பச்சை நிற ஆவின் பால் பாக்கெட் தட்டுப்பாடு ஏன்?

file picture - representational image

“சென்னையில் பச்சை நிற ஆவின் பால் பாக்கெட்டிற்கு தட்டுப்பாடு”

– சு.ஆ. பொன்னுசாமி

சென்னையில் கடந்த ஆகஸ்ட் மாதம் 17ம் தேதி முதல் ஆவின் அனைத்து வகையான பால் பாக்கெட்டுகளும் 10% வரை குறைவாக அளவு நிர்ணயம் செய்து சீலிங் முறை வைத்து பால் முகவர்களுக்கு விநியோகம் செய்யப்பட்டு வந்த நிலையில் பச்சை நிற பாக்கெட்டில் வரும் 4.5% கொழுப்பு சத்து கொண்ட நிலைப்படுத்தப்பட்ட பால் பாக்கெட்டுகளை இன்று (15.09.2023) முதல் 30% குறைவான அளவில் வழங்கி விட்டு, அதே விற்பனை விலை கொண்ட, ஆனால் அதை விட 1% கொழுப்பு சத்து குறைவான ஊதா நிற பாக்கெட்டில் வரும் 3.5% பசும்பால் பாக்கெட்டுகளை தான் வழங்க முடியும், அல்லது 10% குறைவான அளவில் தான் பால் பாக்கெட்டுகள் விநியோகம் செய்ய முடியும் என ஆவின் நிர்வாகம் சண்டித்தனம் செய்து வருகிறது.

இந்த நிலையில் பால் முகவர்களுக்கு எந்தவிதமான முன்னறிவிப்போ, சுற்றறிக்கையோ இல்லாமல்,

ஆவின் நிர்வாகத்தின் சர்வாதிகாரம், மொத்த விநியோகஸ்தர்களின் அராஜகம் காரணமாக 30% அளவிற்கு பச்சை நிற ஆவின் பால் பாக்கெட்டுகளின் விநியோக அளவு திடீரென குறைக்கப்பட்டு, அதற்கு மாற்றாக சத்து குறைவான பசும்பால் பாக்கெட்டுகளை வழங்கியுள்ளதால் அந்த பாக்கெட்டுகளை சில்லரை வணிகர்களுக்கும், பொதுமக்களுக்கும் விநியோகம் செய்யும் கட்டாயத்திற்கு பால் முகவர்கள் தள்ளப்பட்டுள்ளனர். 

ஏற்கனவே 10% பால் பாக்கெட்டுகளின் எண்ணிக்கை அளவு குறைக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது 30% அளவு பச்சை நிற பால் பாக்கெட்டுகளின் அளவை குறைத்து  சத்து குறைவான பசும் பாலினை தான் வாங்கியாக வேண்டும் என நிர்பந்தம் செய்து வரும் ஆவின் நிர்வாகத்தின் சர்வாதிகார போக்கின் காரணமாக பால் முகவர்களிடம் சில்லரை வணிகர்களும், பொதுமக்களும் கருத்து மோதல்களில் ஈடுபடும் நிகழ்வுகள் அதிகரித்து வருகிறது. 

அத்துடன்  பால் முகவர்களிடம் அந்த வகை பாலினை வாங்க மறுத்து சண்டையிட்டு வருவதால் இறக்கி வைத்துள்ள ஊதா நிற பாக்கெட்டில் வரும் பால் பாக்கெட்டுகளை என்ன செய்வது என தெரியாமல் பால் முகவர்கள் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகி வருவதால் ஆவின் பால் விநியோகம் செய்யும் தொழிலை செய்து தான் ஆக வேண்டுமா..?, பேசாமல் இந்த தொழிலை விட்டு ஒதுங்கி விடலாமா..? என்கிற மன நிலைக்கு ஆளாகியுள்ளனர்.

ஆவின் நிர்வாகத்தின் சண்டித்தனத்தையும், சர்வாதிகார போக்கினையும் தடுக்க வேண்டிய பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் அவர்களோ ஆவினில் சதா ஆலோசனை கூட்டங்களை நடத்திக் கொண்டிருக்கிறாரே தவிர ஆக்கபூர்வமான தீர்வுகளை காணாமல் இருப்பது வேதனைக்குரிய விசயமாகும்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் தீவிபத்து..

