பிக்பாஸ் வீட்ல… அது வெறும் நடிப்பு… பிராச்சியை கன்வீன்ஸ் செய்த மஹத்!

mahat prachi - 2026

சென்னை: பிராச்சி மிஸ்ரா மகத்தை மன்னித்து காதலை மீண்டும் தொடர்ந்து விட்டார் போல…! அதற்கான அறிகுறிகள் வெளிப்படையாகத் தெரிகின்றன.

பிக் பாஸ் 2 வீட்டில் இருந்த போது மகத் – யாஷிகா காதல் பரபரப்பாக ஓடியது. காதலை முதலில் மறுத்த மகத் பின்னர் ஒப்புக் கொண்டார். காதலை ஒப்புக் கொண்ட வேகத்தில் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டார் மகத்.

ஆனால் பிக் பாஸ் வீட்டுக்கு வெளியே மகத்துக்கு பிராச்சி மிஸ்ரா என்ற காதலி இருந்தார். பிக் பாஸ் வீட்டுக்குள் மகத் யாஷிகா காதல் சீன் ஓடியதால்,மகத்துடனான காதலை முறித்துக் கொள்வதாக பிராச்சி மிஸ்ரா இன்ஸ்டாகிராமில் அறிவித்தார். அந்த வேகத்தில், என்னவெல்லாமோ சொன்னார். படங்களை டெலிட் செய்தார். பிக் பாஸ் வீட்டில் இருப்பது என் காதலன் அல்ல; அந்த வீட்டுக்குள் நான் அனுப்பி வைத்தது வேறு ஒரு நபரை என்று கூறி ஆதங்கப்பட்டார்.

இதனால் அவருக்கு பலரும் ஆறுதல் கூறினார்கள். மகத் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறியுள்ள இந்த நேரத்தில் முன்னர் தாம் வெளியிட்ட காதல் முறிவு வீடியோ மற்றும் போஸ்ட்டை இன்ஸ்டாகிராமில் இருந்து நீக்கிவிட்டார் பிராச்சி. தான் மகத்துடன் இருக்கும் புகைப்படங்கள், வீடியோக்களை நீக்காமல் அப்படியே வைத்துள்ளார் பிராச்சி.

ALSO READ:  வடகிழக்கில் ஹிந்து தேசியம் : நாகாலாந்து

இந்நிலையில் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியே வந்த மகத் நேராக பிராச்சியை சந்தித்துப் பேசி யாஷிகா மீது ஏற்பட்டது காதல் அல்ல; அது ஒரு நடிப்பு; பிக் பாஸ் வீட்டுக்காக எழுதிக் கொடுக்கப்பட்ட ஸ்க்ரிப்ட் அது என்று ஏதாவது காரணம் கூறி,  மன்னிப்பு கேட்டிருப்பார் என்கிறார்கள் நெட்டிசன்கள்.

இந்தி பிக் பாஸ் நிகழ்ச்சியிலும் இப்படித்தான் பல காதல்கள் வீட்டுக்குள் உருவாகின. ஆனால் எதுவுமே அதன் பின்னர் நிலைக்கவில்லை. எல்லாம் அந்த அந்த நிகழ்ச்சி முடிந்ததும் கழற்றி விடப் பட்ட நிலைக்கு போனது.

தமிழிலும் முதல் சீஸனில் ஆரவ் காதல் பேசப்பட்டது. ஓவியா புகழ் அடைந்தார். ஆனால், அவர் அதன் பின் நடிப்பில் பிஸி ஆனார். பிக் பாஸ் வீட்டில் இருந்தவரை பார்வையாளர்கள் ஏதோ காதல் காவியம் போன என்று வாய் திறந்து பார்த்துக் கொண்டிருந்தார்கள்.

தற்போது சீசன் 2லும் மகத், யாஷிகா காதல் சற்று நேர பரபரப்பை ஏற்படுத்தி, பார்வையாளர்களிடம் தொய்வு ஏற்படாமல் பார்த்துக் கொண்டது. மகத் விஷயம் எப்படியும் சரியாகிவிடும். ஆனால், யாஷிகாவுக்கும் வெளியே ஒரு காதலர் இருக்கிறார். அவரிடம் எப்படி இந்த ஸ்க்ரிப்ட் கதையை எடுத்து விட்டு, தன் காதலை காப்பாற்றிக் கொள்ளப் போகிறாரோ யாஷிகா என்று இப்போதே பலரும் கவலையின் உச்சத்தில் ஆழ்ந்திருக்கிறார்கள்!

ALSO READ:  வளைகுடா போர்கள் தொடர்பில், வதந்திகளை நம்பாதீர்: பிரதமர் வேண்டுகோள்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

உசிலம்பட்டி திருமுருகன் கோயிலில் கும்பாபிஷேகம் கோலாகலம்!

உசிலம்பட்டியில் புகழ்பெற்ற திருமுருகன் திருக்கோவில் புனருந்தாரண அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம்-நூற்றுக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து வழிபாடு செய்தனர்.

பஞ்சாங்கம் ஜூன் 4 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – ஜூன் 3 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

தாமிரபரணிக் கரை ஆலயத்தில்… வழிபாட்டில் திருவள்ளுவர்!

தெய்வத் தமிழ் வளர்த்த நம் நெல்லையம்பதியில் தாமிரபரணிக் கரை சிவாலயம் ஒன்று திருவள்ளுவரை தெய்வத்தின் வரிசையில் தன்னுள் தாங்கியுள்ளது...

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் வைகாசி தேரோட்டம் கோலாகலம்!

ஜெனகை மாரியம்மன் கோவில் அர்ச்சகர் சண்முகவேல் தலைமையில் அர்ச்சகர்கள் பூஜைகள் செய்தனர் வழிநெடுகிலும் பொதுமக்கள் தேங்காய் உடைத்து ஜெனகை மாரியம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்

Topics

உசிலம்பட்டி திருமுருகன் கோயிலில் கும்பாபிஷேகம் கோலாகலம்!

உசிலம்பட்டியில் புகழ்பெற்ற திருமுருகன் திருக்கோவில் புனருந்தாரண அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம்-நூற்றுக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து வழிபாடு செய்தனர்.

பஞ்சாங்கம் ஜூன் 4 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – ஜூன் 3 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

தாமிரபரணிக் கரை ஆலயத்தில்… வழிபாட்டில் திருவள்ளுவர்!

தெய்வத் தமிழ் வளர்த்த நம் நெல்லையம்பதியில் தாமிரபரணிக் கரை சிவாலயம் ஒன்று திருவள்ளுவரை தெய்வத்தின் வரிசையில் தன்னுள் தாங்கியுள்ளது...

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் வைகாசி தேரோட்டம் கோலாகலம்!

ஜெனகை மாரியம்மன் கோவில் அர்ச்சகர் சண்முகவேல் தலைமையில் அர்ச்சகர்கள் பூஜைகள் செய்தனர் வழிநெடுகிலும் பொதுமக்கள் தேங்காய் உடைத்து ஜெனகை மாரியம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

Entertainment News

Popular Categories