குரு பெயர்ச்சி பலன்கள் (2021-22): துலாம்

குரு பெயர்ச்சி

குரு பெயர்ச்சி பலன்கள் 2021-2022
20.11.2021 முதல் 13.04.2022 வரை

நிகழும் ப்லவ ஆண்டு கார்த்திகை மாதம் 4ம் தேதி சனிக்கிழமை இரவு 43:11:26 நாழிகைக்கு ஆங்கில வருடம் 2021, நவம்பர் மாதம், 20ம் தேதி இரவு 11:30:28 மணிக்கு குருபகவான் மகர ராசியில் இருந்து கும்ப ராசிக்கு பெயர்ச்சி ஆகிறார். இது திருக்கணிதம் லஹரி அயனாம்ஸப்படி. கும்ப ராசியில் அவர் 13.04.2022 பிற்பகல் 03.49.47 மணி வரை சஞ்சரிக்கிறார். அதன் பின் மீன ராசியில் சஞ்சாரம்.

வாக்கிய பஞ்சாங்கம் படி 13.11.2021 ஐப்பசி மாதம் 27ம் தேதி இரவு 08.46 மணிக்கு கும்ப ராசிக்கு பெயர்கிறார்.

அடியேன் எப்பொழுதும் லஹரி அயனாம்ஸப்படி செல்வதால் இந்த குருப்பெயர்ச்சி பலன்கள் 20.11.2021 முதல் 13.04.2022 வரைக்குமான பலன்களை கணித்து இருக்கிறேன்.

வெறும் 144 நாட்கள் மட்டுமே கும்பத்தில் குரு சஞ்சாரம் ஏற்கனவே 06.04.2021 முதல் 14.09.2021 வரை கும்ப ராசியில் சஞ்சரித்த பலன்கள் போன குருபெயர்ச்சியில் தெரிவித்து இருந்தோம். இனி மேற்படி 144 நாட்களுக்கான பலன்களை ஒவ்வொரு ராசிக்காரர்களும் தெரிந்து கொள்ளலாம்.

gurupeyarchi2021 2022
gurupeyarchi2021 2022

குறிப்பு 1: இந்த 144 நாட்களுக்குள் மற்ற சூரியன், செவ்வாய், புதன் சுக்ரன் ராகு கேது இவர்களின் சஞ்சாரங்களையும் கணக்கில் கொண்டு கணிக்கப்பட்ட பலன்கள்

குறிப்பு 2 : இவை பொதுப்பலன்கள். இதைக் கொண்டு தீர்மானிப்பது அவ்வளவு சரியாக இருக்காது.  ஒவ்வொருவரும் அவருடைய ஜாதகத்தை அருகில் உள்ள ஜோதிடரிடம் காட்டி பலன்கள் கேட்டுப் பெறுவது சிறந்த ஒன்று. மேலும் லக்னத்தை ஒட்டியும் பலன் சொல்லி இருப்பதால் உங்கள் லக்னம் தெரிந்தால் அதையும் சேர்த்து பார்த்துக் கொள்வது நல்லது.!

ALSO READ:  சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் வைகாசி தேரோட்டம் கோலாகலம்!

குருபெயர்ச்சி பலன்கள் – பரிகாரங்கள் கணிப்பு:
லக்ஷ்மீ ந்ருஸிம்ஹாச்சாரி (ரவி சாரங்கன்)
ஜோதிடர், ஸ்ரீசார்வபௌம ஜோதிட நிலையம்
D1-304, D1 Block, சித்தார்த் பௌண்டேஷன்
ஐய்யஞ்சேரி மெயின்ரோடு, ஊரப்பாக்கம் – 603210
மொபைல்(வாட்ஸப்) 8056207965,
லேண்ட்லைன் : 044-35584922
Email ID : mannargudirs1960@hotmail.com


7 thulam

துலாம் :
சித்திரை 3,4 பாதங்கள்
ஸ்வாதி 4 பாதம்
விசாகம் 1,2,3 பாதங்கள் முடிய


துலா ராசி அன்பர்களே உங்களுக்கு அடுத்த 144 நாட்கள்  மிகுந்த நன்மை தருவதாக அமையும் காரணம் குரு பகவான் 5ம் இடத்தில் சஞ்சரிக்கிறார் மேலும் பார்வையால் உங்கள் ராசியை பார்க்கிறார்

மற்ற கிரகங்களும் இந்த காலகட்டத்தில் சஞ்சரிக்கும் பொழுது நன்மைகளே அதிகம் நடைபெறுகிறது மார்ச் 2022 முதல் ராகு ஏழிலும் கேது ஜென்மத்திலும் சஞ்சரிக்கும்போது சில செலவுகள் தர்ம சங்கடங்கள் வரும் மற்றபடி பெரிய தொல்லைகள் இருக்காது பொருளாதாரம் மிக நன்றாக இருக்கும் ராசிநாதன் சுக்கிரன் வலுவாக இருக்கிறார் அதனால் உங்கள் முயற்சிகள் வெற்றியை தரும்

