இன்று ஒரு தகவல்: இந்திய விமானப் படை தினத்தில்…!

indian air force day - 2026

இன்று இந்திய விமானபடை தினம், இன்றைய உலகின் சக்திவாய்ந்த விமானபடையில் இந்தியா மிக முக்கிய இடத்தில் இருக்கின்றது, விமானபடையினை ஒப்பிடும்போது சீன விமானபடையினை விட இந்தியாவின் திறன் அதிகம் என்பதே நிஜம்

93 ஆண்டுக்கு முன் பிரிட்டிஷ் ஆட்சியில் இந்திய விமானபடை தொடங்கபட்டது அப்போதுதான் விமான யுத்தம் உலகுக்கு அறிமுகமாகியிருந்தது இந்தியாவோ பிரிட்டனின் அடிமை தேசமாக இருந்தது

அதுவரை கோட்டைகள், குதிரைகள், பீரங்கிகள் என்றிருந்த களம் விமான வருகைக்கு பின் கடுமையாக மாறிற்று, மேற்கு நாடுகள் இப்படி மாறும்போது இந்தியா பிரிட்டிசாரின் பிடியில் உறிஞ்சபட்டு கொண்டிருந்தது

சுதந்திரம் இங்கு வெறுமனே கொடுக்கபடவில்லை காலடியில் தலையில் பக்கவாட்டில் பாகிஸ்தான் எனும் குட்டிசாத்தானை வைத்து காலத்துக்கும் இந்தியா முன்னேறாதபடி சூழ்ச்சி செய்து கொடுக்கபட்டது

இந்தியாவின் விமானபடை சுதந்திரமான புதிதில் பெரிதாக ஒன்றுமில்லை இதனாலேதான் பாகிஸ்தானால் காஷ்மீருக்குள் புகுந்துவிட முடிந்தது, சீன போரிலும் இந்திய விமானபடை சாதிக்க முடியவில்லை

1965 போர் அப்படித்தான் ஆனால் 1971 போரில் இந்திய விமானபடை மெல்ல எழுச்சி காட்டிற்று அது செய்த நுணுக்கமான தாக்குதலும் வங்கபோர் வெற்றிக்கு காரணம், அப்போரில் கடற்படை பெரும் சாகசம் செய்தது என்றாலும் விமானபடை பக்கபலமாக நின்றது

பின் இந்தியா மெல்ல மெல்ல தன் விமானபடையினை வலுபடுத்தியது முதலில் சோவியத் விமானங்கள் மட்டும் இருந்தன பின் பிரான்ஸின் ஜாகுவார் மிராஜ் விமானங்கள் வந்தன, இந்தியாவின் பாதுகாப்பு பலபடுத்தபட இன்னும் அது வளர்ந்தது

ALSO READ:  மெட்ரோ அரசியல்!

1980க்கு பின் இந்திய விமானபடை புதிய உச்சத்தினை எட்ட ஆரம்பித்தது, இந்தியாவில் அது ராணுவ பலம் மட்டுமல்ல பல நாடுகளில் நிவாரணம் காவல் என பெரும் கடமையாற்றியது

இலங்கையில் 1987ல் விமானத்தில் இருந்து உணவுபொருள் வீசி இலங்கையினை மிரட்டியது தொடங்கி உலகின் பல பாகங்களிலும் இந்திய விமானபடை சாகசம் செய்தது முக்கியமாக நிலநடுக்கம் புயல் என பல விஷயங்களில் பல நாடுகள் பாதிக்கபடும் போது இந்திய விமானபடையின் பெரிய விமானங்களே பொருட்களுடன் முதலில் செல்லும்

இந்திய விமானபடையின் முதல் முக்கிய வெற்றி கார்கில் போர், அங்கு தரைபடை அடிவாங்கும் போது விமானபடைதான் கைகொடுத்தது அதுவும் மிராஜ் ரக விமானங்கள் சாசகம் செய்தபின்பே பாகிஸ்தான் தரப்பு ஓடிற்று

இந்திய தரப்பின் விமானபடையின் பலம் அதிகரிப்பதை கண்டே பாகிஸ்தானுக்கு அமெரிக்கா எப் 16 ரகத்தை கொடுத்தது

