சிரஞ்சீவியின் ஒவ்வொரு பிறந்த நாளுக்கும் கிராமங்களிலும் நகரங்களிலும் ரத்ததான முகாம்களை ஏற்படுத்தி அந்த ரத்தத்தை சிரஞ்சீவி ரத்த வங்கியில் சேர்க்கிறார்கள் ரசிகர்கள்.
விளம்பரங்களில் தொலைக்காட்சிகளில் அடிக்கடி தலை காட்டி வந்த சரவணா ஸ்டோர்ஸின் அதிபர் லெஜண்ட் சரவணன் நடிக்கும் படத்தின் பூஜை டிச.1ம் தேதி ஞாயிறு நேற்று தொடங்கியது.
அவர்களின் தற்போதைய போராட்டம் கூட, ஏழைத் தனமாக இல்லாமல், பணக்காரத்தனமாக மாறியிருக்கிறது. அதற்கு உதாரணமாகத்தான், ராமேஸ்வரத்தில் அவர்கள் நேற்று நடத்திய போராட்டம் அமைந்திருந்தது.
கோவில் சிற்பங்களை ஏன் திருடி செல்கிறார்கள்? சிற்பங்களுக்கு ஏன் பல நூறு கோடிகள் கொடுத்து வாங்கி செல்கிறார்கள்? ஏன் அந்த கள்ள சந்தையும் கடத்தலும் இருக்கிறது?
தன்னோட கைலாஷ் நாட்டுக்கு தப்பி ஓடி விட்டார்... என்று ஊடகங்களில் கூறப்பட்ட நித்யானந்தா, தற்போது நம்முடைய கைலாஷ்ஷில் தான் உள்ளார் என்று தகவல் வெளியாகியுள்ளன.
கோவிலுக்கு மாலை போட்டிருந்த பள்ளி மாணவனை பள்ளி கழிவறையை சுத்தம் செய்யுமாறு வலியுறுத்திய ஆசிரியர் ... ஆசிட் கையில் கொட்டி மாணவனுக்கு படுகாயம் ஏற்பட்டதால், உறவினர்கள் பள்ளியை முற்றுகை!
மாவட்டத்தில் உள்ளாட்சித் தேர்தல் ரத்து செய்யப் பட்டுள்ளதால், மனு நீதி நாள், அம்மா திட்ட முகாம்கள் வழக்கம் போல் நடைபெறும் என்று ஆட்சியர் அறிவித்துள்ளார். இது குறித்து ஆட்சியர் வெளியிட்ட செய்தி குறிப்பில்...
புதிய பாஸ்போர்ட் கேட்டு நித்யானந்தா தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட விண்ணப்பம் நிராகரிப்பு; மற்ற பாஸ்போர்ட்டையும் ரத்து செய்துள்ளோம்! நித்யானந்தா எங்கு இருக்கிறார் என்பதை அறிவதில் சிரமம் இருக்கிறது - மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம்!
திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழாவுக்கு சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படாத, துணி மற்றும் சணல் பைகள் கொண்டு வருபவர்களுக்கு குலுக்கல் முறையில் தங்கம், வெள்ளி நாணயங்கள் வழங்கப்படுமாம்!
இது சரியாக அதிகாலை 4.45 மணி முதல் 6.15 மணிக்குள் நடந்தது. அவர்கள் 4 பேரையும் சம்பவ இடத்துக்கு அழைத்துச் செல்லும் போது 10க்கும் மேற்பட்ட போலீசார் காவலுக்கு சென்றனர்.
குரு பெயர்ச்சி பலன்கள் 2019 – 2020: குரு பகவான் நவ கோள்களில் தலையாய இடத்தைப் பெறுகிறார்.
குரு பார்க்க கோடி நன்மை என்பது சத்திய வாக்கு. அவரது பார்வை பட்டாலே ஜாதகன் சிறப்பாக இருப்பான் என்பதால், நாம் குரு பெயர்ச்சியை ஒட்டி, நமது ராசிக்கு குரு பகவான் எத்தகைய பலன்களைத் தரப்போகிறார் என்பதை அறிந்து கொள்ள மிகுந்த ஆவலுடன் காத்திருப்போம்.
இதோ இந்த குரு பெயர்ச்சி, ரிஷப ராசியினரான நமக்கு எத்தகைய பலன்களைத் தரப்போகிறது என்பதை இங்கே பார்ப்போம்…
துணிச்சல் மிகுந்தவரும் எல்லோராலும் விரும்பக் கூடியவராயும் இருக்கும் ரிஷப ராசிக்காரர்களே!
உங்கள் ஜனன ஜாதகத்தில் குருபகவான் சனி பகவான் நன்றாக இருந்தால் இந்த குரு பெயர்ச்சி பற்றி கவலை வேண்டாம். பொதுவாக குரு உங்கள் ராசிக்கு 8ம் இடத்துக்கு பெயர்ச்சி ஆகிறார் அங்கு ஏற்கனவே சனிபகவான்+கேது பகவான் இருக்கின்றனர்.
