இந்தியர்களுக்கு ட்ரம்ப் எடுத்த பாடம்!

donald trump - 2026

ட்ரம்ப் சரி! நாம தான் தப்பு!

கூகுள் சி இ ஓ யார் தெரியுமா?
மைக்ரோசாஃப்ட், யூட்யூப், ஃபெட் எக்ஸ், அடோப், ஐபிஎம், அட அவ்வளவு ஏங்க வேர்ல்டு பேங்க் சி இ ஓ வே இந்தியன் தான். நாம இல்லாம அமெரிக்காவே நகராது….
இல்லையா?
இல்லை.

மேலே சொன்ன அத்தனை கம்பெனிகளுக்கும் ஓனர் யாரு? அமெரிக்கன்ஸ்…
நாம யாரு? லேபரரூ…
என்ன வித்யாசம்?
நம்ம அம்மா அப்பா நம்மள என்ன சொல்லி வளர்த்தார்கள்? நல்லா படி மகனே/மகளே நல்லா படிச்சு நல்ல வேலைக்குப் போயி கை நிறைய சம்பாதிச்சு நிம்மதியா வாழணும்.

எந்த ரிஸ்க்கும் இல்லாம, நல்ல வேலையில் சேர்ந்து மாசமாசம் நல்ல சம்பளம் வாங்கணும். அவ்வளவு ஏன், நல்ல மாப்பிள்ளைங்க, நல்ல கம்பெனியில வேலை பார்க்கிறார். நிரந்தர வேலை. தைரியமா பொண்ணைக் கொடுக்கலாம்.
காக்காசா இருந்தாலும் கவர்மெண்ட் காசா இருக்கோணும்.
எந்தப் பெற்றவர்களும் தொழில் தொடங்கு, நிர்வாகம் செய்னு சொன்னதே இல்லை.

அமெரிக்கன்ஸ் / ஐரோப்பியன்ஸின் பலமே மேனேஜ்மெண்ட்ல ஸ்ட்ராங்காக இருப்பது தான். ”பால் கெட்டி” என்ற முன்னாள் கோடீஸ்வரரை நிறைய பேருக்குத் தெரிந்திருக்கும் ராக் பெல்லர் மாதிரியான பெரிய தொழிலதிபர். அவருடைய அப்பாவும் பெரிய தொழிலதிபர் தான். வருடத்திற்கு சில நூறு டாலர்கள் மட்டுமே கொடுப்பாராம். இதை வைத்து தொழில் செய்து பிழைத்துக் கொள். இதுவும் ஒருசில ஆண்டுகளுக்கு மட்டுமே கொடுப்பேன். பிழைத்தால் பிழைத்துக் கொள் இல்லையென்றால் அப்படியே ஓடிடுனு சொல்லியிருக்கார்.

அந்தக் காலத்தில் சில நூறு டாலர் என்பது பெரிய விசயம் தான். நாமாக இருந்தால் என்ன செய்திருப்போம்? ஒரு ஹோட்டலோ, டிபார்ட்மெண்ட் ஸ்டோரோ ஆரம்பித்திருப்போம். பால்கெட்டி என்ன செய்தார் என்றால், வளைகுடா நாடுகளுக்குச் சென்று இருக்கும் காசையெல்லாம் வைத்து எண்ணெய்க் கிணறுகளைத் தோண்டினார். இரண்டு வருடங்களாக ஒவ்வொரு முயற்சியும் தோல்வி. எனினும் ரிஸ்க் எடுத்து கடைசியில் உலகத்தின் முதல் மூன்று கோடீஸ்வரர்களில் ஒருவரானார்.

இன்றைக்கும் நம் மக்கள் என்ன செய்கிறோம்? ஐடி / கம்.சைன்ஸ்/மெக்.எஞ்சினியர் என்று வேலைக்குப் போகும் மனநிலையிலேயே படிப்பைத் தேர்ந்தெடுக்கிறோம்.

