கர்நாடக இசையுலகின் துணிச்சல் சத்தியமா திரையுலகுக்கு வராது..! #MeToo -க்காக சினிமாக்காரங்க என்னத்த கிழிச்சீங்க?!

music academy - 2026

அண்மைக் காலமாக #MeToo புகார்கள் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி வருகின்றன. சினிமா துறையில் புரையோடிப் போயுள்ள காஸ்டிங்கோச் தொடங்கி, சினிமாத் துறை பிரபல புள்ளிகளின் மீது ஒவ்வொருவராக புகார் தெரிவிக்க… தொடர்ந்து ஊடக வெளிச்சம் பாயும் கர்நாடக இசை துறையில் உள்ளவர்கள் மீதும் இந்தப் புகார்கள் தெரிவிக்கப் பட்டன.

சினிமா துறையில் புகார் கூறப்பட்ட பெரும்புள்ளிகள் இந்தக் குற்றச்சாட்டுகளை புறந்தள்ளும் வகையில், குற்றச்சாட்டை முன்வைத்தவர்கள் மீதே சேற்றை வாரி இறைத்தனர். அவர்களுக்கு பக்க பலமாக சினிமா துறையில் உள்ள புள்ளிகளே குரல் கொடுத்தார்கள். இப்படி குற்றம் சாட்டினால், இந்தத் துறையே குற்றவாளிக் கூண்டில் ஏற வேண்டியிருக்கும். எனவே தேவையற்ற வகையில் புகார் கூற வேண்டாம் என்றனர். ஆனால், இதே போல் குற்றம் சுமத்தப் பட்ட கர்நாடக இசைத்துறையிலோ… அவர்களை வரும் மார்கழி சீசனில் கச்சேரிகளுக்கு அனுமதிக்க மாட்டோம் என உறுதிபடக் கூறி, மீடூ இயக்கத்துக்கான ஆதரவையும், பெண்களுக்கான பாதுகாப்பையும் உறுதிப் படுத்தியிருக்கிறார்கள்!!

மீடுவில் பாலியல் புகாருக்கு ஆளான சித்ரவீணா ரவிகிரண், பாடகர் ஓ.எஸ்.தியாகராஜன் உள்ளிட்ட 7 கர்நாடக சங்கீத வித்வான்கள் மார்கழி விழாவில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளதாக சபாக்காரர்கள் கூறியுள்ளனராம். 71 வயதான ஓ.எஸ்.தியாகராஜன், தன்னிடம் சங்கீதம் கற்றுக்கொள்ள வந்த மாணவியிடம் தகாத முறையில் பாலியல் சீண்டலில் ஈடுபட முயன்றார் எனப் படுகிறது. சித்ரவீணா ரவிகிரன் சங்கீத கலாநிதி பட்டம் பெற்றவர். மன்னார்குடி ஈஸ்வரன், ஸ்ரீமுஷ்ணம் ராஜாராவ், திருவாரூர் வைத்தியநாதன், வயலின் வித்வான்கள் ஆர்.ரமேஷ், நாகை ஸ்ரீராம் ஆகியோரின் நடவடிக்கைகளை தாங்கள் பாலியல் சீண்டலாகக் கருதியதாக பெண்கள் சிலர் சமூக வலைத்தளத்தில் பதிவு செய்தனர்.

இந்நிலையில், பாலியல் புகாரில் சிக்கியுள்ள இவர்கள் 7 பேரும் வரும் டிசம்பர் சீஸனில் மியூசிக் அகடாமியில் நடக்கும் கச்சேரிகளில் பங்கேற்க அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்றும், இவர்கள் 7 பேரும் பாலியல் அத்துமீறல்களில் ஈடுபட்டதாக நிரூபிக்கப்பட்டால் மியூசிக் அகாடமியில் இருந்தே நீக்கப்படுவார்கள் என்றும் மியூசிக் அகடாமி தலைவர் முரளி கூறியுள்ளார்.

ஆனால், இப்படி எந்த இசையமைப்பாளரும் வைரமுத்து பற்றியோ, இன்னும் மீடு புகாரில் சிக்கியவர்கள் குறித்தோ.. அவர்களுக்கு வாய்ப்புகள் இனி வழங்கப் படாது, அவர்களை எங்கள் திரைப்படங்களில், நிகழ்ச்சிகளில் பங்கேற்க அனுமதிக்க மாட்டோம் என கூறியிருக்கிறார்களா என்றால்… இல்லை என்று தான் கூறத் தோன்றுகிறது.

1 COMMENT

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

ஹிந்து விரோதிகளைத் தோற்கடிக்க… நமக்கான ஆளுமைகளைத் தேர்ந்தெடுப்போம்!

ஜனநாயக கடமையை ஆற்றுவோம்.. 100% வாக்களிப்போம். தமிழகத்தில் நமக்கான ஆளுமையை நாம்...

Topics

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

ஹிந்து விரோதிகளைத் தோற்கடிக்க… நமக்கான ஆளுமைகளைத் தேர்ந்தெடுப்போம்!

ஜனநாயக கடமையை ஆற்றுவோம்.. 100% வாக்களிப்போம். தமிழகத்தில் நமக்கான ஆளுமையை நாம்...

ஆதிசங்கரரின் சதச்லோகி – எளிய விளக்கம்!

காசியில் ஸ்ரீ பகவத்பாதர் தம் 9 - 12 வயதுக்குள் ப்ரஸ்தானத்ரய பாஷ்யங்களை இயற்றினார். அவற்றில் சொல்லப்பட்ட விஷயங்களை மக்கள் எளிதில் புரிந்து கொள்ள 100 சுலோகங்களில் ஆன சதச்லோகியை இயற்றினார்.

ஆதிசங்கர பகவத்பாதரின் ‘நிர்வாண ஷட்கம்’!

ஆதி சங்கர பகவத் பாதர் இயற்றிய நிர்வாண ஷடகம் மிகவும் பிரபலமான ஒன்று. நிர்வாண எனில் உருவமற்ற. ஷட் எனில் ஆறு என்ற எண்ணிக்கை.

அட்சய திருதியை: கும்பகோணத்தில் 12 கருட சேவை கோலாகலம்!

கும்பகோணத்தில் ஆண்டுதோறும் அட்சய திருதியை அன்று மிகச் சிறப்பாக நடைபெறும் திருவிழா 12 கருட சேவை ஆகும்.

Entertainment News

Popular Categories