January 23, 2025, 5:58 AM
23.2 C
Chennai

பிழைப்பிற்காக துபாய் சென்ற வாலிபர் மர்ம சாவு: உடலை மீட்க ஆட்சியரிடம் குடும்பத்தார் மனு

00172001பிழைப்பிற்காக துபாய் சென்ற வாலிபன் மர்மமான முறையில் மரணமடைந்தார். அவரது சாவில் மர்மம் இருப்பதாகவும், முறையான விசாரணை நடத்தி சடலத்தை கொண்டு வர வேண்டும் என கரூர் மாவட்ட ஆட்சியரிடம் அந்த இளைஞரின் குடும்பத்தார் கண்ணீர் மல்க மனு அளித்தனர். கரூர் மாவட்டம், குளித்தலையை அடுத்த தோகைமலை ஒன்றியம் பகுதியில் அமைந்துள்ளது வேங்கடத்தான் பட்டி கிராமம். இங்கு வசிக்கும் அம்மாக்கண்ணு இந்த பெண்மணியின் 5 வது மகன் பி.வெங்கடாசலம் , கடந்த பிப்ரவரி மாதம் 3 ம் தேதி பிழைப்பிற்காக துபாய் சென்றுள்ளார். இந்நிலையில் கடந்த மாதம் 11 ம் தேதி சாமி என்பவரிடம் இருந்து வேங்கடத்தான் பட்டியில் வசிக்கும் வெங்கடாசலத்தின் அக்கா கணவர் வரதராஜனிடம் தொலைபேசியில் தகவல் தெரிவித்துள்ளார். சாலை விபத்தில் தங்களுடைய மைத்துனர் கவலைக்கிடமாக உள்ளார் எனவும், பின்பு அன்றே மாலை 4 மணிக்கு அவர் இறந்து விட்டதாக கூறி உள்ளார். 00177001இதை அடுத்து கரூர் மாவட்ட ஆட்சியரிடம் வெங்கடாசலத்தின் தாயார் அம்மாக்கண்ணு கண்ணீர் மல்க மனு அளித்துள்ளார். அந்த மனுவில் துபாய்க்கு வேலைக்கு சென்ற எனது மகன் சாவில் மர்மம் உள்ளதாகவும், அவனது உடலை மீட்டு என்னிடம் ஒப்படைக்குமாறு மனு அளித்துள்ளார். இந்த சம்பவம் கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலேயே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது00168001..

ALSO READ:  வங்கதேசத்தில் இஸ்கான் செயலர் கிருஷ்ணதாஸ் கைது; இந்தியாவில் வலுக்கும் கண்டனங்கள்!

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

மதக் கலவரத்தை தூண்டும் திமுக.,? இந்து முன்னணி கண்டனம்

தமிழகத்தில் மதக்கலவரத்தை தூண்டுகிறதா திமுக. இன்று கேள்வி எழுப்பி, திருப்பரங்குன்றத்தில் திமுக...

கோமியம்… கோமூத்ரா… இன்னா மேட்டரு பா!

Amazon போன்ற பல இணையதளங்களில் கோமூத்ரம் விற்பனை செய்யப்படுகிறது.

விக்கிரமங்கலம் அங்காள ஈஸ்வரி கருப்புசாமி கோவில் மகா கும்பாபிஷேகம்

கும்பாபிஷேக ஏற்பாடுகளை திருப்பணிகுழு மற்றும் விக்கிரமங்கலம் எட்டூர் கிராம பொதுமக்கள் செய்திருந்தனர்.

பஞ்சாங்கம் ஜன.21- செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

திருப்பரங்குன்றம் ஸ்ரீசுப்ரமணிய சுவாமி திருக்கோயில்!

கயிலாயத்தில் சிவபெருமான், பார்வதிக்கு பிரணவ மந்திர பொருளை உபதேசம் செய்தார். அப்போது அம்பிகையின் மடியில் இருந்த முருகன் மந்திரத்தை கேட்டுவிட்டார்.