விஜய்யுடன் நடிச்சப்போ நரக வேதனையை அனுபவிச்சேன்: அர்ஜுன் ரெட்டி நடிகை ‘ஓபன் டாக்’!

Shalini Pandey Facebook - 2026

அர்ஜுன் ரெட்டி படத்தில் நடிகர் விஜய் தேவரகொண்டாவுடன் நடித்த போது, காதல் தோல்வி நினைவுக்கு வர நரக வேதனையுடன் நடித்தேன் என்று நடிகை ஷாலினி பாண்டே பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.

தெலுங்கில் வெளியான அர்ஜுன் ரெட்டி படம், பெரும் வரவேற்பைப் பெற்றது என்பதுடன், அதில் நடித்த ஷாலினி பாண்டேவுக்கு பெரும் ரசிகர் கூட்டத்தையும் சேர்த்தது. அத்துடன், அவருக்கு இப்போது படவாய்ப்புகளையும் குவித்து வருகிறது.

சாவித்திரி வாழ்க்கைக் கதை படத்திலும் வந்தார் ஷாலினி பாண்டே, தற்போது தமிழில் தயாராகும் 100 பர்சன்ட் காதல், கொரில்லா ஆகிய படங்களில் நடிக்கிறார். இதனிடையே தான் சினிமாவுக்கு வந்த விதம், குடும்ப வாழ்க்கை என்பது குறித்து பேட்டி ஒன்றில் ஷாலினி பாண்டே தெரிவித்த போது…

shalini pandey - 2026

எனக்கு சினிமாவில் நடிக்க வீட்டில் எதிர்ப்பு இருந்தது. ஐ.டி. நிறுவனத்தில் வேலை தேடும் படி நிர்பந்தப் படுத்தினர். ஆனால் நான் அதை எல்லாம் மீறி, சினிமா மேல் இருந்த தீவிர காதலால் முதலில் நாடகங்களில் நடித்தேன். பிறகு சினிமா வாய்ப்பு தேட வீட்டில் சண்டை போட்டுவிட்டு மும்பைக்குச் சென்றேன்.

ALSO READ:  நாட்டை உலுக்கிய நாசிக் ‘கார்ப்பரேட் ஜிகாத்’: டிசிஎஸ்.,ஸை தொடர்ந்து மேலும் புகார்கள்!

எனது சினிமா வெறியைக் கண்டு எனது தந்தை நீ தெருவில் பிச்சைதான் எடுப்பாய் என்று திட்டினார். அதையும் சகித்துக் கொண்டேன்.

மும்பையில் பெண்களுக்கோ ஆண்களுக்கோ தனியாக வீடு கொடுப்பது இல்லை. அதனால் இரண்டு ஆண்கள் இருந்த வீட்டில் நானும் உடன் இன்னொரு பெண்ணும் தங்கினோம். அந்த ஆண்கள் நல்ல குணமுள்ளவர்களாக இருந்தார்கள். எங்களையும் நன்றாக கவனித்துக் கொண்டனர். ஒரு முறைகூட எங்களை தவறாகப் பார்த்ததில்லை. அவர்களது கவனிப்பால் புதிய உலகத்தை பார்த்தேன்.

shalini pandey in arjunreddy - 2026

அர்ஜுன் ரெட்டி படம் பெரிய வெற்றி பெற்று எனக்கு நல்ல பெயர் வாங்கி கொடுத்தது. அதன் பின்னர் என்னை என் குடும்பத்தினர் ஏற்றுக்கொண்டனர்.

என் வாழ்க்கையில் என்ஜினீயரிங் படித்த போதும், சினிமாவுக்கு வந்த பிறகும் இரண்டு முறை காதல் ஏற்பட்டு, அவை தோல்வியிலேயே முடிந்தன. அர்ஜுன் ரெட்டி படத்தில் நடித்தபோது அந்தக் காதல் தோல்வி தந்த நினைவுகளால் தவியாய்த் தவித்தேன். அப்போது விஜய்யுடன் நெருக்கமான காதல் காட்சிகளில் நடித்தபோது நரக வேதனையை அனுபவித்தேன்… – என்று கூறியுள்ளார் ஷாலினி பாண்டே.

ALSO READ:  தேவை மக்கள் மனநிலையில் மாற்றம்!

 

बस यूं ही।

A post shared by Shalini (@shalzp) on

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூன் 4 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – ஜூன் 3 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

தாமிரபரணிக் கரை ஆலயத்தில்… வழிபாட்டில் திருவள்ளுவர்!

தெய்வத் தமிழ் வளர்த்த நம் நெல்லையம்பதியில் தாமிரபரணிக் கரை சிவாலயம் ஒன்று திருவள்ளுவரை தெய்வத்தின் வரிசையில் தன்னுள் தாங்கியுள்ளது...

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் வைகாசி தேரோட்டம் கோலாகலம்!

ஜெனகை மாரியம்மன் கோவில் அர்ச்சகர் சண்முகவேல் தலைமையில் அர்ச்சகர்கள் பூஜைகள் செய்தனர் வழிநெடுகிலும் பொதுமக்கள் தேங்காய் உடைத்து ஜெனகை மாரியம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் ஜூன் 4 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – ஜூன் 3 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

தாமிரபரணிக் கரை ஆலயத்தில்… வழிபாட்டில் திருவள்ளுவர்!

தெய்வத் தமிழ் வளர்த்த நம் நெல்லையம்பதியில் தாமிரபரணிக் கரை சிவாலயம் ஒன்று திருவள்ளுவரை தெய்வத்தின் வரிசையில் தன்னுள் தாங்கியுள்ளது...

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் வைகாசி தேரோட்டம் கோலாகலம்!

ஜெனகை மாரியம்மன் கோவில் அர்ச்சகர் சண்முகவேல் தலைமையில் அர்ச்சகர்கள் பூஜைகள் செய்தனர் வழிநெடுகிலும் பொதுமக்கள் தேங்காய் உடைத்து ஜெனகை மாரியம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

வங்கத் தீர்ப்பு: இந்திய அரசியலில் நிலநடுக்கம்!

நேற்று எனக்கு ஒரு தகவல் கூறப்பட்டது. 'இண்டி' கூட்டணியில் உள்ள எந்தக் கட்சித் தலைவர்களும் மம்தா பானர்ஜியின் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை என்று கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு இதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் அது இனி வெளிப்படவிருக்கும் நிகழ்வுகளுக்கான ஒரு முன்னோட்டம் மட்டுமே.

Entertainment News

Popular Categories