நீட்டிப்பார்களா..?!

annamalai in trichy meeting - 2026

அண்ணாமலை தமிழக பாஜக தலைவராக நீடிப்பாரா?

ஒரு அளவுக்கு மேல் மற்ற ஒருவர் எப்படிச் செயல்படுவார் என்பதை நமது அன்றாட வாழ்வில் கூட நாம் நூறு சதவிகிதம் சரியாகச் சொல்ல முடியாது. நாம் நாம்தான், அடுத்தவர் அடுத்தவர்தான்.

அரசியல் உலகில், ஒரு கட்சித் தலைவர் எடுக்கும் முடிவுகளைப் பற்றிய நிச்சயமற்ற தன்மை, நம் போன்ற பொது மக்களைப் பொறுத்தவரை, இன்னும் அதிகமாக இருக்கும்.

அடுத்தவர் முடிவைப் பற்றிய இந்த நிச்சயமற்ற தன்மை காரணமாக, யாரும் அதைப் பற்றி எந்த ஹேஷ்யமும் துணிந்து செய்யலாம். அதுவும் வேலையும் பொறுப்பும் இல்லாதவர்கள், பற்ற வைப்பவர்கள், கற்பனாவாதிகள், காக்கா, குருவி, கழுகு பட்சிகள் போன்றோர் குஷியாக ஒன்று செய்யலாம். அதாவது, பழனிசாமியுடனும் அண்ணாமலையுடனும் அமித் ஷா பேசும்போது காற்றோடு காற்றாகக் கலந்து யார் கண்ணிலும் படாமல் அவர்களுக்கு நடுவில் மிதந்தபடி அவர்களின் உரையாடல்களைக் குறித்துக் கொண்டு அவர்களின் முகபாவங்களையும் மனதில் பதித்து வைத்த மாதிரி, செய்திகள் உலவ விடலாம்.

அமித் ஷா என்ற மூன்றாம் மனிதர் அந்தக் கற்பனாவாதிகள் எழுதுகிற முடிவைத் தானே – மோடியைத் தவிர யாரிடமும் சொல்லாமல் – எடுக்கலாம். அமித் ஷா அப்படி ஒரு முடிவை – அதாவது, அண்ணாமலை பாஜக தலைமைப் பொறுப்பிலிருந்து விலகுவது மாதிரியான முடிவை – தானாக, முன்கூட்டி வெளி உலகிற்குத் தன் முடிவைக் கசியவிடாமல், எடுத்துப் பின்னர் அறிவித்தால், “பார்த்தீர்களா, நாங்கள் முன்னமே இதைக் கரெக்டாக சொல்லிவிட்டோம்!” என்று ஹேஷ்ய எழுத்தாளர்கள் தம்மைத் தாமே மெச்சிக் கொள்ளலாம்.

ஒருவேளை, கற்பனாவாதிகள் எழுதியபடி ஒன்றும் நடக்கவில்லையா, அவர்கள் இன்னொரு திருப்பத்தை உடனே உண்டுபண்ணலாம். “கடைசி நேரத்தில் மோடி குறுக்கிட்டு அமித் ஷாவின் முடிவை மாற்றி விட்டார்!” என்று கற்பனாவாதிகள் ஒரு போடு போடலாம் – அதை நம்பவும் தமிழகத்தில் நிறைய மனிதர்கள் உண்டு!

நாம் இப்போது சரியாக செய்யத் தக்கது ஒன்றுதான். அரசியல் உலகில் என்ன நடக்கிறது, என்ன ஆகப் போகிறது, என்று பொறுத்திருந்து பார்க்க வேண்டும். இப்போதைக்கு அவ்வளவுதான் நம்மால் செய்ய முடியும்.

ஆர். வி. ஆர்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

அரசியல்வாதிகள் போல் செயல்படும் அரசு அதிகாரிகள்: இந்து முன்னணி கண்டனம்!

எனவே அரசியல் சாசன சட்டத்தை மதித்து மக்கள் நலனை கருத்தில் கொண்டு அரசு அதிகாரிகள் செயல்பட வேண்டும் என்று இந்துமுன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

Topics

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

அரசியல்வாதிகள் போல் செயல்படும் அரசு அதிகாரிகள்: இந்து முன்னணி கண்டனம்!

எனவே அரசியல் சாசன சட்டத்தை மதித்து மக்கள் நலனை கருத்தில் கொண்டு அரசு அதிகாரிகள் செயல்பட வேண்டும் என்று இந்துமுன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

தமிழகத்தில் பெட்ரோல் டீசலுக்கு தட்டுப்பாடா? உண்மை என்ன?

தமிழ்நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் தடையின்றி தொடர்ந்து கிடைக்கும் என்பதை மீண்டும் உறுதி செய்கிறது.

அமெரிக்காவில் 1.7 பில்லியன் ஆண்டுகள் பழமையான விஷ்ணு பாறைகள்

இந்த விஷ்ணு கோவில் அல்லது விஷ்ணுப் பாறைகளுக்கு அருகே மேலு இரண்டு பாறைத் தொடர்களுக்கு ப்ரும்மா பாறை, ராம் பாறை என்றும் பெயரிடப்பட்டிருக்கிறது.

Entertainment News

Popular Categories