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே மடத்துப் பட்டியில் இன்று 13 ஏப்ரல்...

ரமாபாய், சவிதா அம்பேத்கர்: இந்திய வரலாற்றில் மறைந்த உருவங்கள்!

ரமாபாயின் வாழ்க்கை வறுமை மற்றும் தனிமை படுத்தப்பட்டதான சூழ்நிலையில் இருந்தது. 1898 இல் மகாராஷ்டிராவில் ஒரு கடலோர கிராமத்தில் அவர் பிறந்தார்

ஆப்கன், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் எல்லையில் புதிய மாவட்டத்தை உருவாக்கும் சீனா!

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் (PoK), ஆப்கானிஸ்தான் எல்லைக்கு அருகில் சீனா புதிய மாவட்டத்தை அமைக்கிறது; இது இந்தியாவிற்கு கவலை அளிக்கும் அம்சம்.

தேசம் தீர்வுகளைத் தேடும்போது, திமுக சர்ச்சைகளை உருவாக்குகிறது: நிர்மலா சீதாராமன்

தேசம் தீர்வுகளைத் தேடும்போது, திமுக சர்ச்சைகளை உருவாக்குகிறது. மத்திய அரசு ஆக்கப்பூர்வமான ஒத்துழைப்பை நல்கும்போது, திமுக அதைத் தேர்தல் அரசியலுக்காகச் சுரண்டப் பார்க்கிறது.

பஞ்சாங்கம் ஏப்ரல் 13 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் தீவிபத்து..

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே மடத்துப் பட்டியில் இன்று 13 ஏப்ரல்...

ரமாபாய், சவிதா அம்பேத்கர்: இந்திய வரலாற்றில் மறைந்த உருவங்கள்!

ரமாபாயின் வாழ்க்கை வறுமை மற்றும் தனிமை படுத்தப்பட்டதான சூழ்நிலையில் இருந்தது. 1898 இல் மகாராஷ்டிராவில் ஒரு கடலோர கிராமத்தில் அவர் பிறந்தார்

ஆப்கன், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் எல்லையில் புதிய மாவட்டத்தை உருவாக்கும் சீனா!

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் (PoK), ஆப்கானிஸ்தான் எல்லைக்கு அருகில் சீனா புதிய மாவட்டத்தை அமைக்கிறது; இது இந்தியாவிற்கு கவலை அளிக்கும் அம்சம்.

தேசம் தீர்வுகளைத் தேடும்போது, திமுக சர்ச்சைகளை உருவாக்குகிறது: நிர்மலா சீதாராமன்

தேசம் தீர்வுகளைத் தேடும்போது, திமுக சர்ச்சைகளை உருவாக்குகிறது. மத்திய அரசு ஆக்கப்பூர்வமான ஒத்துழைப்பை நல்கும்போது, திமுக அதைத் தேர்தல் அரசியலுக்காகச் சுரண்டப் பார்க்கிறது.

பஞ்சாங்கம் ஏப்ரல் 13 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

ஈரான் விஷயத்தில் பாரதம் ஏன் தலையிடவில்லை?!

தமிழில் ஒரு பழமொழி சொல்வார்கள். தெரியாத இருவர் அல்லது நமக்கு தொடர்பில்லாத யாரோ இருவர் தெருவில் சண்டை போட்டுக் கொண்டிருக்கும் போது,

பஞ்சாங்கம் ஏப்ரல் 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

ஜனநாயகன் – விளக்கம் கொடுத்த சென்சார் போர்ட்; யார் பார்த்த வேலை இது?

தணிக்கை சான்றிதழ் வேண்டி சமர்ப்பிக்கப்படும் அனைத்து திரைப்படங்களுக்கும் KDM எனப்படும் ஒரு பாதுகாப்பான முறையை திரைப்பட தணிக்கை வாரியம் பின்பற்றுகிறது.

Entertainment News

Popular Categories