
பெரு நாட்டில் உள்ள மரிபெல் சோடெலோ என்பவர் நாய் குட்டி வளர்க்க ஆசைப்பட்டுள்ளார். இதற்காக மரிபெல் சோடெலோ பெரு நாட்டின் மத்திய லிமாவில் உள்ள ஒரு சிறிய கடையில் ஒரு அழகான நாய்க்குட்டியை வாங்கியுள்ளார்.
நாய்க்குட்டியை வாங்கியபோது நாய் விற்பனையாளர் அது சைபீரியன் ஹஸ்கி என்று கூறியுள்ளார். ஆரம்பத்தில் நாய்க்குட்டி நாய்களின் குணநலன்களை கொண்டு இருந்ததாக கூறியுள்ளார். ரன் ரன் என்று நாய்க்குட்டிக்கு பெயர் வைத்து அழைத்துள்ளனர்.
இது குறித்து அவர்கள் தெரிவிக்கையில், நாட்கள் செல்ல செல்ல நாய்க்குட்டி அருகிலுள்ள கோழிகள் மற்றும் வாத்துகளைக் கொன்று சாப்பிடத் தொடங்கியது. விரைவில் அதன் தோற்றம் மாறியது. அதன் கால்கள் மெல்லியதாகவும், அதன் வால் புதர் போன்றும் , அதன் தலை கூர்மையாகவும், அதன் காதுகள் மேல்நோக்கி நரிகளின் காதுகளை போல் மாறிவிட்டது என கூறியுள்ளார்.
தொடர்ந்து அதனை நாங்கள் வீட்டில் வளர்க்க முடியவில்லை. 3 பெரிய பன்றிகளை சாப்பிட்டு விட்டது. இதனால் விலங்குகளின் இழப்பிற்கு நாங்கள் பணம் செலுத்திக் கொண்டிருந்தோம்.
இது நாய் என்று தெரிந்து தான் 13 டாலர் பணம் கொடுத்து வாங்கினோம். அக்கம்பக்கத்தில் உள்ள விலங்குகளைத் தாக்குவதாக அண்டை வீட்டுக்காரர்கள் புகார் அளித்த பின்னரே, ரன் ரன் ஆண்டியன் (Andean) வகை நரி என்று தெரிய வந்தது.
இது குறித்து பெருவில் உள்ள தேசிய வன மற்றும் வனவிலங்கு சேவை (SERFOR) கூறுகையில், காட்டு விலங்குகள் பெரும்பாலும் அமேசானிய பகுதிகளில் இருந்து கடத்தல்காரர்களால் வாங்கப்பட்டு, லிமாவில் சட்டவிரோதமாக விற்கப்படுகின்றன. அதன் பின்னர், அந்த நரி வனவிலங்கு அதிகாரிகளால் பிடிக்கப்பட்டது.
இறுதியாக, ஏறக்குறைய ஆறு மாதங்களுக்குப் பிறகு, பெருவின் செர்ஃபோர் வனவிலங்கு சேவை, ரன் ரன் இந்த வார தொடக்கத்தில் வேட்டையாடாமல் அமைதியடைந்ததாகவும், கால்நடை மருத்துவர்களால் பரிசோதிக்க பட்ட பின்னர் பார்க் டி லாஸ் லேயெண்டாஸ் மிருகக்காட்சிசாலைக்கு கொண்டு செல்லப்பட்டதாகவும் கூறினார்.
சில்வாவின் கூற்றுப்படி, Swefor இந்த ஆண்டு 125 தடவைகளுக்கு மேல் சட்டவிரோதமாக பொதுமக்களுக்கு சொந்தமான காட்டு விலங்குகளை பறிமுதல் செய்துள்ளார். பெருவில், காட்டு விலங்குகளை சட்டவிரோதமாக கடத்தினால், ஐந்து ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படும்.
https://t.co/lg4ASUt7or”>https://t.co/lg4ASUt7or</a> <a href=”https://t.co/k8BonuRDwy”>pic.twitter.com/k8BonuRDwy</a></p>— Ministerio del Ambiente 🇵🇪♻️ (@MinamPeru) <a href=”https://twitter.com/MinamPeru/status/1458570880347475972?
https://twitter.com/hashtag/Comas?src=hash&ref_src=twsrc%5Etfw”>#Comas</a>. Quien fue sedado y trasladado a las instalaciones del Parque de las Leyendas. <a href=”https://t.co/HqlD0lwzMg”>pic.twitter.com/HqlD0lwzMg</a></p>— Policía Nacional del Perú (@PoliciaPeru) <a href=”https://twitter.com/PoliciaPeru/status/1458083107358314496?