மீண்டும் மகிந்த ராஜபட்ச… இலங்கை அரசியல் அதிரடிகள்! சட்ட நிபுணர்கள் சொல்வது என்ன?

Mahinda Rajapaksa Sworn In As Sri Lankas New Prime Minister - 2026

இலங்கை அரசியலில் குழப்பம் ஏற்பட்டுள்ளது. சதுரங்கத்தில் காய்களை நகர்த்தல் போல் வெகு காலமாக இருந்து காய்களை நகர்த்தி மீண்டும் மகிந்த ராஜபட்ச பதவிக்கு வந்துள்ளார்.

The man who ate the hoppers returns the hoppers with gratitude… 19 ஆவது அரசியலமைப்பு திருத்தத்திற்கு ஏற்ப பிரதமர் ஒருவர் தேர்வு செய்யப்பட்ட பின்னர் அவரை அந்தப் பதவியிலிருந்து நீக்குவது தொடர்பாக தெளிவாக சில நெறிமுறைகள் குறிப்பிடப்பட்டுள்ளன.

ஒன்று பதவி விலகுவதன் மூலம், அல்லது எழுத்து மூலம் அறிவித்தல் … இல்லையென்றால்  நம்பிக்கையில்லா தீர்மானத்தில் தோல்வியடைவதன் மூலம் அவரை பதவியிலிருந்து நீக்குதல்… இப்படித்தான் வழிவகை உண்டு.

இருப்பினும் பதவியில் இருக்கும் பிரதமர் ஒருவர் பதவி விலக முடியாது என கூறுபவராக இருந்தால் அவரை அந்தப் பதவியிலிருந்து எப்படி நீக்குவது என்பது குறித்து, அரசியலமைப்புத் திருத்தத்தில் குறிப்பிடப்படவில்லை.

அரசியலமைப்பில் காணப்படும் குறைபாடாக இது இருக்கிறது. எவ்வாறாயினும் நாடாளுமன்ற நடைமுறையில் 1978ஆம் ஆண்டு அரசியலமைப்புக்கு ஏற்ப பிரதமர் ஒருவரை நம்பிக்கையில்லாத் தீர்மானத்தின் மூலம் பதவி நீக்க முடியும்.

ALSO READ:  10, ப்ளஸ் 2 தேர்வு முடிவுகள் எப்போ வருது தெரியுமா?

ஆனால் ஜனாதிபதி தன்னிச்சையாக, தனது எண்ணத்திற்கு ஏற்ப  பிரதமரை பதவி நீக்க முடியாது. அவர் நாடாளுமன்றத்திடம் கேட்டு பெரும்பான்மை உள்ளவர்கள், எவர் பெயர் குறிப்பிடுகின்றார்களோ அவரை நியமிக்க முடியும்.

அதே நேரம் நிபுணர்கள் கூற்றுப் படி, தற்போது இலங்கையில் தேசிய அரசாங்கம் என்ற ஒன்று இல்லை. தேசிய அரசாங்கம் தொடர்பான முக்கிய கட்சிகள் இரண்டுக்கும் இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தம், கடந்த டிசம்பர் மாதத்துடன் காலாவதி ஆகிவிட்டது. இதன்படி புரிந்துணர்வு ஒப்பந்தமோ அல்லது தேசிய அரசாங்கமோ இன்றி அமைச்சரவை அல்லது பிரதமருக்கு அதிகாரம் இல்லை. அவ்வாறு அவைஇ இருக்கவும் முடியாது. அவை சட்டத்திற்கு புறம்பானதே!

தேசிய அரசாங்கம் குறித்த புரிந்துணர்வு ஒப்பந்தம் நீடிக்கப்படவும் இல்லை , புதிய ஒப்பந்தமும் செய்து கொள்ளப்படவும் இல்லை. இதனால் அமைச்சரவை கலைக்கப் பட வேண்டும் என்பதுடன் பிரதமருக்கும் பதவியில் இருப்பதற்கான அதிகாரமும் இல்லை.

இப்படிப்பட்ட நிலையில் அமைச்சரவை மற்றும் பிரதமர் ஆகியோரால் எடுக்கும் தீர்மானங்கள் செல்லுபடி ஆகாது என்று கூறியுள்ளனர்.

கொழும்பு பல்கலைக்கழக சட்டத்துறை மூத்த விரிவுரையாளர் மேனக ஹரன்கஹ இது தொடர்பாக ஊடகங்களுக்கு அளித்த பேட்டியில்,  19 ஆவது திருத்தத்தின் ஊடாக இதற்கு முன்னர் இருந்ததையும் பார்க்க பிரதமருக்கு சில அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளன. இதன்படி பிரதமரை தேர்வு செய்வதற்கு ஜனாதிபதிக்கு அதிகாரம் இருக்கின்ற போதிலும், பிரதமரை நீக்குவதற்கு ஜனாதிபதிக்கென தனியான அதிகாரங்கள் கிடையாது.

