December 6, 2025, 12:56 PM
29 C
Chennai

ஓட்டல் அறையில் தங்கி விட்டு எஸ்கேப் ஆன நடிகை! வாடகை தர மறுத்த தயாரிப்பாளர்!

meghrin 1 - 2025

ஹீரோயின் தங்கி இருந்த ஒட்டல் வாடகையை தயாரிப்பாளர் தர மறுத்ததால் நடிகைக்கும் தயாரிப்பாளருக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

தமிழில் சுசீந்திரன் இயக்கத்தில் சந்தீப் கிஷன், விக்ராந்த் நடித்த படம், நெஞ்சில் துணிவிருந்தால். இந்தப் படம் மூலம் தமிழில் ஹீரோயினாக அறிமுகமானார் மெஹ்ரின் பிர்ஸாடா.

இந்தப் படம் ஹிட்டாகவில்லை. அடுத்து தெலுங்குக்கு சென்ற அவர், பட்டாஸ் படம் மூலம் மீண்டும் தமிழுக்கு வந்தார். இதில் தனுஷ் ஜோடியாக நடித்திருந்தார்.

meghrin 2 - 2025

இவர் பஞ்சாப்பைச் சேர்ந்தவர். தெலுங்கில், கிருஷ்ணா காடி வேர பிரேம கதா என்ற படம் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார்.

பின்னர் இந்திக்குச் சென்ற அவர், தமிழ், தெலுங்கு படங்களில் நடித்து வருகிறார். இவர் அஸ்வத்தம்மா என்ற தெலுங்கு படத்தில் நடித்திருந்தார். இதில் நாகசவுரியா ஹீரோ. ஜிஸு சென்குப்தா, ஹரிஷ் உத்தமன் உட்பட பலர் நடித்திருந்தனர்.

இந்தப் படத்துக்கு ஜிப்ரான் இசை அமைத்திருந்தார். ரமண தேஜா இயக்கி இருந்தார். இந்தப் படம், கடந்த மாதம் 31 ஆம் தேதி ரிலீஸ் ஆனது. படத்தை சங்கர் பிரசாத் தயாரித்திருந்தார்.

meghrin - 2025

இந்நிலையில் நடிகை மெஹ்ரின் இந்தப் படத்துக்காக, நட்சத்திர ஓட்டல் ஒன்றில் தங்கி இருந்தார். இதன் வாடகையை தயாரிப்பாளர் கட்டவில்லை என்றும் இதனால் நடிகைக்கும் தயாரிப்பாளருக்கும் பிரச்னை ஏற்பட்டதாக செய்தி பரவியுள்ளது.

இதுபற்றி கூறப்படுவதாவது: இந்தப் படத்தின் ரிலீஸுக்கு முதல் நாள் கடைசிக்கட்ட புரமோஷனுக்காக, படத்தில் நடித்திருந்தவர்களை அழைத்திருந்தார் தயாரிப்பாளர் சங்கர் பிரசாத். நடிகை மெஹ்ரினுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. இதில் கலந்து கொள்வதற்காக ஐதராபாத்தில் உள்ள நட்சத்திர ஓட்டல் ஒன்றில் தங்கியிருந்தார்.

mehreen - 2025

கடைசி நேரத்தில் தனக்கு ஸ்கின் அலர்ஜி என்றும் அதனால் வர இயலாது என்றும் தயாரிப்பாளரிடம் தெரிவித்துள்ளார் மெஹ்ரின். அவர் புரமோஷனுக்கு வராததால், அவர் தங்கிய நட்சத்திர ஓட்டல் வாடகையை தர முடியாது என்றும் நீங்களே கட்டிவிடுங்கள் என்றும் தயாரிப்பாளர் கோபமாகக் கூறிவிட்டார். இதனால் டென்ஷனான நடிகை அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

பின்னர் மறுநாள் காலையில் யாரிடமும் சொல்லாமல் ஓட்டலில் இருந்து வெளியேறி ஊருக்குச் சென்றுவிட்டார். இதையடுத்து ஓட்டல் நிர்வாகம், ஓட்டலில் அறையை பதிவு செய்திருந்த தயாரிப்பாளருக்கு வாடகைத் தொடர்பாக தகவல் தெரிவித்தது.

merkin - 2025

ஆனால்,அவர் வாடகை கொடுக்க மறுத்துவிட்டாராம். பலவித போராட்டங்களுக்கு பிறகே தயாரிப்பாளர் வாடகையை கொடுத்துள்ளார்.

தெலுங்கு திரையுலகில் இந்த செய்தி பரபரப்பாகப் பேசப்படுகிறது. ஆனால், இதுபற்றி நடிகையோ, தயாரிப்பாளரோ ஏதும் தெரிவிக்கவில்லை.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

வாராணசியில் கைவினைப் பொருட்களின் தனித்துவக் கண்காட்சி!

இந்தியாவின் பன்முகத்தன்மையை ஒன்றிணைத்து அதன் கலாச்சார வேர்களை புதிய தலைமுறைகளுக்கு அனுப்புவதை நோக்கமாகக் கொண்ட காசி தமிழ் சங்கத்தின் உணர்வை இந்த அரங்கம் உண்மையிலேயே பிரதிபலிக்கிறது.

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

Topics

வாராணசியில் கைவினைப் பொருட்களின் தனித்துவக் கண்காட்சி!

இந்தியாவின் பன்முகத்தன்மையை ஒன்றிணைத்து அதன் கலாச்சார வேர்களை புதிய தலைமுறைகளுக்கு அனுப்புவதை நோக்கமாகக் கொண்ட காசி தமிழ் சங்கத்தின் உணர்வை இந்த அரங்கம் உண்மையிலேயே பிரதிபலிக்கிறது.

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Entertainment News

Popular Categories