மூட்டையை லாரியில் அடுக்க பரமபத வாசல் திறப்பு! ஸ்ரீவில்லிபுத்தூரில் அறநிலையத்துறை அராஜகம்!

srivilliputhur paramapathavasal - 2026

வைணவ ஆலயங்களில் பகல் பத்து ராப் பத்து என்று வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு கொண்டாடப் படும் அத்யயன உத்ஸவத்தின் முக்கிய நிகழ்வான பரமபத வாசல் திறப்பு நிகழ்ச்சிக்காக வைக்கப் பட்டிருக்கும் வாசல் கதவை வேறு பயன்பாட்டுக்காகத் திறந்து பக்தர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது ஸ்ரீவில்லிபுத்தூர் கோயில் நிர்வாகம்.

பரமபத வாசல் என்பது, ஸ்ரீவைகுந்த ஏகாதசி நாளில் மட்டுமே திறக்கப் பட வேண்டிய வாசல் கதவு. மற்ற நாட்களில் அதை மூடியே வைத்திருப்பர். இது, சம்பிரதாய வழக்கம். கோயில் ஆகம விதிகளில் அடங்காவிட்டாலும், அத்யயன உத்ஸவம் நடைபெறும் சம்ப்ரதாய கோயில்களில் வைக்கப் பட்டிருக்கும் பரமபத வாசல் கதவை, அத்யயன உத்ஸவம் அன்றி வேறு நாட்களில் திறக்கக் கூடாது என்பது  சம்ப்ரதாய விதி. ஆனால் அதை மீறி, கோயிலில் அடுக்கப் பட்டிருக்கும் மூட்டைகளை பரமபத வாசல் கதவைத் திறந்து சாதாரண ஒரு  வேலைக்காக பயன்படுத்திக் கொள்வது மிகவும் தவறு என்கின்றனர் வைணவப் பெருமக்கள்.

ALSO READ:  அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி...!

நடந்தது இதுதான்… ஸ்ரீரங்கம் கோவிலுக்கு அடுத்து திருப்பதி, திருவல்லிக்கேணி வரிசையில் இணைந்த மிக முக்கியமான கோயில் ஸ்ரீவில்லிபுத்தூர். இங்கே பரமபத வாசல் திறப்பு திருவிழா பெரும் விமர்சையாக நடைபெறும். பகல்பத்து ராப்பத்து உத்ஸவங்கள் முடியும் வரை, முறைப்படி திறக்க வேண்டிய நாட்களில் மட்டுமே இந்த சொர்க்க வாசல் கதவுகள் திறக்கப்படும். அதன் பின் அடுத்த வருடம் தான் திருவிழா நாட்களில் திறக்கப்படும். இதுதான் சம்பிரதாயம்.

ஆனால் அண்மைக் காலமாக இந்த விதி மீறப் படுகிறது. நேற்று (29.04.19) காலை 6.30 மணியில் இருந்து ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீஆண்டாள் திருக்கோவிலின் பரம்பத வாசல் கோடவுன் வாசலாக மாற்றப் பட்டு, கோயில் நடைமுறையை மீறி திறக்கப்பட்டு பயன்படுத்தப்பட்டு வருகிறது… என்று புகார் கூறுகின்றனர் பக்தர்கள். அறநிலையத்துறையின்  இந்த அராஜகப் போக்குக்கு மண் வாரித் தூற்றி வருகின்றனர் சிலர்.

அண்மைக் காலமாக, ஸ்ரீவி. திருக்கோவிலின் ஆன்மீகம் மற்றும் ஐதீக விதிமுறைகள் மீறப்படுவதால் நமது நல்லெண்ணம் படைத்த சில இளம் பட்டாச்சாரிகளை நாம் இழந்துள்ளோம்… என்று உள்ளம் குமுறும் அன்பர்கள், இப்படிப்பட்ட விதிமீறல்களை மேற்கொள்ள இது ஒன்றும் அரசு அலுவலகம் அல்ல, நினைத்த நேரத்தில் நினைத்த அறையைத் திறந்து நினைத்த படி கதவுகளைத் திறந்து பயன்படுத்துவதற்கு..!  இது கோயில். இதற்கு ஆகமங்கள், விதிகள் உண்டு என்று அறநிலையத்துறை அதிகாரிக்கு நினைவூட்டி வருகின்றனர்.

ALSO READ:  சோழ சாம்ராஜ்யத்தின் வளமான வரலாறும், கலாசாரமும் பெருமிதம் ஏற்படுத்துகிறது: மனதின் குரலில் மோடி!

கோயிலை வைத்துதான் ஊர் உள்ளது. ஊரில் நல்ல செழிப்பும், மழைப் பொழிவும் விளைச்சலும் திகழ, அவ்வூர் அந்தணர்கள் மூன்று வேளை சூரியனைப் போற்றுவதும், வழிபடுவதும், கோயிலில் பூஜைகள் குறைவற நடைபெறுவதும் முக்கியம் என அந்நாளில் ராஜாக்கள் கருதினர். அதனால்தான் கோயில்களை முக்கியமானதாகப் போற்றி, ஆகமம் அறிந்த நல்லோரால் கோயில்களைப் பாதுகாத்தனர். ஆனால்,  சில ஆண்டுகளாக சுற்று வட்டார பகுதிகளில் மழை பெய்தும் ஸ்ரீவில்லிபுத்தூர் நகரில் மட்டும் மழை பெய்வதில்லை. இறைவனின் கோபத்தினால்தான் மழை பெய்வது இல்லை எனக் கூறுகின்றனர் ஊர்ப் பெரியவர்கள்.

எனவே, சம்பந்தப்பட்ட இந்து சமய அறநிலைத்துறை அதிகாரிகள் மற்றும் ஆணையர்கள் இது குறித்து சிந்திக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கும் ஆலய அன்பர்கள், இங்கே பணிபுரியும் அறநிலையத்துறை அதிகாரி, ஆலய பணியாளர்கள் ஆகியோரே இந்த தீவினைகளுக்குப் பொறுப்பாவார்கள் என்று கை நீட்டுகின்றனர். எனவே இதுதொடர்பில் விரைந்து நடவடிக்கை எடுத்து, தவறு செய்தவர்களை தண்டிக்காவிட்டால், ஸ்ரீவில்லிபுத்தூர் ஊர் மேலும் மோசமாகிவிடும் என்று உள்ளம் பதைபதைத்துக் கூறுகின்றனர்.

ALSO READ:  சிவசைலநாதர் பரமகல்யாணி எழுந்தருள, மீன்பிடி திருவிழா!

ஏப்.29 ஆம் தேதி காலையில் பதிவு செய்த வீடியோ… 

1 COMMENT

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் – ஜூலை 15 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

அண்ணாமலை தமிழக முதலமைச்சராக வேண்டுமா இல்லையா?

தமிழகத்தில் திமுக மற்றும் அதிமுக-வுக்கு மாறான ஒரு ஆட்சியை விரும்புகிற விவரம் தெரிந்தவர்களில் பலர், அதற்குத் தமிழக பாஜக-வை விட அண்ணாமலையை அதிகமாக நம்பலாம். இதுவும் அண்ணாமலை தனிக்கட்சி தொடங்க ஊக்கம் அளித்திருக்கும்.

FIFA 2026: காலிறுதி ஆட்டங்கள்

அரையிறுதி ஆட்டங்களில் முதல் ஆட்டம் இன்று (14.07.2026) ஆர்லிங்க்டனில் ஃபிரான்சு, ஸ்பெயின் அணிகளுக்கிடையே நடைபெறுகிறது. இரண்டாவது ஆட்டம் நாளை (15.07.2026) அர்ஜெண்டைனா, இங்கிலாந்து அணிகளுக்கிடையே அட்லாண்டாவில் நடைபெறுகிறது.    

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா?

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா? ஒழிக்காது. இரு தரப்பின் ஜாதிகளில் ஏதோவொன்றையே பலப்படுத்தும்.

பஞ்சாங்கம் ஜூலை 14 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் – ஜூலை 15 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

அண்ணாமலை தமிழக முதலமைச்சராக வேண்டுமா இல்லையா?

தமிழகத்தில் திமுக மற்றும் அதிமுக-வுக்கு மாறான ஒரு ஆட்சியை விரும்புகிற விவரம் தெரிந்தவர்களில் பலர், அதற்குத் தமிழக பாஜக-வை விட அண்ணாமலையை அதிகமாக நம்பலாம். இதுவும் அண்ணாமலை தனிக்கட்சி தொடங்க ஊக்கம் அளித்திருக்கும்.

FIFA 2026: காலிறுதி ஆட்டங்கள்

அரையிறுதி ஆட்டங்களில் முதல் ஆட்டம் இன்று (14.07.2026) ஆர்லிங்க்டனில் ஃபிரான்சு, ஸ்பெயின் அணிகளுக்கிடையே நடைபெறுகிறது. இரண்டாவது ஆட்டம் நாளை (15.07.2026) அர்ஜெண்டைனா, இங்கிலாந்து அணிகளுக்கிடையே அட்லாண்டாவில் நடைபெறுகிறது.    

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா?

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா? ஒழிக்காது. இரு தரப்பின் ஜாதிகளில் ஏதோவொன்றையே பலப்படுத்தும்.

பஞ்சாங்கம் ஜூலை 14 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

IND Vs ENG T20: தொடர் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி!

இதன் மூலம் இங்கிலாந்து அணி தொடரை 4-0 என்ற கணக்கில் வென்றது.

அன்புத் தம்பி அண்ணா மலைக்கு…

உயர்திரு. அண்ணாமலை அவர்களுக்கு, மனமுவந்த ஆசிகள். எனக்கு வயது 81. அந்த வயதின் உரிமையிலும் தைரியத்திலும் உங்களை வாழ்த்தி ஆசீர்வதிக்கிறேன்!

ஒருவர், தன் இந்து மதத்தை வீட்டுக்குள் வைத்து எதற்குப் பூட்ட வேண்டும்?

ஒரு விஷயத்தை வெளியில் காட்டிக் கொள்ளமாட்டேன் என்று சொன்னால் அதை வெளியில் காட்டத் தகுந்ததாக மதிக்கவில்லை என்றுதான் அர்த்தம்.

Entertainment News

Popular Categories