இளையராஜா என்ற மாபெரும் கலைஞனை அவமதித்து விட்டீர்கள்: நீதிபதிகள் வேதனை!

ilayaraja - 2026

இளையராஜா 75 நிகழ்ச்சிக்கான வரவு, செலவு கணக்குகளை கண்காணிக்க இடைக்கால நிர்வாகியை நியமிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துவிட்டது. நிகழ்ச்சி தொடர்பான கணக்கு வழக்குகளை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய தயாரிப்பாளர்கள் சங்க தரப்புக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது.

தயாரிப்பாளர் சதீஷ் குமார் தாக்கல் செய்த மேல்முறையீடு மனுவுக்கு 2 வாரங்களில் பதிலளிக்க தயாரிப்பாளர் சங்கத்துக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது.

மேலும், இந்தியாவே உற்று நோக்கும் மிகப்பெரிய கலைஞனுக்கு நடத்தும் பாராட்டு விழாவுக்கு தடை கோரி வழக்கு தொடர்ந்ததன் மூலம் அவரை அவமதித்து விட்டீர்கள் கடைசி நேரத்தில் வழக்கு தொடர்ந்துள்ளீர்கள் என்று நீதிபதி கிருபாகரன் கண்டிப்புடன் கூறினார்.

இதுதொடர்பான மேல்முறையீட்டு மனு, நீதிபதிகள் கிருபாகரன், அப்துல்குத்தூஸ் அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, நிகழ்ச்சியை நடத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகள் நடைபெற்ற பின்னர், இந்த வழக்கை இறுதி நேரத்தில் தாக்கல் செய்திருப்ப தாகவும், இது சரியான செயல் அல்ல என்றும், நீதிபதிகள் தெரிவித்தனர்.

தமிழ்நாட்டில் இந்தி பாடல்களை கேட்டுக்கொண்டிருந்தவர்களை, தமிழ்ப் பாடல் கேட்க வைத்தவர் இளையராஜா தான் என்று நீதிபதிகள் கூறினர். இந்திப் பாடல்களுக்கு மெட்டமைக்க, தமிழ் இசையைக் காப்பியடிக்கும் அளவிற்கு மிகத் தரமான முறையில் இசையமைத்து சாதனை படைத்தவர் இளையராஜா என நீதிபதிகள் புகழாரம் சூட்டினர்.

இளையராஜா 75 நிகழ்ச்சியின், வரவு-செலவு தொடர்பான கணக்கு விவரங்களை 2 வாரத்தில் தாக்கல் செய்யவும், தயாரிப்பாளர் சங்கத்திற்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் – மார்ச் 25 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மார்ச் 17 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

திருப்பரங்குன்றம் கோயிலில் பங்குனி பெருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்!

ஏப்ரல் ஐந்தாம் தேதி தேரோட்டம், ஏப்ரல் ஆறாம் தேதி தீர்த்த உற்ஸவம் நடக்கிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை, கோயில் நிர்வாகம் மற்றும் அறங்காவலர் குமுவினர் செய்து வருகிறது

ராகுல் – நேரு – கான்ஷிராம்: காங்கிரஸின் வரலாறு சொல்வது என்ன ?

அரசமைப்பு மாநாட்டில் பேசிய ராகுல் காந்தி இந்தியாவின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேரு உயிரோடு இருந்திருந்தால் அவர் பகுஜன் சமாஜ் கட்சியை ஆரம்பித்த கான்ஷிராமை உத்தர பிரதேசத்தின் முதல்வராக்கி இருப்பார்

பஞ்சாங்கம் மார்ச் 23 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் – மார்ச் 25 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மார்ச் 17 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

திருப்பரங்குன்றம் கோயிலில் பங்குனி பெருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்!

ஏப்ரல் ஐந்தாம் தேதி தேரோட்டம், ஏப்ரல் ஆறாம் தேதி தீர்த்த உற்ஸவம் நடக்கிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை, கோயில் நிர்வாகம் மற்றும் அறங்காவலர் குமுவினர் செய்து வருகிறது

ராகுல் – நேரு – கான்ஷிராம்: காங்கிரஸின் வரலாறு சொல்வது என்ன ?

அரசமைப்பு மாநாட்டில் பேசிய ராகுல் காந்தி இந்தியாவின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேரு உயிரோடு இருந்திருந்தால் அவர் பகுஜன் சமாஜ் கட்சியை ஆரம்பித்த கான்ஷிராமை உத்தர பிரதேசத்தின் முதல்வராக்கி இருப்பார்

பஞ்சாங்கம் மார்ச் 23 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

அச்சத்தில் தமிழக பெண்கள்; திமுக.,வுக்கு பாடம் புகட்ட சரியான நேரம்!

திமுக அரசின் அலட்சியத்தால் கேள்விக்குறியான பெண்கள் பாதுகாப்பு; அச்சத்தில் தமிழகத்தின் பெண்கள் இருப்பதாக,

பஞ்சாங்கம் மார்ச் 22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

தகுந்த வைத்தியம் தேவை!

ஒரு பெண்மணி கால்நடை மருத்துவரிடம் வந்தார், அவருடன் ஒரு உயர் இன...

Entertainment News

Popular Categories