திராவிடம் வளர்த்த ‘சுயமரியாதை’!

erode election - 2026

ஈரோடு கிழக்கு தேர்தலில் மக்கள் கடத்தப்படுகிறார்கள் என்று கூறுகிறார்கள். கையைப் பிடித்து யாராவது இழுத்தார்களா? இல்லவே இல்லை. ஓசி சோறு, பணம், பொருட்கள் இதற்காக மக்களாக தாங்களாக விரும்பி சென்று அந்த இடங்களில் அடைபட்டுக் கொள்கிறார்கள்.

பணம், பேராசை இது எல்லாமே பெரும்பான்மை மக்கள் மனதில் மிக ஆழமாக ஊன்றியுள்ளது. நாடு, நாட்டு மக்கள் எல்லாம் நாசமாக போனாலும் போகட்டும். தங்களுக்கு கிடைக்க வேண்டிய அந்த 500 1000 ரூபாய் கிடைத்தால் போதும் என்ற அளவுக்கு பிச்சைக்காரர்களாக மக்கள் ஆகிவிட்டார்கள். தங்களுடைய கணவர்கள் கொல்லப்பட்டாலும் சரி, குடிக்கு அடிமையாகி இறந்தாலும் சரி, குடும்பமே அழிந்தாலும் சரி. பணம் மட்டும் கொடுத்தால் போதும், எதையும் செய்யக் கூடியவர்களாக மக்கள் குரூர மனம் கொண்டவர்களாக ஆகிவிட்டார்கள்.

எந்த இழப்பும் மிகவும் சாதாரணமான விஷயமாக பார்க்கப்படுகிறது. உயிர் பலி என்பது ஒன்றுமே இல்லை. தனிப்பட்ட முறையில் இழப்பு ஏற்பட்டாலும் கூட பரவாயில்லை, யார் இறந்தாலும் பரவாயில்லை, எந்தவிதமான கவலையும் இல்லை கணவன் தந்தை மனைவி மக்கள் என்று யார் இறந்தாலும் பரவாயில்லை, பணம் மட்டும் கொடுங்கள் போதும் என்ற அளவுக்கு பேராசை பிடித்தவர்களாக பணவெறி பிடித்தவர்களாக மக்கள் மாறிவிட்டார்கள்.

ALSO READ:  தமிழக பாஜகவுக்கு எந்த இஸம் சரியாக இருக்கும்?
erode eletion - 2026

இவர்கள் ஒன்றும் உணவுக்கே வழியில்லாத ஏழைகள் அல்ல. இதற்கு நிச்சயம் திமுக காரணம் அல்ல. நேர்மையான வாழ்க்கை வாழ வேண்டும் என்ற எண்ணங்களில் இருந்து மக்களை வேறு எங்கோ இட்டுச் சென்ற இறை மறுப்பு, நாத்திக சிந்தனை, பேராசை இவைதான் காரணம். மக்கள் மனதில் தர்ம சிந்தனை ஞாயம் நேர்மை எல்லாம் அர்த்தமற்ற சொற்களாக மாறிவிட்டன.

டாஸ்மாக்கில் இலக்கு வைத்தார்கள் என்கிறார்கள். வீட்டுக்குள் புகுந்து யாராவது பணத்தை பிடுங்கிக் கொண்டு போய் டாஸ்மாக்கில் கொடுத்து பாட்டிலை வாங்கிக் கொண்டு வந்த கையில் திணித்தார்களா? இல்லையே. நான் வரமாட்டேன் உங்கள் பிரியாணி பந்தலுக்கு என்று சொன்னால் யாராவது கோவிக்கப் போகிறார்களா? இல்லையே! பின் என்னதான் பிரச்சனை?

நேர்மையாக இருக்க வேண்டியது, நியாயமாக இருக்க வேண்டியது எல்லாமே அறிவற்ற செயல்கள் என்று மக்கள் மனதில் ஆழமாக பதிந்து விட்டது. பணம் பணம் பணம் மட்டுமே எல்லாமே என்ற சிந்தனை தான் மேலோங்கி இருக்கிறது.

கல்வி, விழிப்புணர்வு என்று எதைக் கொடுத்தாலும் சரி, இவர்கள் திருந்தவே போவதில்லை. இவர்களிடமிருந்து ஓட்டுரிமையை பிடுங்கி எடுப்பது மட்டுமே தீர்வாக அமையும்.

ALSO READ:  ‘இல்லத்தரசி கூப்பன்’ நன்மையா? நிதிச்சுமையா?

கருத்து: ஆனந்த் வெங்கட்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

வங்கத் தீர்ப்பு: இந்திய அரசியலில் நிலநடுக்கம்!

நேற்று எனக்கு ஒரு தகவல் கூறப்பட்டது. 'இண்டி' கூட்டணியில் உள்ள எந்தக் கட்சித் தலைவர்களும் மம்தா பானர்ஜியின் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை என்று கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு இதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் அது இனி வெளிப்படவிருக்கும் நிகழ்வுகளுக்கான ஒரு முன்னோட்டம் மட்டுமே.

முப்பெரும் ஊழல்களில் முதற் பெரும் ஊழல் துறை!

அற நிலையத்துறையைப் போன்ற சட்ட விரோதமான, சாசன விரோதமான, சமூக விரோதமான, சனாதன விரோதமான ஒரு அமைப்பு இந்த உலகில் எங்குமே இருக்கமுடியாது. உலகிலேயே சனாதன வாழ்வியல் ஆதி காலம் தொட்டு உன்னத நிலையில் இருந்துவந்த தமிழகத்தில்தான் இந்த நிலைமை என்பது மிகப் பெரிய, மிக வேதனையான நகைமுரண் தான்.

Topics

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

வங்கத் தீர்ப்பு: இந்திய அரசியலில் நிலநடுக்கம்!

நேற்று எனக்கு ஒரு தகவல் கூறப்பட்டது. 'இண்டி' கூட்டணியில் உள்ள எந்தக் கட்சித் தலைவர்களும் மம்தா பானர்ஜியின் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை என்று கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு இதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் அது இனி வெளிப்படவிருக்கும் நிகழ்வுகளுக்கான ஒரு முன்னோட்டம் மட்டுமே.

முப்பெரும் ஊழல்களில் முதற் பெரும் ஊழல் துறை!

அற நிலையத்துறையைப் போன்ற சட்ட விரோதமான, சாசன விரோதமான, சமூக விரோதமான, சனாதன விரோதமான ஒரு அமைப்பு இந்த உலகில் எங்குமே இருக்கமுடியாது. உலகிலேயே சனாதன வாழ்வியல் ஆதி காலம் தொட்டு உன்னத நிலையில் இருந்துவந்த தமிழகத்தில்தான் இந்த நிலைமை என்பது மிகப் பெரிய, மிக வேதனையான நகைமுரண் தான்.

பஞ்சாங்கம் ஜூன் 1 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

ராஜபாளையம் வழியே திருவனந்தபுரம் – கோவை சிறப்பு ரயில் அறிவிப்பு

கோடைகால சிறப்பு ரயிலாக திருவனந்தபுரம் வடக்கு - போத்தனூர் மற்றும் போத்தனூர் - திருவனந்தபுரம் சென்ட்ரல் இடையே தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

Entertainment News

Popular Categories