கடந்த காலங்களில் 8ல் சனி கஷ்டத்தை தந்தாலும் 7ல் குரு பகவான் காப்பாற்றி கொண்டிருந்தார். இப்பொழுது பிப்ரவரி 2020 வரை குரு+சனி+கேது இணைந்து சில சிக்கல்கள் இன்னல்களை தருவார்கள், ஜனன ஜாதகம் சுமாராக இருந்தால் பாதிப்புகள் அதிகமாகும், சமூக அந்தஸ்து குறையும், பொருளாதாரம் பாதிக்க படும் இருந்தாலும் ஒரு 50 % நன்மையும் உண்டு
மற்ற கிரஹ சஞ்சார நிலைகளாலும், ஜனவரியில் சனிபகவான் 9ல் செல்வதாலும், செவ்வாய் மற்றும் சுக்ரன் சஞ்சாரத்தால் நல்ல சில விஷயங்களும் பண வரவும் தரும். மொத்தத்தில் கலந்த பலன்களாய் இருந்து கொண்டிருக்கும்.
ஆரோக்கியம் :
ருண ரோக சத்ருஸ்தானதிபதியாக சுக்ரன் இருப்பதால் அந்த சுக்ரன் சஞ்சாரம் செப்டம்பர் 2020 வரை நன்றாக இருப்பதால் பெரியபாதிப்புகள் வராது, அதே நேரம் ஜனவரியில் சனி பகவான் 9ம் இடத்துக்கு செல்வதால் பெற்றோரின் உடல் நிலையில் பாதிப்பு வரலாம் அல்லது குழந்தைகள் சகோதரவகையில் கொஞ்சம் உடல் தொந்தரவுகள் ஏற்படலாம் இருந்தாலும் சரியான வைத்திய சிகிச்சையால் நோய் கட்டுப்படும். பொதுவாக இந்த குருபெயர்ச்சி முழுவதும் கொஞ்சம் உடல் படுத்தல் அல்லது குடும்ப அங்கத்தினரின் உடல் ஆரோக்கியம் பாதிக்கப்படும்.
குடும்பம் மற்றும் உறவுகள் :
குடும்ப ஸ்தானத்தில் ராகு இருப்பதாலும், 8ல் சனி கேது குரு இருப்பதாலும் சின்ன சின்ன பிரச்சனைகள் அல்லது வேலை, தொழில் நிமித்தமாக படிப்பு நிமித்தமாக குடும்பத்தை பிரியும் நிலை, சகோதரத்தினால் அல்லது உறவுகளால் தொல்லைகள், மன கசப்பு ஒருவரை ஒருவர் குற்றம் சொல்லி கொண்டிருத்தல் பணம் பிரச்சனை போன்றும் உங்கள் பேச்சை உறவினர்கள் மதிக்காமல் இருத்தலும் நடக்கும். எல்லோருடனும் கடுமையான வாக்குவாதம் இருக்கும். கூடுமானவரை தியான பயிற்சியை மேற்கொள்வதன் மூலம் இதை கட்டுப்படுத்தலாம், சமூகத்தில் அந்தஸ்து குறைய வாய்ப்புள்ளது.
உத்தியோகஸ்தர்கள்:
வேலையில் கவனமாய் இருக்க வேண்டிய தருணம், மேலதிகாரிகள் கோபம் உடன் வேலை செய்வோரால் தொந்தரவு அவப்பெயர் ஏற்படுதல் வேலை இழப்பு போன்றவையும் வழக்கு போன்ற பிரச்சனைகளும் உண்டாகும், மேலும் கேதுபகவான் குழப்பதை ஏற்படுத்தி ஒரு பயத்தை கொடுத்து கொண்டிருப்பார் அச்சத்தினால் தவறுகள் உண்டாகும் அதை சரிசெய்ய முடியாமல் அதனால் உத்தியோக இழப்பு ஏற்படலாம். இறைவனை கெட்டியாக பிடித்து கொள்வது நல்லது.
தொழிலதிபர்கள் / வியாபாரிகள் :
கணக்கு வழக்குகளி சரியாக வைத்து கொள்வதும், தொழிலாளர்களை விரோதித்து கொள்ளாமல் இருப்பதும், கூட்டாளிகளிடம் எச்சரிக்கையாக இருப்பதும், புதிய தொழில் தொடங்காமல் இருப்பது அல்லது தொழில் விஸ்தரிப்பு செய்யாமல் இருப்பது நல்லது, பயணங்களும் பலன் தராது, அரசாங்க அனுகூலம் இருக்காது. தொழிலாளர்களால் அதிக செலவு உண்டாகும். ஆடம்பரத்தை குறைத்து கொள்வது நல்லது.
