ஒரே பாடலில் பணக்காரனாவது எப்படி? வெங்கட் பிரபுவின் காமெடி ஆல்பம்!

Published:

தமிழ் திரைப்படங்களில் குப்பை பொறுக்கும் ஒருவன் ஒரே நாளில் கோடீஸ்வரன் ஆவதுப் போன்றக் காட்சிகள் வந்ததுண்டு. சிலப் படங்களில் நாயகன் ஒரே பாடலில் மிக பெரிய பணக்காரனாக உயர்வது போன்றக் காட்சிகள் இடம் பெறுவது உண்டு.

இது சாத்தியமா என்பதை மக்கள் யோசிக்க கூட முடியாத அளவுக்கு பெரும்பாலும் இந்த பாடலில் நடிப்பவர்கள் மக்களின் அபிமானம் பெற்ற நாயகர்களாகவே இருப்பார்கள். சமீப காலமாக ரசிகர்களும் இத்தகைய பாடல்களை ஒரு வித நகைச்சுவை உணர்வோடுதான் ரசிக்க ஆரம்பிக்கின்றனர்.

யூடியூப் மூலம் நமது நாட்டின் பெரும்பாலும் ரசிகர்களை கவர்ந்து உள்ள “Culture Machine” நிறுவனத்தின் பிரதான அங்கமான புட் சட்னி நிறுவனம், ஒரே பாடலில் பணக்காரனாவது எப்படி என்கிற விஷயத்தை நகைசுவையுடன் ஒரு ஆல்பமாக வழங்கி உள்ளனர். பிரபல இயக்குனர் வெங்கட் பிரபு இந்தப் பாடலில் நடித்து உள்ளார்.

ரசிகர்களை சிரிக்க வைக்கும் இந்த வீடியோவை தொடர்ந்து இத்தகைய பல வீடியோக்களை ‘புட் சட்னி’ நிறுவனம் வெளியிட உள்ளது.

ALSO READ:  திரை இயக்குனர் கே.பாக்யராஜ் காலமானார்!
செங்கோட்டை ஸ்ரீராம்
செங்கோட்டை ஸ்ரீராம்https://www.dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img