தமிழ்நாட்டில் மேல்சபை வேண்டாமே!

tnsecretariat

கட்சி சாராதவர்களை அப்பதவியில் அமர்த்த வேண்டும் என்ற காலம் மலை ஏறி விட்டது! எந்தக் கட்சியும் பிறர் விமர்சனத்தையோ, சுயவிமர்சனத்தையோ ஏற்கும் மனப்பாங்கு இன்றைய அரசியல் சூழலில் இந்தியாவில் இல்லை. எனவே இது ஒரு நிதிச்சுமையாக, குறுக்கீடுகளாகவே இருக்கும்

தமிழ்நாட்டில் ஒரு காலத்தில் மேல் சபை, சட்ட மன்றம் எடுக்கும் முடிவுகளை, திட்டங்களை, முன்மொழிதல்கள் முதலியவற்றை கல்வியாளர்கள், விஞ்ஞானிகள், பொருளாதார மேதைகள், அரசியல் ஆளுமை மிக்க தலைவர்கள் விவாதித்துச் சட்ட மன்ற முடிவுக்கு ஆலோசனை வழங்கிச் செயல்பட்டது.

ஆனால் இப்போது இந்திய அரசியலில் பதவி மோகமும்,
கட்சி மாறுவதும், கொள்கையில்லாத மனப்போக்கும் அதிகரித்து விட்டன. எந்தக் கட்சியும் ஆட்சியும் வல்லுநர்களின் விமர்சனத்தை ஏற்கும் மனப்பாங்கு இப்போது இல்லை.

இந்தச் சூழ்நிலையில் தமிழ்நாடு அரசு அதிகக் கடன் சுமையும், புதிய திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடும் செய்ய பெரு நிதியைப் பல வழிகளில் அதிகரிக்க வேண்டிய பொறுப்பு இருக்கிறது.

எனவே மாநில அரசு அமைத்துள்ள கொள்கை முடிவுக்
குழுவின் ஆலோசனைகளைப் பெற்று தமிழக அமைச்சர்கள் திட்டமிட்டுச் செயல்பட்டால் தமிழ்நாட்டை அறிவு வளமிக்க, தொழில் நிறைந்த, பொருளாதார வளர்ச்சிமிக்க உயர்த்த முடியும்.
கட்சிக்காரர்களுக்கும், கட்சிமாறி வந்தவர்களுக்கும்
பதவி கொடுக்க மேல்சபை உருவாக்கினால் நிதிச்சுமையும், அரசியல் சிக்கலும் விரைவான கொள்கை முடிவுகளில் தாமதம் ஏற்படும். இது ஆட்சிக்கு விரும்பி வரவேற்கும் இன்னொரு பிரச்னையாகி விடும்.

ALSO READ:  வெல்டன் அமித்ஷா… வாழ்த்துகள் அண்ணாமலை!

தாங்கள் விரும்பும் கட்சிக்காரர்களைத் திருப்திப்படுத்த வாரியங்களில் பதவி வழங்கலாம். அமைச்சர்களில் பல முறை பதவியில் இருந்தவர்களை மாற்றி விட்டுப் புதியவர்களுக்கு வாய்ப்புக் கொடுத்துக் கட்சியை, ஆட்சியை மேம்படுத்தலாம். 75 வயதுக்கு மேல் இருப்பவர்களைக் கட்சியின் வளர்ச்சிக்குழுவில் இடம் பெறச் செய்யும் விதிமுறையைக் கொண்டு வேண்டும். கட்சியில் மூத்த முன்னோடிகள் காலச்சூழலை அறிந்து முதியவர்கள் பதவியை விட்டுக்கொடுத்துத் தலைமைக்கு வலிமை சேர்க்க வேண்டும்.

எனவே தமிழ் நாடு அரசு கல்வி, மருத்துவம், தொழில், வேளாண்மை, அறிவியல் ஆராய்ச்சி, கலைப்பண்பாடு, நீர்மேலாண்மை, வேலைவாய்ப்பு முதலியவற்றில் திட்டமிட்டுச் செயல்பட மேலவை உருவாக்க முன்முயற்சிகளைக் கைவிட்டுச் சிறப்பான ஆட்சி நடத்த வேண்டுகிறேன்.

  • பெ.சுபாஷ் சந்திரபோஸ்,
    பேராசிரியர் (பணிநிறைவு), திருச்சி

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூலை 07 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

FIFA 2026: ரவுண்ட் 16ல் முதல் நாலு ஆட்டங்கள்!

