ஹைதராபாத்: ஐ.எஸ். பயங்கரவாத இயக்கத்தில் இணைந்திருந்த ஹைதராபாத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர், சிரியாவில் நடந்த போரில் உயிரிழந்துள்ளார். ஹைதராபாத்தைச் சேர்ந்த 25 வயதான பொறியியல் பட்டதாரி முகம்மது ஹனீப் வாசீம். இவர், நவம்பர் 2014-ம் ஆண்டு படிப்புக்காக லண்டன் சென்றுள்ளார். பின்னர் சிரியாவிற்கு சென்று ஐ.எஸ். பயஙகரவாத இயக்கத்தில் இணைந்து போரிட்டுள்ளார். கடந்த பிப்ரவரியில்தான் இவர் ஐ.எஸ். பயங்கரவாத இயக்கத்தில் சேர்ந்தாராம். இந்நிலையில், மார்ச் மாதம் 15 ஆம் தேதி, அங்கே நடைபெற்ற உள்நாட்டுப் போரில் வாசீம் உயிரிழந்துள்ளார். இந்தத் தகவல் ஹைதராபாத்தில் உள்ள அவரது குடும்பத்தினருக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை உளவுத் துறை அதிகாரிகள் கூறியுள்ளனர். இவர், கடந்த பிப்ரவரியில் தனது சகோதரி திருமணத்துக்காக கடைசியாக வீட்டுக்கு வந்தாராம். வாசீம், கரீம்நகரைச் சேர்ந்த மற்றொரு இளைஞரையும் ஐ.எஸ். இயக்கத்தில் சேர்க்க அழைத்துச் சென்றதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், அவரைத் தேடும் பணி நடைபெற்று வருகிறது. கடந்த வருடத்தில் இருந்து ஐ.எஸ். பயங்கரவாத இயக்கத் தலைவன் அபு அக்பர் அல்-பகாதியின் பேச்சைக் கேட்டு, இந்திய இளைஞர்கள் சிலர் அந்த இயக்கத்தில் இணைய முயற்சி செய்த நிலையில், அவர்கள் தடுத்து நிறுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.
ஐ.எஸ். பயங்கரவாத இயக்கத்தில் இருந்த ஹைதராபாத் பொறியாளர் பலி
உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari