December 5, 2025, 1:08 PM
26.9 C
Chennai

தமிழ்நாட்டில் மேல்சபை வேண்டாமே!

tnsecretariat

கட்சி சாராதவர்களை அப்பதவியில் அமர்த்த வேண்டும் என்ற காலம் மலை ஏறி விட்டது! எந்தக் கட்சியும் பிறர் விமர்சனத்தையோ, சுயவிமர்சனத்தையோ ஏற்கும் மனப்பாங்கு இன்றைய அரசியல் சூழலில் இந்தியாவில் இல்லை. எனவே இது ஒரு நிதிச்சுமையாக, குறுக்கீடுகளாகவே இருக்கும்

தமிழ்நாட்டில் ஒரு காலத்தில் மேல் சபை, சட்ட மன்றம் எடுக்கும் முடிவுகளை, திட்டங்களை, முன்மொழிதல்கள் முதலியவற்றை கல்வியாளர்கள், விஞ்ஞானிகள், பொருளாதார மேதைகள், அரசியல் ஆளுமை மிக்க தலைவர்கள் விவாதித்துச் சட்ட மன்ற முடிவுக்கு ஆலோசனை வழங்கிச் செயல்பட்டது.

ஆனால் இப்போது இந்திய அரசியலில் பதவி மோகமும்,
கட்சி மாறுவதும், கொள்கையில்லாத மனப்போக்கும் அதிகரித்து விட்டன. எந்தக் கட்சியும் ஆட்சியும் வல்லுநர்களின் விமர்சனத்தை ஏற்கும் மனப்பாங்கு இப்போது இல்லை.

இந்தச் சூழ்நிலையில் தமிழ்நாடு அரசு அதிகக் கடன் சுமையும், புதிய திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடும் செய்ய பெரு நிதியைப் பல வழிகளில் அதிகரிக்க வேண்டிய பொறுப்பு இருக்கிறது.

எனவே மாநில அரசு அமைத்துள்ள கொள்கை முடிவுக்
குழுவின் ஆலோசனைகளைப் பெற்று தமிழக அமைச்சர்கள் திட்டமிட்டுச் செயல்பட்டால் தமிழ்நாட்டை அறிவு வளமிக்க, தொழில் நிறைந்த, பொருளாதார வளர்ச்சிமிக்க உயர்த்த முடியும்.
கட்சிக்காரர்களுக்கும், கட்சிமாறி வந்தவர்களுக்கும்
பதவி கொடுக்க மேல்சபை உருவாக்கினால் நிதிச்சுமையும், அரசியல் சிக்கலும் விரைவான கொள்கை முடிவுகளில் தாமதம் ஏற்படும். இது ஆட்சிக்கு விரும்பி வரவேற்கும் இன்னொரு பிரச்னையாகி விடும்.

தாங்கள் விரும்பும் கட்சிக்காரர்களைத் திருப்திப்படுத்த வாரியங்களில் பதவி வழங்கலாம். அமைச்சர்களில் பல முறை பதவியில் இருந்தவர்களை மாற்றி விட்டுப் புதியவர்களுக்கு வாய்ப்புக் கொடுத்துக் கட்சியை, ஆட்சியை மேம்படுத்தலாம். 75 வயதுக்கு மேல் இருப்பவர்களைக் கட்சியின் வளர்ச்சிக்குழுவில் இடம் பெறச் செய்யும் விதிமுறையைக் கொண்டு வேண்டும். கட்சியில் மூத்த முன்னோடிகள் காலச்சூழலை அறிந்து முதியவர்கள் பதவியை விட்டுக்கொடுத்துத் தலைமைக்கு வலிமை சேர்க்க வேண்டும்.

எனவே தமிழ் நாடு அரசு கல்வி, மருத்துவம், தொழில், வேளாண்மை, அறிவியல் ஆராய்ச்சி, கலைப்பண்பாடு, நீர்மேலாண்மை, வேலைவாய்ப்பு முதலியவற்றில் திட்டமிட்டுச் செயல்பட மேலவை உருவாக்க முன்முயற்சிகளைக் கைவிட்டுச் சிறப்பான ஆட்சி நடத்த வேண்டுகிறேன்.

  • பெ.சுபாஷ் சந்திரபோஸ்,
    பேராசிரியர் (பணிநிறைவு), திருச்சி

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories