திரையரங்குகள் திறக்க மத்திய அரசு அனுமதி! ஆனால் இதையெல்லாம் கடைப்பிடிக்க வேண்டுமாம்!

Published:

திரையரங்குகள் திறக்க மத்திய அரசு அனுமதி! ஆனால் இதையெல்லாம் கடைப்பிடிக்க வேண்டுமாம்!

2f8157140a157174341b3d6c325e1318 - 2026

வரும் அக்.15 ஆம் தேதி முதல் சினிமா திரையரங்குகளை 50 சதவீத பார்வையாளர்களுடன் திறக்க அனுமதி வழங்கியுள்ளது மத்திய அரசு! மேலும், சில கட்டுப்பாடுகளுடன், அதற்கான வழிகாட்டு நெறிமுறைகளையும் வெளியிட்டுள்ளது.

மத்திய அரசு வெளியிட்டுள்ள வழிகாட்டு நெறிமுறைகள்: 

* 50 சதவீத இருக்கைகளில் மட்டும் ரசிகர்களை அனுமதித்து தியேட்டர்களை திறக்கலாம்.

* சினிமா தியேட்டர்களில் ஒவ்வொரு இருக்கைக்கும் நடுவே ஒரு இருக்கை இடைவெளி விட்டு பார்வையாளர்களை அனுமதிக்க வேண்டும்

* ஒவ்வொரு காட்சி முடிந்த பின்னரும், கிருமி நாசினி தெளித்து தூய்மைப்படுத்த வேண்டும்.

* அனைவரும் மாஸ்க் அணிந்தபடி படம் பார்க்க அனுமதிக்க வேண்டும்

* தியேட்டர் உள்ளே பாக்கெட்களில் அடைத்து வைக்கப்பட்ட நொறுக்கு தீனிக்கு மட்டுமே அனுமதி வழங்க வேண்டும்.

* ஆன்லைன் டிக்கெட் மூலம் முன்பதிவு செய்ய பார்வையாளர்களை ஊக்கப்படுத்த வேண்டும்.

* தியேட்டரில் 24 முதல் 30 டிகிரியில் ஏ.சி., அளவை பராமரிக்க வேண்டும்

ALSO READ:  திரை இயக்குனர் கே.பாக்யராஜ் காலமானார்!

* ரசிகர்கள் தியேட்டருக்குள் செல்லும் போது சானிடைசர் வழங்கப்பட வேண்டும்.

* இடைவேளையின் போது ரசிகர்கள் இருக்கைகளை விட்டு செல்வதை தவிர்க்க வேண்டும்.

* கூட்டத்தை தடுக்க டிக்கெட் விற்பனைக்கு கவுண்டர்கள் நாள் முழுவதும் திறந்து வைக்கப்பட வேண்டும்.

* ரசிகர்களின் உடல் வெப்பநிலை பரிசோதனைக்கு பிறகே தியேட்டருக்குள் அனுமதிக்க வேண்டும்.

* கொரோனா அறிகுறி இருந்தால் தியேட்டருக்குள் அனுமதிக்கப்படக்கூடாது.

* திரைப்படம் துவங்கும் முன்பும் இடைவேளையின் போதும் கொரோனா விழிப்புணர்வு குறும்படங்களை திரையிட வேண்டும்…. என்று அதில் தெரிவிக்கப் பட்டிருக்கிறது. 

Source: Vellithirai News

Related articles

Recent articles

spot_img