December 5, 2025, 3:43 PM
27.9 C
Chennai

அவம்பாடே ததிங்கணதோம் போடுதாம்! இதுல 700 கோடி ரூவா ஓஸிக்கு தூக்கிக் கொடுப்பானாம்…!

kerala cut out - 2025

துபாய் அரசாங்கம் கேரளாவிற்கு வெள்ள உதவியாக 100 மில்லியன் டாலர்கள் (ஏறக்குறைய 700 கோடி ரூபாய்) கொடுக்கப் போவதாக இணையமெங்கும் உலவிய செய்தி எனக்கு ஆச்சரியமூட்டியதொரு விஷயம். ஏனென்றால் கடந்த இரண்டு, மூன்று வருடங்களாக துபாய் பொருளாதாரம் மூழ்கிக் கொண்டிருப்பது உலகமறிந்ததொரு விஷயம். இந்தச் சூழ்நிலையில் எப்படி கேரளாவுக்கு 700 கோடிகள் கொடுப்பார்கள் என்று சிந்தித்துக் கொண்டிருந்தேன். ஒருவேளை நிறைய மலையாளிகள் வளைகுடாவில் இருப்பதால் துபாய் ஷேக்குகள் அவர்களிடம் பணம் வசூலித்துக் கொடுப்பார்களாக இருக்கலாமோ என்று யோசனை வந்தது. ஒற்றுமைக்குப் பெயர்போன சேட்டன்மார்கள் அப்படிச் செய்யக் கூடியவர்கள்தான் எனவும் நினைத்துக் கொண்டேன்.

அந்தப் பணத்தை வாங்கக் கூடாது என்று மோடி குறுக்கே விழுந்து தடுத்துவிட்டதாக இணையமெங்கும் வசைகள். மீம்ஸ்கள். ஃபேஸ்புக் போஸ்ட்டுகள். ஊருருக்கு ஃப்ளெக்ஸ் போர்டுகள் என்று இந்தியாவே திமிலோகப்பட்டதை ஆச்சரியத்துடன் கவனித்துக் கொண்டிருந்தேன். கடைசியில் துபாய் ஷேக்குகள் நாங்கள் அப்படிச் சொல்லவே இல்லை என்று சகலத்தையும் புஸ்வாணமாக்கிவிட்டார்கள்.

kerala people mind e1535194312360 - 2025

இன்றைய துபாய் மிகுந்த சிரமத்தில் இருக்கிறது. புர்ஜ்-காலிஃபா உலகத்தின் மிகப் பெரிய கட்டிடமாக இருக்கலாம். ஆனால் அதன் மீது ஏகப்பட்ட கடன் இருக்கிறது. அந்தக் கட்டிடத்திலிருக்கும் பெரும்பாலான அலுவலகங்கள் யாருமில்லாமல் காற்று வாங்கிக் கொண்டிருக்கின்றன. மொத்த துபாயும் ஒரு பெரிய Ponzi Scheme என்பது மெல்ல, மெல்ல வெளியில் வந்து கொண்டிருக்கிறது. இருக்கிற கடனைச் சமாளிக்க முடியாமல் துபாய் தவித்துக் கொண்டிருக்கிறது.

துபாயின் வியாபார நடைமுறைகள் தமாஷானவை. சீட்டுக்கட்டுகளால் ஆன கட்டிடம் போல வெற்று வங்கிக் காசோலைகளால் கட்டப்பட்டது துபாய். அடியில் ஒரு சீட்டை உருவினால் மொத்த துபாயும் கீழே விழுந்துவிடும் ஆபத்து அதனைச் சூழ்ந்திருக்கிறது. அடுத்த பத்தாண்டுகளில் துபாய் பல்லிளிக்க ஆரம்பித்துவிடும். இதனைச் சொல்வதால் எனக்கு துபாயின் மீது வெறுப்பு என்று அர்த்தமில்லை. எல்லாத் தகவல்களும் இணையத்தில் இருக்கின்றன. தேடிப்பிடித்து படித்துப் பாருங்கள்.

துபாயில் முதலீடு செய்பவர்களில் பெரும்பாலோர் இந்தியர்கள்தான். ஷாருக்கானிலிருந்து, ப.சி, மு.க. குடும்பம், இன்னபிற பணக்காரர்கள், சினிமா நடிக, நடிகைகள், கடத்தல்காரர்கள், கள்ள நோட்டு அச்சடிப்பவர்கள், அரசியல்வாதிகள் என அத்தனை பேர்களும் துபாயில்தான் முதலீடுகள் செய்து வைத்திருக்கிறார்கள். ஆனால் அவர்கள் அந்தப் பணத்தை திரும்ப எடுப்பது மிக, மிகக் கடினம் என்பேன். துபாயின் நிலைமை அந்த அளவிற்கு மோசமாக இருக்கிறது. ஆனால் திறமையாக அதனை மறைத்து வருகிறார்கள்.

தன்னுடைய நிலையே ததிங்கிணதோம் போடுகையில் துபாய்க்காரன் எப்படி கேரளாக்காரனுக்குப் பணத்தைத் தூக்கிக் கொடுப்பான்? அப்படியே கொடுத்தாலும் ஓசியில் கொடுப்பான் என்று எதிர்பார்ப்பதெல்லாம் டூ மச்.

  • பி எஸ் நரேந்திரன் (P S Narendran)

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories