ஐ.எஸ். பயங்கரவாத இயக்கத்தில் இருந்த ஹைதராபாத் பொறியாளர் பலி

Hyderabad-Graduate-Joined-Islamic-State-Died-in-Syriaஹைதராபாத்: ஐ.எஸ். பயங்கரவாத இயக்கத்தில் இணைந்திருந்த ஹைதராபாத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர், சிரியாவில் நடந்த போரில் உயிரிழந்துள்ளார். ஹைதராபாத்தைச் சேர்ந்த 25 வயதான பொறியியல் பட்டதாரி முகம்மது ஹனீப் வாசீம். இவர், நவம்பர் 2014-ம் ஆண்டு படிப்புக்காக லண்டன் சென்றுள்ளார். பின்னர் சிரியாவிற்கு சென்று ஐ.எஸ். பயஙகரவாத இயக்கத்தில் இணைந்து போரிட்டுள்ளார். கடந்த பிப்ரவரியில்தான் இவர் ஐ.எஸ். பயங்கரவாத இயக்கத்தில் சேர்ந்தாராம். இந்நிலையில், மார்ச் மாதம் 15 ஆம் தேதி, அங்கே  நடைபெற்ற உள்நாட்டுப் போரில் வாசீம் உயிரிழந்துள்ளார். இந்தத் தகவல் ஹைதராபாத்தில் உள்ள அவரது குடும்பத்தினருக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை உளவுத் துறை அதிகாரிகள் கூறியுள்ளனர். இவர், கடந்த பிப்ரவரியில் தனது சகோதரி திருமணத்துக்காக கடைசியாக வீட்டுக்கு வந்தாராம்.  வாசீம், கரீம்நகரைச் சேர்ந்த மற்றொரு இளைஞரையும் ஐ.எஸ். இயக்கத்தில் சேர்க்க அழைத்துச் சென்றதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், அவரைத் தேடும் பணி நடைபெற்று வருகிறது. கடந்த வருடத்தில் இருந்து ஐ.எஸ். பயங்கரவாத இயக்கத் தலைவன் அபு அக்பர் அல்-பகாதியின் பேச்சைக் கேட்டு, இந்திய இளைஞர்கள் சிலர் அந்த இயக்கத்தில் இணைய முயற்சி செய்த நிலையில், அவர்கள் தடுத்து நிறுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

மதுரையில் கள்ளழகர் தங்கக் குதிரையில் எழுந்தருளல்!

இதை தொடர்ந்து ராமராயர் மண்டகப்படியில் கள்ளழகரை மனம் குளிர்விக்கும் தீர்த்தவாரி நிகழ்வும் நடைபெறவுள்ளது. இதனை முன்னிட்டு மதுரை மாநகரே விழாக்கோலாம் பூண்டுள்ளது.

பஞ்சாங்கம் ஏப்ரல் 30 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

நாளை, விடுமுறை கால சிறப்பு ரயில்கள்! தவற விட்டுடாதீங்க!

பள்ளி மாணவர்கள் கோடைகால விடுமுறை மற்றும் மே தினம் தொடர் விடுமுறை முன்னிட்டு சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவதாக தென்னக ரயில்வே அறிவித்துள்ளது

ஆண்டாள் சூடிய மாலை கள்ளழகருக்குச் சாற்ற, புறப்பாடு!

இன்று மதியம் ஸ்ரீ வில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் நாச்சியார் சூடிய மாலை கள்ளழகர்க்குச் சாற்ற புறப்பாடு கண்டருளியது.

10, ப்ளஸ் 2 தேர்வு முடிவுகள் எப்போ வருது தெரியுமா?

தமிழ்நாட்டில், 12-ம் வகுப்பு அரசு பொதுத்தேர்வு முடிவுகள் வரும் மே மாதம் 8-ம் தேதி காலை 9:30 மணியளவில் வெளியிட முடிவு செய்யப்பட்டுள்ளது.

Topics

மதுரையில் கள்ளழகர் தங்கக் குதிரையில் எழுந்தருளல்!

இதை தொடர்ந்து ராமராயர் மண்டகப்படியில் கள்ளழகரை மனம் குளிர்விக்கும் தீர்த்தவாரி நிகழ்வும் நடைபெறவுள்ளது. இதனை முன்னிட்டு மதுரை மாநகரே விழாக்கோலாம் பூண்டுள்ளது.

பஞ்சாங்கம் ஏப்ரல் 30 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

நாளை, விடுமுறை கால சிறப்பு ரயில்கள்! தவற விட்டுடாதீங்க!

பள்ளி மாணவர்கள் கோடைகால விடுமுறை மற்றும் மே தினம் தொடர் விடுமுறை முன்னிட்டு சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவதாக தென்னக ரயில்வே அறிவித்துள்ளது

ஆண்டாள் சூடிய மாலை கள்ளழகருக்குச் சாற்ற, புறப்பாடு!

இன்று மதியம் ஸ்ரீ வில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் நாச்சியார் சூடிய மாலை கள்ளழகர்க்குச் சாற்ற புறப்பாடு கண்டருளியது.

10, ப்ளஸ் 2 தேர்வு முடிவுகள் எப்போ வருது தெரியுமா?

தமிழ்நாட்டில், 12-ம் வகுப்பு அரசு பொதுத்தேர்வு முடிவுகள் வரும் மே மாதம் 8-ம் தேதி காலை 9:30 மணியளவில் வெளியிட முடிவு செய்யப்பட்டுள்ளது.

பிறரிடம் இருக்கும் அர்ப்பணிப்பு நம்மிடம் ஏன் இல்லை?

பிற மதத்தவரோடு ஒப்பிட்டால் இளைய தலைமுறையைச் சேர்ந்த ஹிந்துக்களிடம் ஹிந்து மதம் பற்றிய ஞானமும், அவற்றைக் கடைப்பிடிப்பதில் ஆர்வமும் குறைந்து காணப்படுகிறது.

மதுரை சித்திரை திருவிழா தேரோட்டம் கோலாகலம்:

மதுரை சித்திரை திருவிழா தேரோட்டம் கோலாகலமாக இன்று புதன்கிழமை நடைபெற்றது.மாசி வீதிகளில்...

பஞ்சாங்கம் – ஏப்ரல் 29 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Entertainment News

Popular Categories