சென்னை: தெற்கு ரெயில்வே வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-
சென்னையில் பராமரிப்பு பணி காரணமாக இன்று(வெள்ளிக்கிழமை) மற்றும் நாளை(சனிக்கிழமை) கீழ்க்கண்ட மின்சார ரெயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
- ஆவடி-மூர்மார்க்கெட் காலை 6.40 மணிக்கும், மூர்மார்க்கெட்-ஆவடி இரவு 9.50 மணிக்கும், சூலூர்ப்பேட்டை-மூர்மார்க்கெட் இரவு 7.55 மணிக்கும், மூர்மார்க்கெட்-சூலூர்ப்பேட்டை காலை 7.45 மணிக்கும் புறப்படும் ரெயில் முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது.
- சூலூர்ப்பேட்டை-மூர்மார்க்கெட் மதியம் 12, 6.35 மணிக்கும் பயணிகள் சிறப்பு ரெயில் இயக்கப்படும்.
இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.