காட்சிப் பொருளானது அங்கே பரபரப்பை ஏற்படுத்தியது.

ALSO READ:  IND Vs ENG ODI: முதல் போட்டியில் கெத்து காட்டிய இந்திய அணி
செங்கோட்டை ஸ்ரீராம்
செங்கோட்டை ஸ்ரீராம்https://www.dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img