வேலைவாய்ப்புகள் மிக நன்றாக இருக்கும் உத்தியோகத்தில் இருப்பவர்கள் கடந்தகால முயற்சிகளின் பலனை அனுபவிப்பார்கள் நல்ல உத்தியோகம் பதவி உயர்வு சம்பள உயர்வு விரும்பிய இடமாற்றம் என்று இருக்கும் சொந்தத் தொழில் செய்வோர் புதிய தொழில் விஸ்தரிப்பு களை செய்ய ஆரம்பிக்கும் காலம் இது அதில் மிகப்பெரிய நன்மைகளை பெற்று அடுத்து வரும் காலங்களில் மிக உயர்ந்த நிலையை அடைவர்

ALSO READ:  பஞ்சாங்கம் ஜூலை 05 - ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பொருளாதாரம் பணப்புழக்கம் மிகுந்த ஏற்றமாக இருக்கும் மற்ற பிரிவினர் பெண்கள் மாணவர்கள் என்று அனைவருக்கும் இந்த குருபெயர்ச்சி உன்னதமான பலனை தருகிறது கடந்த காலங்களில் ஏற்பட்டு வந்த தடைகள் விலகி சிலருக்கு திருமண வாய்ப்புகள் கைகூடி வரும் குழந்தை எதிர்பார்த்து ஐந்தில் குரு இருப்பதால் புத்திர பாக்கியம் இப்பொழுது ஏற்படும் குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும்

உறவுகளால் நன்மை உண்டாகும் 9-க்குடையவர் ராசியில் இருப்பது நான்கு உடையவர் ஆட்சியாக இருப்பது பெற்றோர் வகையில் நன்மைகளை அதிகரிக்கவும் மேலும் அவர்களுடைய வைத்திய செலவுகள் குறைய ஆரம்பிக்கும் சிலருக்கு புதிய வீடு வாகனம் ஆடை ஆபரணச் சேர்க்கை என்று நன்றாக இருக்கும் கடந்த காலங்களில் செய்த முயற்சிகளின் பலன்கள் வெற்றியாக தற்போது கிடைக்கும்

தொல்லைகள் என்று சொன்னால் கடந்தகாலத்தில் சம்பாதித்த எதிரிகளை விட்டுவிட்டதால் அவர்களால் சில மனக்கசப்புகள் ஏற்பட வாய்ப்புண்டு எதிலும் கவனமாக செயல்பட்டு கொஞ்சம் கோபத்தைக் குறைத்துக் கொண்டு செயல்பட்டால் நன்மை அதிகமாக உண்டு

இந்த குருப்பெயர்ச்சி பெரும்பாலும் நன்மைகளையே செய்வதால் சிறுசிறு சங்கடங்கள் மட்டுமே தருவதால் நன்மை உண்டாகும் பெயர்ச்சியாக இதை கொள்ளலாம்

குடும்பம் :  இல்லத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும் கணவன் மனைவி கொஞ்சம் விட்டுக்கொடுத்துச் செல்வதால் புரிந்துகொண்டு அனுசரித்துப் போவதால் அதிக நன்மை இருப்போம் மேலும் பெற்றோர் குழந்தைகள் மற்ற உறவுகள் எல்லோரிடமும் அன்பு காட்டுவதால் அவர்களால் நன்மை உண்டாகும் தடைபட்ட அல்லது தாமதமான திருமண முயற்சிகள் இப்பொழுது கைகூடி இல்லத்தில் புதிய வரவுகள் உண்டாகும் குழந்தைப் பேறு வேண்டி தவம் இருந்தவர்கள் இந்த குரு பெயர்ச்சியில் அதை பெற்று மகிழ்வார்கள் பொதுவில் குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும் நன்மை அதிகமாக இருக்கும்

ALSO READ:  வடகிழக்கில் ஹிந்து தேசியம் : அஸ்ஸாம்

ஆரோக்கியம் :  காற்று ராசியான துலா ராசி அன்பர்கள் 6க்குடைய குரு பகவான் 5ல் சஞ்சரிப்பதும் 6-ஆம் இடத்துக்கு சனி பார்வை இருப்பதும் எலும்பு வாயு மற்றும் வயிறு சம்பந்தப்பட்ட பிரச்சனைகளும் சிலருக்கு உஷ்ணத்தினால் பாதிப்புகளும் உண்டாகலாம் வாழ்க்கை துணைவருக்கும் இதேபோல் இருந்து வைத்திய செலவுகள் அதிகரிக்கலாம் உணவில் கவனம் தேவை, பெற்றோர் வழியில் சிலவுகள் குறைந்துவிடும். கொஞ்சம் கவனமாக இருந்தால் போதும் ஆரோக்கியம் மேம்படும்

வணங்கவேண்டிய தெய்வம் & நற்செயல்கள் : லட்சுமி நரசிம்மர் மற்றும் சுதர்சன சக்கரத்தாழ்வார் அருகிலுள்ள கோயிலுக்குச் சென்று விளக்கேற்றி வழிபடுவது கூடுமான வரையில் இறைவனின் நாமத்தை உச்சரிப்பது நன்மை தரும் அதேபோல் முடிந்த அளவு வறுமை பாதித்தவர்களுக்கு உணவு உடை கல்வி இவற்றை வழங்குவது மிகுந்த நன்மை தரும்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

அருந்தமிழ் 50: திறனாய்வு!