குறைந்தபட்சம் கல்லூரியிலிருந்தாவது மேனேஜ்மெண்ட் படிப்பினை விரும்பிப் படிக்கிறோமா? கடனுக்கு எம்பிஏ பட்டம் வாங்கிட்டு அதைக் காட்டி ஒரு ப்ரமோஷன் வாங்கிக்கிறோம்.

இன்றைக்கு நாம இல்லாட்டி அமெரிக்கா இல்லைனு நாமளா கற்பனை பண்ணிக்கிறோம். நாம இல்லாட்டி, இந்தோனேசியா, வியட்நாம், மெக்ஸிகோ, ப்ரெஸில், நைஜீரியா, எத்யோப்பியா போன்ற நாடுகளிலிருந்து ஆட்களைத் தூக்கிட்டு வந்து ட்ரெய்ன் பண்ணி தொழிலை நடத்திக் கொள்வான். நாம தான் அங்கே வேலை போனதும், ஏய்.. இந்திய அரசே! வேலை கொடுக்க வக்கில்லையா? எங்கள் அறிவை பயன்படுத்திக் கொள்ளும் ஆற்றல் இல்லையா என்று வெட்கமே இல்லாமல் அடுத்தவர்கள் மீது பழி போடுவோம்.

கொஞ்சம் யோசித்தீர்களா?
சுந்தர் பிச்சை, அஜய் பங்கா, ராஜ் சுப்பிரமணியம், அரவிந்த் கிருஷ்ணா எல்லாம் தன் கையிலிருக்கும் கோடான கோடியை வைத்து ஏன் தனியாக ஒரு கூகுள், ஐபிஎம், பேங்க், ஃபெட் எக்ஸ் போன்றதொரு கம்பெனியை ஆரம்பிக்கவில்லை என்று?

இவர்களெல்லாம் கம்பெனி ஆரம்பிப்பதாகச் சொன்னாலே உலகம் முழுவதுமிருந்து முதலீடுகள் கொட்டும். ஏன் ஆரம்பிக்கவில்லை.

அந்த வகையில், ஸோகோ ”ஸ்ரீதர் வேம்பு” ஒரு வைடூரியம். ரிஸ்க் எடுத்த தேசப்பற்றாளர். ஆனால், நமக்கெல்லாம் ஐடி நிறுவனம் என்றாலே வெளிநாட்டுக்குச் சேவை செய்யும் இன்ஃபி மாதிரியான கம்பெனிகள் தான் நினைவுக்கு வருகிறது.

ஏனெனில், நமக்கு நிர்வாகரீதியாக வெற்றி பெற்றவர்களைக் கொண்டாடுவதை விட வேலை செய்து வெற்றிபெற்றவர்களே ஹீரோக்களாகப் படுகிறார்கள். சினிமா தயாரிப்பாளர்களை விட நடிகர்களே ஹீரோவாகப் பார்ப்பது போல…

இனியாவது நம் குழந்தைகளுக்கு நிர்வாக மேலாண்மையின் அவசியத்தையும், கல்வியையும் போதிப்போம். அடுத்த சில தசாப்தங்களில் உலக வல்லரசாவோம்.

அது வரை இன்னிக்கு ட்ரம்ப் என்ன அறிக்கை விடப் போகிறார்னு எக்ஸ்/ட்ரூத் ஆப்களை ரெஃப்ரெஷ் பண்ணிட்டே காத்திருக்க வேண்டியது தான்.

  • ஆனந்தன் அமிர்தன்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

Topics

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

அரசியல்வாதிகள் போல் செயல்படும் அரசு அதிகாரிகள்: இந்து முன்னணி கண்டனம்!

எனவே அரசியல் சாசன சட்டத்தை மதித்து மக்கள் நலனை கருத்தில் கொண்டு அரசு அதிகாரிகள் செயல்பட வேண்டும் என்று இந்துமுன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

தமிழகத்தில் பெட்ரோல் டீசலுக்கு தட்டுப்பாடா? உண்மை என்ன?

தமிழ்நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் தடையின்றி தொடர்ந்து கிடைக்கும் என்பதை மீண்டும் உறுதி செய்கிறது.

Entertainment News

Popular Categories