ALSO READ:  முழுமையான நன்மைக்கு சனாதன தர்மம்!

19ஆவது அரசியலமைப்பு திருத்தத்திற்கு முன்னர் பிரதமரை எழுத்து மூலம் அறிவித்து ஜனாதிபதியினால் பிரதமரை நீக்க முடியும். ஆனால் 19ஆவது திருத்தத்தின்படி, ஜனாதிபதியின் எண்ணப்படி பிரதமரை நீக்க முடியாது. பிரதமர் விரும்பி பதவி விலக வேண்டும். அவ்வாறு இல்லையென்றால் அவர் பதவியில் தொடரும் வேளையில் அவரை பதவி நீக்கம் செய்வதற்கான ஏற்பாடுகள் அரசியலமைப்பில் குறிப்பிடப்படவில்லை.

இருப்பினும் இவ்வாறான பிரதமர் தலைமை வகிக்கும் அரசாங்கம் எந்நேரமும் வீழக் கூடிய சாத்தியங்கள் இருக்குமானால், அரசாங்கத்திற்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானத்தைக் கொண்டு வந்து அதனை நிறைவேற்றி பிரதமரை பதவி விலக செய்வதற்குத் தேவையான நிலையை ஏற்படுத்தலாம். இவை தவிர அரசியலமைப்பின் படி, ஜனாதிபதியினால் பிரதமரை நீக்க முடியாது.

இருப்பினும் அரசியல் அமைப்பின் 42.3, 42.4 மிக முக்கியமான பிரிவுகள் பிரதமரது நியமனம் தொடர்பாக சான்று தருகின்றன. ஜனாதிபதிக்கு பிரதமரது நியமனம் தொடர்பாக அதிகளவு அதிகாரம் உண்டு!

இப்படி இலங்கையில் அரசியல் சட்ட நிபுணர்கள் கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.

ALSO READ:  மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூன் 23 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

‘தவெக., இன்னுமொரு திமுக., தானா?’ திருப்பரங்குன்ற தீப நிலைப்பாட்டுக்கு இந்து முன்னணி கண்டனம்!

உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை திருப்பரங்குன்றம் மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்றுவது தொடர்பாக வழங்கிய உத்தரவை அமல்படுத்துவதில், புதிதாக பதவி ஏற்றுள்ள தவெகவின் நிலைப்பாட்டை கேட்டிருந்தது. அது குறித்து இன்று தமிழக அரசு சார்பில் தாக்கல் செய்துள்ள பதில் மனுவில் குழப்பமான கருத்துக்களை தெரிவித்துள்ளது.

ஆர்.எஸ்.எஸ்., பதிவு செய்யப்பட்ட அமைப்பா?

ஆர் எஸ் எஸ் தனது பதிவு சான்றிதழைக் காட்ட வேண்டுமென கார்கே கேட்பது பொருள் அற்றது. ஆர் எஸ் எஸ் 100 ஆண்டுகளுக்கு மேலாக இந்த நாட்டில் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. அதில் 75 ஆண்டுகள் இந்திய அரசமைப்பு சட்டத்திற்கு உட்பட்டது.

பஞ்சாங்கம் ஜூன் 22 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் ஜூன் 23 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

‘தவெக., இன்னுமொரு திமுக., தானா?’ திருப்பரங்குன்ற தீப நிலைப்பாட்டுக்கு இந்து முன்னணி கண்டனம்!

உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை திருப்பரங்குன்றம் மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்றுவது தொடர்பாக வழங்கிய உத்தரவை அமல்படுத்துவதில், புதிதாக பதவி ஏற்றுள்ள தவெகவின் நிலைப்பாட்டை கேட்டிருந்தது. அது குறித்து இன்று தமிழக அரசு சார்பில் தாக்கல் செய்துள்ள பதில் மனுவில் குழப்பமான கருத்துக்களை தெரிவித்துள்ளது.

ஆர்.எஸ்.எஸ்., பதிவு செய்யப்பட்ட அமைப்பா?

ஆர் எஸ் எஸ் தனது பதிவு சான்றிதழைக் காட்ட வேண்டுமென கார்கே கேட்பது பொருள் அற்றது. ஆர் எஸ் எஸ் 100 ஆண்டுகளுக்கு மேலாக இந்த நாட்டில் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. அதில் 75 ஆண்டுகள் இந்திய அரசமைப்பு சட்டத்திற்கு உட்பட்டது.

பஞ்சாங்கம் ஜூன் 22 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் ஜூன் 21 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

பஞ்சாங்கம் ஜூன் 20 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் ஜூன் 19 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Entertainment News

Popular Categories