          இதுவரை நடந்த ஆட்டங்களில் அர்ஜெண்டைனா அணியின் லியனல் மெஸ்ஸி, ஃபிரான்சு அணியின் கிலியன் மபாபே, நார்வே அணியின் எர்லிங் ஹாலந்து ஆகியோர் 7 கோல்கள் அடித்துள்ளனர். எகிப்து அணியின் மொகம்மது ஹனி ஆஸ்திரேலியா மற்றும் பெல்ஜியம் அணிக்கு எதிராக இரண்டு சுய கோல்கள் அடித்துள்ளார்.

IND Vs ENG T20: இங்கிலாந்தின் த்ரில் வெற்றி!

16ஆவது ஓவர் முடிவில் இங்கிலாந்து அணிக்கு 24 பந்துகளில் 49 ரன்கள் தேவைப்பட்டன. அப்பொது ரவி பிஷ்னோய் பந்து வீச வந்தார். முதல் பந்து நோபால். அடுத்த ஃப்ரீஹிட் பந்தில் பெதல் ஒரு சிக்சர் அடித்தார். அடுத்த பந்தை பிஷ்னோய் நோபாலாக வீசினார்.

பஞ்சாங்கம் ஜூலை 06 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

எரிவாயு கசிவு ஏற்பட்ட சிலிண்டர்; லாரி ஓட்டுநரின் அலட்சிய பதிலால் பரபரப்பு!

மதுரையில் நூற்றுக்கணக்கான கேஸ் சிலிண்டர்கள் எடுத்துச் சென்ற லாரியில் எரிவாயு கசிவு ஏற்பட்ட நிலையில், சாலையில் சென்றவர்கள் அச்சம் அடைந்தனர்.

Topics

பஞ்சாங்கம் ஜூலை 07 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

FIFA 2026: ரவுண்ட் 16ல் முதல் நாலு ஆட்டங்கள்!

          இதுவரை நடந்த ஆட்டங்களில் அர்ஜெண்டைனா அணியின் லியனல் மெஸ்ஸி, ஃபிரான்சு அணியின் கிலியன் மபாபே, நார்வே அணியின் எர்லிங் ஹாலந்து ஆகியோர் 7 கோல்கள் அடித்துள்ளனர். எகிப்து அணியின் மொகம்மது ஹனி ஆஸ்திரேலியா மற்றும் பெல்ஜியம் அணிக்கு எதிராக இரண்டு சுய கோல்கள் அடித்துள்ளார்.

IND Vs ENG T20: இங்கிலாந்தின் த்ரில் வெற்றி!

16ஆவது ஓவர் முடிவில் இங்கிலாந்து அணிக்கு 24 பந்துகளில் 49 ரன்கள் தேவைப்பட்டன. அப்பொது ரவி பிஷ்னோய் பந்து வீச வந்தார். முதல் பந்து நோபால். அடுத்த ஃப்ரீஹிட் பந்தில் பெதல் ஒரு சிக்சர் அடித்தார். அடுத்த பந்தை பிஷ்னோய் நோபாலாக வீசினார்.

பஞ்சாங்கம் ஜூலை 06 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

எரிவாயு கசிவு ஏற்பட்ட சிலிண்டர்; லாரி ஓட்டுநரின் அலட்சிய பதிலால் பரபரப்பு!

மதுரையில் நூற்றுக்கணக்கான கேஸ் சிலிண்டர்கள் எடுத்துச் சென்ற லாரியில் எரிவாயு கசிவு ஏற்பட்ட நிலையில், சாலையில் சென்றவர்கள் அச்சம் அடைந்தனர்.

சோலைமலை முருகன் கோயிலில் மகா கும்பாபிஷேகம்!

அழகர்கோவில்: மதுரை, அழகர் மலையில் அமையப்பெற்றுள்ளது சோலை மலை முருகன் கோவில் சிறப்புமிக்க இந்த பிரசித்தி பெற்ற சோலை மலை முருகன் கோவிலில் கடந்த 2014ம் ஆண்டு கும்பாபிஷேக விழா நடந்தது.

பஞ்சாங்கம் ஜூலை 05 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

திருப்பரங்குன்றத்தில் வருஷாபிஷேகம்

திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் வருஷாபிஷேகத்தை முன்னிட்டு யாகசாலை பூஜையுடன் துவங்கியது.

Entertainment News

Popular Categories