பச்சை நிற ஆவின் பால் பாக்கெட் தட்டுப்பாடு ஏன்?

file picture - representational image

“சென்னையில் பச்சை நிற ஆவின் பால் பாக்கெட்டிற்கு தட்டுப்பாடு”

– சு.ஆ. பொன்னுசாமி

சென்னையில் கடந்த ஆகஸ்ட் மாதம் 17ம் தேதி முதல் ஆவின் அனைத்து வகையான பால் பாக்கெட்டுகளும் 10% வரை குறைவாக அளவு நிர்ணயம் செய்து சீலிங் முறை வைத்து பால் முகவர்களுக்கு விநியோகம் செய்யப்பட்டு வந்த நிலையில் பச்சை நிற பாக்கெட்டில் வரும் 4.5% கொழுப்பு சத்து கொண்ட நிலைப்படுத்தப்பட்ட பால் பாக்கெட்டுகளை இன்று (15.09.2023) முதல் 30% குறைவான அளவில் வழங்கி விட்டு, அதே விற்பனை விலை கொண்ட, ஆனால் அதை விட 1% கொழுப்பு சத்து குறைவான ஊதா நிற பாக்கெட்டில் வரும் 3.5% பசும்பால் பாக்கெட்டுகளை தான் வழங்க முடியும், அல்லது 10% குறைவான அளவில் தான் பால் பாக்கெட்டுகள் விநியோகம் செய்ய முடியும் என ஆவின் நிர்வாகம் சண்டித்தனம் செய்து வருகிறது.

ALSO READ:  தமிழக பாஜக.,வுக்கான பஞ்ச சீலக் கொள்கைகள் இவையாக இருக்கட்டும்!

இந்த நிலையில் பால் முகவர்களுக்கு எந்தவிதமான முன்னறிவிப்போ, சுற்றறிக்கையோ இல்லாமல்,

ஆவின் நிர்வாகத்தின் சர்வாதிகாரம், மொத்த விநியோகஸ்தர்களின் அராஜகம் காரணமாக 30% அளவிற்கு பச்சை நிற ஆவின் பால் பாக்கெட்டுகளின் விநியோக அளவு திடீரென குறைக்கப்பட்டு, அதற்கு மாற்றாக சத்து குறைவான பசும்பால் பாக்கெட்டுகளை வழங்கியுள்ளதால் அந்த பாக்கெட்டுகளை சில்லரை வணிகர்களுக்கும், பொதுமக்களுக்கும் விநியோகம் செய்யும் கட்டாயத்திற்கு பால் முகவர்கள் தள்ளப்பட்டுள்ளனர். 

ஏற்கனவே 10% பால் பாக்கெட்டுகளின் எண்ணிக்கை அளவு குறைக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது 30% அளவு பச்சை நிற பால் பாக்கெட்டுகளின் அளவை குறைத்து  சத்து குறைவான பசும் பாலினை தான் வாங்கியாக வேண்டும் என நிர்பந்தம் செய்து வரும் ஆவின் நிர்வாகத்தின் சர்வாதிகார போக்கின் காரணமாக பால் முகவர்களிடம் சில்லரை வணிகர்களும், பொதுமக்களும் கருத்து மோதல்களில் ஈடுபடும் நிகழ்வுகள் அதிகரித்து வருகிறது. 

அத்துடன்  பால் முகவர்களிடம் அந்த வகை பாலினை வாங்க மறுத்து சண்டையிட்டு வருவதால் இறக்கி வைத்துள்ள ஊதா நிற பாக்கெட்டில் வரும் பால் பாக்கெட்டுகளை என்ன செய்வது என தெரியாமல் பால் முகவர்கள் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகி வருவதால் ஆவின் பால் விநியோகம் செய்யும் தொழிலை செய்து தான் ஆக வேண்டுமா..?, பேசாமல் இந்த தொழிலை விட்டு ஒதுங்கி விடலாமா..? என்கிற மன நிலைக்கு ஆளாகியுள்ளனர்.

ALSO READ:  தமிழக பாஜகவுக்கு எந்த இஸம் சரியாக இருக்கும்?

ஆவின் நிர்வாகத்தின் சண்டித்தனத்தையும், சர்வாதிகார போக்கினையும் தடுக்க வேண்டிய பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் அவர்களோ ஆவினில் சதா ஆலோசனை கூட்டங்களை நடத்திக் கொண்டிருக்கிறாரே தவிர ஆக்கபூர்வமான தீர்வுகளை காணாமல் இருப்பது வேதனைக்குரிய விசயமாகும்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூலை 19 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

ஆடிப் பூர நாளில் நந்தவனத்தில் எழுந்தருளிய ஆண்டாள்!

ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் கோவில் ஆடி மாதம் பூரம் நட்சத்திரத்தை முன்னிட்டு ஆண்டாள் திரு ஆடி பூர நந்தவனத்தில் எழுந்தருளல் நிகழ்வு இன்று சனிக்கிழமை விமர்சையாக நடைபெற்றது.

விளையாட்டுக்கு முன்னுரிமை கொடுக்கும் மத்திய பாஜக அரசு: நிதியமைச்சர் நிர்மலா சீத்தாரமன்!

விளையாட்டுக்கு முன்னுரிமை கொடுக்கும் கட்சி மோடி தலைமையிலான மத்திய பாஜக அரசு-மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீத்தாரமன் பேசினார்.

உணவுப் பொருட்களை நஞ்சில்லாமல் உற்பத்தி செய்யும் விவசாயிகள் கடவுளுக்கு நிகரானவர்கள்!

உணவுப்பொருட்களை நஞ்சில்லாமல் உற்பத்தி செய்யும் விவசாயிகள் கடவுளுக்கு நிகரானவர்கள் உங்களை வணங்குகிறேன்-சம்பா மிளகாய் மதிப்புக்கு கூட்டப்பட்ட உற்பத்தி நிறுவனமான குளோபல் சில்லி அக்ரோ பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனத்தை திறந்து வைத்து

பஞ்சாங்கம் ஜூலை 18 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

Topics

பஞ்சாங்கம் ஜூலை 19 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

ஆடிப் பூர நாளில் நந்தவனத்தில் எழுந்தருளிய ஆண்டாள்!

ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் கோவில் ஆடி மாதம் பூரம் நட்சத்திரத்தை முன்னிட்டு ஆண்டாள் திரு ஆடி பூர நந்தவனத்தில் எழுந்தருளல் நிகழ்வு இன்று சனிக்கிழமை விமர்சையாக நடைபெற்றது.

விளையாட்டுக்கு முன்னுரிமை கொடுக்கும் மத்திய பாஜக அரசு: நிதியமைச்சர் நிர்மலா சீத்தாரமன்!

விளையாட்டுக்கு முன்னுரிமை கொடுக்கும் கட்சி மோடி தலைமையிலான மத்திய பாஜக அரசு-மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீத்தாரமன் பேசினார்.

உணவுப் பொருட்களை நஞ்சில்லாமல் உற்பத்தி செய்யும் விவசாயிகள் கடவுளுக்கு நிகரானவர்கள்!

உணவுப்பொருட்களை நஞ்சில்லாமல் உற்பத்தி செய்யும் விவசாயிகள் கடவுளுக்கு நிகரானவர்கள் உங்களை வணங்குகிறேன்-சம்பா மிளகாய் மதிப்புக்கு கூட்டப்பட்ட உற்பத்தி நிறுவனமான குளோபல் சில்லி அக்ரோ பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனத்தை திறந்து வைத்து

பஞ்சாங்கம் ஜூலை 18 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

திருச்சூரில் கோலாகலமாக நடைபெற்ற ‘ஆனையூட்டு’ நிகழ்வு!

திருச்சூரில் உள்ள ஸ்ரீ வடக்குநாதர் கோயிலில் ஆண்டுதோறும் ஆடி கர்கடகம் முதல் நாள் நடைபெறும் 'ஆனையூட்டு' விழா மிக பிரபலமான சமூக விழாவாகும்.

வாஞ்சி பிறந்த தினத்தில் ஒரு கோரிக்கை!

‘விவேக் எக்ஸ்பிரஸ்’ போல், வாஞ்சி எக்ஸ்பிரஸ் என இந்த ரயிலுக்கு பெயர் சூட்டி தினசரி இயக்கினால், மக்கள் மத்தியில் சுதந்திரப் போராட்ட வீரரின் பெயரை நினைவூட்டுவதாகவும், நாட்டின் விடுதலைக்கு நம் தென்னகம் செய்த தியாக வரலாறு மக்கள் மனதில் பதியும் வகையிலும் அமையும்!

சுஷ்ருதர் சிலைத் திறப்பு சொல்லும் சேதி!

மாறாக அறிவை தொகுத்து அதை அடுத்தடுத்த தலைமுறைக்கு கொண்டு சென்றதன் மூலமாக வாழ்ந்தன. அறிவியல் ஆர்வம், அறிவார்ந்த ஒழுக்க நெறி ஆகியவற்றின் குறியீடாக இருக்கும் சுஷ்ருதரின் பாரம்பரியம் தொடர்ந்து உத்வேகம் அளித்து வருகிறது.

Entertainment News

Popular Categories