அர்ஜுன் சந்திரா, கருணா டோக்ரா நடிக்கும் “நின்று கொல்வான்”

Published:

ஹம்ச ஹர்ஷா பிலிம்ஸ் பிரைவேட் லிமிடெட் வழங்கும் VP ஷங்கர் எழுதி இயக்கும் “நின்று கொல்வான்”

பெரும் பொருட்செலவில் VP ஷங்கரின் பிரம்மாண்டமான இயக்கத்தில் ஹம்ச ஹர்ஷா பிலிம்ஸ் பிரைவேட் லிமிடெட் சார்பாக B. ஜெயந்தி மற்றும் AN. திருமுருகன் தயாரிக்கும் படம் “நின்று கொல்வான்”.

அனைவரும் கவரும் வண்ணம் ஜனரஞ்சகமான முறையில் எடுக்கப்படும் இப்படத்தில் பிரபல கன்னட நடிகரான அர்ஜீன் சந்த்ரா கதாநாயகனாக நடிக்க மாடல் உலகில் முன்னனி அழகியாக திகழும் கருணா டோக்ரா கதாநாயகியாக நடிக்கின்றனர்.

உயர் ரக வகுப்பை சேர்ந்த நாயகன் சென்னையில் ஒரு கல்லூரியில் தங்கி படிக்கின்றான். உடன் பயிலும் நாயகி மீது காதல் வயப்படுகிறான். இருவரும் காதலித்து ஒருவரை ஒருவர் புரிந்து கொள்கையில் இருவரும் அதிர்ச்சியடைகின்றனர். இப்படி பட்ட வித்தியாசமான காட்சி சமீபத்தில் படமாக்கப்பட்டது.

ஆசிஷ் வித்யார்த்தி, யோகி பாபு, ராஜுவ் பிள்ளை, “நிழல்கள்” ரவி, கீதா, “மாஸ்டர்” அபிஷேக் உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடிக்கின்றனர்.

ALSO READ:  பிரபல பின்னணி பாடகி எஸ்.ஜானகி மைசூரில் காலமானார்!

சென்னை, கோவா, உடுப்பி, மைசூர், பெங்களுர் பகுதிகளில் தொடர்ந்து படபிடிப்பு நடைபெற்று வருகிறது.

தொழில்நுட்ப கலைஞர்கள் விவரம்:

தயாரிப்பு – B. ஜெயந்தி, A.N. திருமுருகன்
எழுத்து இயக்கம் – VP ஷங்கர்
இசை – ஜீடா சாண்டி
பாடல்கள் – “கவிப்பேரரசு” வைரமுத்து
ஒளிப்பதிவு – G. பாலமுருகன்
படத்தொகுப்பு – NM. விஷ்வா
மக்கள் தொடர்பு – நிகில்

செங்கோட்டை ஸ்ரீராம்
செங்கோட்டை ஸ்ரீராம்https://www.dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img