இந்திய விமானபடை பெரும் எழுச்சி பெற்றது நிச்சயம் மோடி காலத்தில்தான் அதுதான் தரமான ரபேல் விமானங்களை வாங்கியது, இன்னும் 100 விமானங்களுக்கு பதிவு செய்திருக்கின்றது

இந்தியாவில் சொந்தமாக தேஜஸ் விமானங்கள் தயாரிககப்டுகின்றன, உச்சமாக ஆறாம் தலைமுறை விமானத்தை தேசமே தயாரிக்கும் பணியில் இறங்கியிருக்கின்றது

பால்கோட் தாக்குதலில் இந்திய விமானபடையின் பங்கு அளப்பறியது என்றாலும் கடந்த மே மாதம் நடந்த ஆப்பரேஷ்ன் சிந்தூர் இந்திய விமானபடையின் பலத்தை உலகம் வியக்க சொன்னது

நான்கே நாட்களில் கப்பல் படை, தரைபடை உதவியின்றி பாகிஸ்தானை தனி அணியாக பந்தாடி காட்டியது இந்திய விமானபடை, மிக துல்லியமான பாகிஸ்தான் தீவிரவாதிகள் மேலான தாக்குதல், பாகிஸ்தான் மக்களுக்கு ஒரு சேதாரமில்லாமல் அதன் ராணுவ விமானம் மேல் துல்லிய தாக்குதல் என அசத்தியது இந்தியா

ALSO READ:  தமிழகத்தின் ‘மக்கள் ஆளுநர்’!

பால்கோட் சம்பவத்திலே அமெரிக்காவின் எப் 16 விமானத்தை வீழ்த்திய இந்தியா இந்த போரிலும் ஒரு பாகிஸ்தான் விமானமும் மேல் எழும்பாதவாறு அடித்து போட்டது அமெரிக்க விமானம் சீன விமானம் உள்பட‌

விமானபடை எனும் போது தாக்குதல் மட்டுமல்ல தற்காப்பும் வரும் அவ்வகையில் உலகில் சிறந்த வான்பாதுகாப்பு வளையத்தை அது கொண்டிருக்கின்றது

இந்திய விமானபடைக்கு 42 பிரிவுகள் கொண்ட படைபிரிவு அவசியம் ஆனால் காலாவதியான பழைய விமானங்களை இன்னும் பழைய தலைமுறை விமானங்களை அகற்றி பார்த்தால் 32 பிரிவுதான் வரும்

இதனால் மின்னல் வேகத்தில் மோடி அரசு அந்த இடைவெளியினை குறைக்கின்றது ரபேல் விமான கொள்முதல், இந்தியாவில் ரஷ்ய பிரான்ஸ் உதவியுடன் தயாரிப்பு, தேஜஸ் விமானங்கள் தயாரிப்பு என அது மிகுந்த பரபரப்பில் தயாரிப்பில் இறங்கியிருக்கின்றது

தேசம் சுதந்திரம் பெறும்போது மேலை நாடுக்ள் பெரும் விஞ்ஞான பலத்தில் இருந்தன இங்கோ தரித்திர்ம் மட்டும் இருந்தது

இந்த 90 ஆண்டுகளில் அதை முறியடித்திருக்கின்றோம், கிட்டதட்ட அவர்கள் அளவுக்கு பலமோடு இருக்கின்றோம் அடுத்த சில வருடங்களில் நிச்சயம் அவர்களை கடந்தும் செல்வோம்

ஆறாம் தலைமுறையில் அவர்களுக்கு சவால்விடுகின்றோம், இனி ஏழாம் எட்டாம் தலைமுறையில் தேசம் உலகின் முதல் நிலை விமானபடையாக நிச்சயம் இருக்கும்

இது பரத்வாஜ முனிவர் காலத்திலே விமான சாஸ்திரா என விஞ்ஞானம் செய்த நாடு விமானம் செய்த நாடு,, அதன் புராண இதிகாசமெல்லாம் விமானம் தொடர்புடையதே

ALSO READ:  கமலாலயத்துக்கும் சத்தியமூர்த்தி பவனுக்கும் வேறுபாடில்லை!