கவிஞர் ஜெயஸ்ரீ எம்.சாரி அவர்கள் அருந்தமிழ் என்னும் தலைப்பில் அருமையான புதுக்கவிதைகள் 50 வகையான தலைப்புகளில் கவிதைகளைத் தந்துள்ளார்.

பாகிஸ்தானுடன் கொல்லைப்புற வழியில் பேச்சுவார்த்தையா?

அதன் உண்மை நிறத்தை உள்ளபடியே தெரிந்ததால் 'பயங்கரவாதமும் பேச்சுவார்த்தையும் ஒன்றாக பயணிக்காது' என்ற கொள்கையில் இந்தியா உறுதியாக உள்ளது. இதைத்தான் கொழும்பு உட்பட எல்லா மேடைகளிலும் இந்தியா தொடர்ந்து சொல்லி வருகிறது.

பஞ்சாங்கம் ஜூலை 11 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் ஜூலை 10 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

FIFA 2026: ரவுண்ட் 16… கடைசி நான்கு ஆட்டங்கள், அதிர்ச்சித் தோல்விகள்!

காலிறுதிச் சுற்றுக்கு முந்தைய சுற்றின் கடைசி ஆட்டம் வான்கூவரில் சுவிட்சர்லாந்து, கொலம்பியா அணிகளுக்கிடையே நடந்தது. இதில் இருஅணிகளும் ஆட்டநேர முடிவு வரை கோல் எதுவும் போடவில்லை. எக்ஸ்ட்ரா டைமான அடுத்த 30 நிமிடத்திலும்

Topics

அருந்தமிழ் 50: திறனாய்வு!

கவிஞர் ஜெயஸ்ரீ எம்.சாரி அவர்கள் அருந்தமிழ் என்னும் தலைப்பில் அருமையான புதுக்கவிதைகள் 50 வகையான தலைப்புகளில் கவிதைகளைத் தந்துள்ளார்.

பாகிஸ்தானுடன் கொல்லைப்புற வழியில் பேச்சுவார்த்தையா?

அதன் உண்மை நிறத்தை உள்ளபடியே தெரிந்ததால் 'பயங்கரவாதமும் பேச்சுவார்த்தையும் ஒன்றாக பயணிக்காது' என்ற கொள்கையில் இந்தியா உறுதியாக உள்ளது. இதைத்தான் கொழும்பு உட்பட எல்லா மேடைகளிலும் இந்தியா தொடர்ந்து சொல்லி வருகிறது.

பஞ்சாங்கம் ஜூலை 11 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் ஜூலை 10 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

FIFA 2026: ரவுண்ட் 16… கடைசி நான்கு ஆட்டங்கள், அதிர்ச்சித் தோல்விகள்!

காலிறுதிச் சுற்றுக்கு முந்தைய சுற்றின் கடைசி ஆட்டம் வான்கூவரில் சுவிட்சர்லாந்து, கொலம்பியா அணிகளுக்கிடையே நடந்தது. இதில் இருஅணிகளும் ஆட்டநேர முடிவு வரை கோல் எதுவும் போடவில்லை. எக்ஸ்ட்ரா டைமான அடுத்த 30 நிமிடத்திலும்

பஞ்சாங்கம் ஜூலை 09 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

IND Vs ENG-T20-மூன்றாவது போட்டியிலும் சொதப்பிய இந்திய அணி!

          இது இந்தியாவின் மிக மோசமான தொள்வியாகும். இதற்கு முன்னர் இவ்வளவு ரன் வித்தியாசத்தில் தோற்றதில்லை. அணியில் வரிசையாக இடதுகை மட்டையாளர்களாக இருப்பது அணிக்குப் பிரச்சனையாக உள்ளது. இதனால் அடுத்த ஆட்டத்தில் சஞ்சு சாம்சன் மீண்டும் அணியில் இடம்பெற வாய்ப்புள்ளது. 

காஷ்மீர் பண்டிட் நர்ஸ் கொலை; 36 ஆண்டுகள் கழித்து மீண்டும் விசாரணை… முக்கியத்துவம் என்ன?

இந்த கருத்துதான் பண்டிட்களின் வெளியேற்றம் பற்றிய விவாதத்தை கட்டமைக்க முடியும். இல்லாவிட்டால், காஷ்மீர் குறித்த எந்த பேச்சும் வெறும் சொற் சிலம்பமாகவே பார்க்கப்படும்.

Entertainment News

Popular Categories