நியூயார்க்: இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியும், சீன அதிபர் ஜீ ஜின் பிங்கும் ஆற்றல் மிக்க தலைவர்களாக விளங்குகின்றனர் என்று அமெரிக்காவின் “டைம்’ பத்திரிகை புகழாரம் சூட்டியுள்ளது. மோடி, ஜீ ஜின் பிங் இருவரும் வரலாற்றில் தங்கள் முத்திரையைப் பதிக்க உத்வேகத்துடன் செயல்படுகின்றனர் என்றும் அது தெரிவித்துள்ளது. டைம் பத்திரிகை உலக அளவில் புகழ்பெற்ற 100 பேரின் பட்டியலை வெளியிட்டது. அதில், பிரதமர் நரேந்திர மோடி, ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதின், சீன அதிபர் ஜீ ஜின் பிங், ஜெர்மன் பிரதமர் ஏஞ்சலா மெர்கல் ஆகியோரின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன. அந்தப் பட்டியலில் இடம் பெற்றுள்ளவர்களைப் பற்றி, பிரபலங்கள் சிலர் கட்டுரை எழுதியுள்ளனர். மோடி குறித்த கட்டுரையை “இந்தியத் தலைமை சீர்திருத்தவாதி’ என்ற தலைப்பில் அமெரிக்க அதிபர் ஒபாமா எழுதியிருந்தார்.
Popular Categories