அரசியல்வாதிகள்:
இந்த குரு பெயர்ச்சி சுமாரான பலனை தரும், மேலும் குரு சனி கேது சேர்க்கை கட்சி மேலிடத்தில் அவப்பெயர் அல்லது தொண்டர்களின் விரக்தி, பண விரயம், சோர்வு, அவ நம்பிக்கை போன்றவை உண்டாகும், எதிலும் கவனமாய் இருத்தலும், வீண் விவாதங்களை தவிர்ப்பதும், வாக்கு கொடுக்காமல் இருப்பதும் எதிரிகளை கவணிப்பதும் ஓரளவு நன்மை தரும்.
கலைஞர்கள் :
பண விரயம், அலுப்பு, எதிர்பார்த்த இடங்களில் தோல்வி, புதிய வாய்ப்புகள் நழுவி போகுதல், வீண் சிரமம், நண்பர்களால் தொல்லை, அலைச்சல், பெயர் கெடுதல், ரசிகர்கள் விலகுதல், துன்பம் இருக்கும், கூடுமானவரை சேமிப்பை பத்திரப்படுத்தி கொள்வது நல்லது, இந்த வருடம் பெரிய வாய்ப்புகள் வராது, கிடைக்கும் வாய்ப்பை பயன்படுத்தி சேமிப்பது நல்லது.
விவசாயிகள் :
புதிய வழக்குகள் உண்டாகும், விளைச்சல் குறையும், பணப்பயிர்கள் வெற்றியை தராது, கடன் தொல்லை உண்டாகும், கால்நடைகளால் மருத்துவ செலவு உண்டாகும், குடும்பத்தில் பிரச்சனைகள் இருக்கும், எதிலும் நிதானத்தை கடைபிடிப்பது நன்மை தரும்.
மாணவர்கள் :
புதன் ஜனன ஜாதகத்தில் நன்றாக இருந்தால் மட்டுமே குருவும் நன்றாக இருந்தால் இந்த குருபெயர்ச்சி பெரிய பாதிப்பை தராது, நண்பர்கள் சேர்க்கையை ஒழுங்கு படுத்துவது நல்லது. படிப்பில் கவனம் செலுத்த தியான பயிற்சி ஆசிரியரின் ஆலோசனை உதவும், பெற்றோர் வழிகாட்டுதல் படி நடப்பது, புதிய முயற்சிகளை தவிர்ப்பது நன்மை தரும். இந்த வருடம் சுமார். செப்டம்பர் 2020க்கு பின் ஓரளவு நன்மை உண்டாகும்.
பெண்கள் :
எதிலும் கவனமாய் இருத்தலும், வீண் விவாதங்களை தவிர்த்தலும், பெரியோர்களை மதித்தலும், குடும்பத்தினரை அனுசரித்து போகுதலும் நன்மை தரும், அக்கம்பக்கத்தாரோடு சுமூக சூழலை உண்டாக்குவது நல்லது, செலவுகள் அதிகரிக்கும், குடும்பத்தில் உறுப்பினர்களுடன் அடிக்கடி சண்டை உண்டாகும், கணவர் மனைவிக்குள் பிரிவு மன ஸ்தாபங்கள் உண்டாகும், உடல் உபாதைகளும் ஏற்படும், உழைக்கும் மகளீர் அதிக உழைப்பை சிந்தினாலும் பலன் குறைவு வேலையில் சிலபல பிரச்சனைகள் தோன்றி வேலையை விடும்படியும் இருக்கும். மகிழ்ச்சி குறைவு ஏற்படும்.
வணங்கவேண்டிய தெய்வமும் நல்ல செயல்களும் :
அருகில் உள்ள பெருமாள் கோவிலுக்கு சென்று விளக்கேற்றுங்கள் அஷ்டம சனி ஜனவரி 2020 வரை நடப்பதால் ஆஞ்சநேயரையும் சனீஸ்வர பகவானையும் வணங்குங்கள். அஷ்டம குரு தக்ஷிணாமூர்த்தியை வணங்குவதும் நன்மை தரும். கேதுவுக்கு பிள்ளையாரை வணங்குகள். பொருளாதாரத்தில் நலிவடைந்த உறவினர்களுக்கு உதவுங்கள், அன்னதானம் செய்யுங்கள், ஏழை மாணவர்கள் படிக்க உதவுங்கள்
குரு பெயர்ச்சி பலன்கள் – கணித்து வழங்குபவர்… லக்ஷ்மீ ந்ருஸிம்ஹாச்சாரி ஸ்ரீசார்வபௌம ஜோதிட நிலையம் FG,II block , Alsa Green Park ஹஸ்தினாபுரம் மெயின் ரோடு நேரு நகர், குரோம்பேட்டை, Near MIT Gate Phone : 044-22230808 Skype / Whats app : 8056207965 Email.: [email protected] Contact Timings for fixing appointment – 6 AM to 8 AM & 8.30 PM to 10 PM
ஒரு பாத்திரத்தில் மைதா மாவு, உப்பு, எண்ணெய் சிறிதளவு, தண்ணீர் சேர்த்து நன்றாக சப்பாத்தி மாவு போன்று சற்று தளர்வான பதத்திற்கு பிசைந்து கொள்ளவும். மாவை சிறு சிறு உருண்டைகளாக உருட்டி கொள்ளவும்.