மூட்டையை லாரியில் அடுக்க பரமபத வாசல் திறப்பு! ஸ்ரீவில்லிபுத்தூரில் அறநிலையத்துறை அராஜகம்!

srivilliputhur paramapathavasal - 2026

வைணவ ஆலயங்களில் பகல் பத்து ராப் பத்து என்று வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு கொண்டாடப் படும் அத்யயன உத்ஸவத்தின் முக்கிய நிகழ்வான பரமபத வாசல் திறப்பு நிகழ்ச்சிக்காக வைக்கப் பட்டிருக்கும் வாசல் கதவை வேறு பயன்பாட்டுக்காகத் திறந்து பக்தர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது ஸ்ரீவில்லிபுத்தூர் கோயில் நிர்வாகம்.

பரமபத வாசல் என்பது, ஸ்ரீவைகுந்த ஏகாதசி நாளில் மட்டுமே திறக்கப் பட வேண்டிய வாசல் கதவு. மற்ற நாட்களில் அதை மூடியே வைத்திருப்பர். இது, சம்பிரதாய வழக்கம். கோயில் ஆகம விதிகளில் அடங்காவிட்டாலும், அத்யயன உத்ஸவம் நடைபெறும் சம்ப்ரதாய கோயில்களில் வைக்கப் பட்டிருக்கும் பரமபத வாசல் கதவை, அத்யயன உத்ஸவம் அன்றி வேறு நாட்களில் திறக்கக் கூடாது என்பது  சம்ப்ரதாய விதி. ஆனால் அதை மீறி, கோயிலில் அடுக்கப் பட்டிருக்கும் மூட்டைகளை பரமபத வாசல் கதவைத் திறந்து சாதாரண ஒரு  வேலைக்காக பயன்படுத்திக் கொள்வது மிகவும் தவறு என்கின்றனர் வைணவப் பெருமக்கள்.

நடந்தது இதுதான்… ஸ்ரீரங்கம் கோவிலுக்கு அடுத்து திருப்பதி, திருவல்லிக்கேணி வரிசையில் இணைந்த மிக முக்கியமான கோயில் ஸ்ரீவில்லிபுத்தூர். இங்கே பரமபத வாசல் திறப்பு திருவிழா பெரும் விமர்சையாக நடைபெறும். பகல்பத்து ராப்பத்து உத்ஸவங்கள் முடியும் வரை, முறைப்படி திறக்க வேண்டிய நாட்களில் மட்டுமே இந்த சொர்க்க வாசல் கதவுகள் திறக்கப்படும். அதன் பின் அடுத்த வருடம் தான் திருவிழா நாட்களில் திறக்கப்படும். இதுதான் சம்பிரதாயம்.

ஆனால் அண்மைக் காலமாக இந்த விதி மீறப் படுகிறது. நேற்று (29.04.19) காலை 6.30 மணியில் இருந்து ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீஆண்டாள் திருக்கோவிலின் பரம்பத வாசல் கோடவுன் வாசலாக மாற்றப் பட்டு, கோயில் நடைமுறையை மீறி திறக்கப்பட்டு பயன்படுத்தப்பட்டு வருகிறது… என்று புகார் கூறுகின்றனர் பக்தர்கள். அறநிலையத்துறையின்  இந்த அராஜகப் போக்குக்கு மண் வாரித் தூற்றி வருகின்றனர் சிலர்.

அண்மைக் காலமாக, ஸ்ரீவி. திருக்கோவிலின் ஆன்மீகம் மற்றும் ஐதீக விதிமுறைகள் மீறப்படுவதால் நமது நல்லெண்ணம் படைத்த சில இளம் பட்டாச்சாரிகளை நாம் இழந்துள்ளோம்… என்று உள்ளம் குமுறும் அன்பர்கள், இப்படிப்பட்ட விதிமீறல்களை மேற்கொள்ள இது ஒன்றும் அரசு அலுவலகம் அல்ல, நினைத்த நேரத்தில் நினைத்த அறையைத் திறந்து நினைத்த படி கதவுகளைத் திறந்து பயன்படுத்துவதற்கு..!  இது கோயில். இதற்கு ஆகமங்கள், விதிகள் உண்டு என்று அறநிலையத்துறை அதிகாரிக்கு நினைவூட்டி வருகின்றனர்.

கோயிலை வைத்துதான் ஊர் உள்ளது. ஊரில் நல்ல செழிப்பும், மழைப் பொழிவும் விளைச்சலும் திகழ, அவ்வூர் அந்தணர்கள் மூன்று வேளை சூரியனைப் போற்றுவதும், வழிபடுவதும், கோயிலில் பூஜைகள் குறைவற நடைபெறுவதும் முக்கியம் என அந்நாளில் ராஜாக்கள் கருதினர். அதனால்தான் கோயில்களை முக்கியமானதாகப் போற்றி, ஆகமம் அறிந்த நல்லோரால் கோயில்களைப் பாதுகாத்தனர். ஆனால்,  சில ஆண்டுகளாக சுற்று வட்டார பகுதிகளில் மழை பெய்தும் ஸ்ரீவில்லிபுத்தூர் நகரில் மட்டும் மழை பெய்வதில்லை. இறைவனின் கோபத்தினால்தான் மழை பெய்வது இல்லை எனக் கூறுகின்றனர் ஊர்ப் பெரியவர்கள்.

எனவே, சம்பந்தப்பட்ட இந்து சமய அறநிலைத்துறை அதிகாரிகள் மற்றும் ஆணையர்கள் இது குறித்து சிந்திக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கும் ஆலய அன்பர்கள், இங்கே பணிபுரியும் அறநிலையத்துறை அதிகாரி, ஆலய பணியாளர்கள் ஆகியோரே இந்த தீவினைகளுக்குப் பொறுப்பாவார்கள் என்று கை நீட்டுகின்றனர். எனவே இதுதொடர்பில் விரைந்து நடவடிக்கை எடுத்து, தவறு செய்தவர்களை தண்டிக்காவிட்டால், ஸ்ரீவில்லிபுத்தூர் ஊர் மேலும் மோசமாகிவிடும் என்று உள்ளம் பதைபதைத்துக் கூறுகின்றனர்.

ஏப்.29 ஆம் தேதி காலையில் பதிவு செய்த வீடியோ… 

1 COMMENT

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஏப்ரல் 26 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

சபரிமலை கோயிலுக்குள் அனைத்து வயது பெண்களும் நுழையலாமா?

உலக பிரசித்தி பெற்ற கேரளாவில் உள்ள தனித்துவம் வாய்ந்த சபரிமலை சுவாமி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 25 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் ஏப்ரல் 24 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Topics

பஞ்சாங்கம் ஏப்ரல் 26 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

சபரிமலை கோயிலுக்குள் அனைத்து வயது பெண்களும் நுழையலாமா?

உலக பிரசித்தி பெற்ற கேரளாவில் உள்ள தனித்துவம் வாய்ந்த சபரிமலை சுவாமி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 25 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் ஏப்ரல் 24 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Entertainment News

Popular Categories