அப்படியான ஞானபூமி தன் பொற்காலத்தை மீட்டெடுக்க துவங்கியிருகின்றது, பாரத விமானபடையின் வீரர் சுக்லா சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு சென்றுவந்து சாதித்திருக்கின்றார்

தேசம் வான்படையில் பெறும் அனுபவமெல்லாம் விண்வெளியிலும் இனி சாதிக்க கைகொடுக்கும்

அதுவும் பெண்கள் இயக்கும் விமானபடையில் இந்திய விமானபடையே முதலிடத்தில் இருக்கின்றது என்பது தனித்துவமான விஷயம் , ஆப்பரேஷன் சிந்தூரில் இந்திய் பெண் விமானிகளே ஆபத்தான தாக்குதலை அற்புதமாக செய்து உலகை வியக்க வைத்தார்கள், இந்திய பெண்களின் வீரத்தை பறைசாற்றுவதும் இந்த விமானபடையே

உலகின் மிக பலம் வாய்ந்த விமானபடை என இன்று கருதபடும் இந்திய விமானபடையினருக்கு, தேசத்தின் முக்கிய பலமாக வான் அரணாக நின்று காக்கும் தேசத்தின் வான் காவலர்களுக்கு பெரும் வாழ்த்துக்களையும் நன்றிகளையும் உற்சாகமாக தேசம் தெரிவிக்கின்றது அவர்களுக்காக பிரார்த்திக்கின்றது

“வானை அளப்போம் கடல் மீனை அளப்போம்” என்ற பாரதியின் கனவின் படி வானத்தையும் கடலையும் ஒருசேர அளந்து தேசம் காக்கும் அந்த வீரர்களை தேசம் வாழ்த்திக் கொண்டே இருக்கின்றது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

வங்கத் தீர்ப்பு: இந்திய அரசியலில் நிலநடுக்கம்!

நேற்று எனக்கு ஒரு தகவல் கூறப்பட்டது. 'இண்டி' கூட்டணியில் உள்ள எந்தக் கட்சித் தலைவர்களும் மம்தா பானர்ஜியின் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை என்று கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு இதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் அது இனி வெளிப்படவிருக்கும் நிகழ்வுகளுக்கான ஒரு முன்னோட்டம் மட்டுமே.

முப்பெரும் ஊழல்களில் முதற் பெரும் ஊழல் துறை!

அற நிலையத்துறையைப் போன்ற சட்ட விரோதமான, சாசன விரோதமான, சமூக விரோதமான, சனாதன விரோதமான ஒரு அமைப்பு இந்த உலகில் எங்குமே இருக்கமுடியாது. உலகிலேயே சனாதன வாழ்வியல் ஆதி காலம் தொட்டு உன்னத நிலையில் இருந்துவந்த தமிழகத்தில்தான் இந்த நிலைமை என்பது மிகப் பெரிய, மிக வேதனையான நகைமுரண் தான்.

Topics

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

வங்கத் தீர்ப்பு: இந்திய அரசியலில் நிலநடுக்கம்!

நேற்று எனக்கு ஒரு தகவல் கூறப்பட்டது. 'இண்டி' கூட்டணியில் உள்ள எந்தக் கட்சித் தலைவர்களும் மம்தா பானர்ஜியின் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை என்று கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு இதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் அது இனி வெளிப்படவிருக்கும் நிகழ்வுகளுக்கான ஒரு முன்னோட்டம் மட்டுமே.

முப்பெரும் ஊழல்களில் முதற் பெரும் ஊழல் துறை!

அற நிலையத்துறையைப் போன்ற சட்ட விரோதமான, சாசன விரோதமான, சமூக விரோதமான, சனாதன விரோதமான ஒரு அமைப்பு இந்த உலகில் எங்குமே இருக்கமுடியாது. உலகிலேயே சனாதன வாழ்வியல் ஆதி காலம் தொட்டு உன்னத நிலையில் இருந்துவந்த தமிழகத்தில்தான் இந்த நிலைமை என்பது மிகப் பெரிய, மிக வேதனையான நகைமுரண் தான்.

பஞ்சாங்கம் ஜூன் 1 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

ராஜபாளையம் வழியே திருவனந்தபுரம் – கோவை சிறப்பு ரயில் அறிவிப்பு

கோடைகால சிறப்பு ரயிலாக திருவனந்தபுரம் வடக்கு - போத்தனூர் மற்றும் போத்தனூர் - திருவனந்தபுரம் சென்ட்ரல் இடையே தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

Entertainment News

Popular Categories