spot_img
spot_img

சற்று முன் :

சினிமா :

ஆன்மிகம்:

― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeகிரைம் நியூஸ்சென்னை அருகே போதை மாத்திரை ஊசி-இருவர் 1ஈகைது..

சென்னை அருகே போதை மாத்திரை ஊசி-இருவர் 1ஈகைது..

சென்னை அருகே போதை மாத்திரை வைத்து விற்பனை செய்த இருவரை போலீசார் கைது செய்தனர்.

சென்னை மதுரவாயல் பகுதியில் போதை மாத்திரை விற்பனை நடப்பதாக அண்ணா நகர் போலீசாருக்கு ரகசியமாக தகவல் கிடைத்தது.   

சப் – இன்ஸ்பெக்டர் கோபால் தலைமையிலான தனிப்படை போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனர். இந்த நிலையில் சனிக்கிழமை மாலை சீமாத்தம்மன் நகரில் சந்தேகப்படும்படி மோட்டார் சைக்கிளில் வந்த 2 வாலிபர்களை போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர். 
அவர்கள் அதே பகுதி பாக்யலட்சுமி நகரை சேர்ந்த குகன் (20) மற்றும் ஆலப்பாக்கம் பகுதியை சேர்ந்த கிஷோர்குமார் (20) என்பது தெரிந்தது மேலும் அவர்களது பையை சோதனை செய்ததில் அதில் டைடால் எனும் போதை மாத்திரை மற்றும் ஊசி மருந்துகள் பதுக்கி வைத்து இருப்பதும் கண்டு பிடிக்கப்பட்டது. 

தனியார் கல்லூரி மாணவர்களான குகன், கிஷோர்குமார் இருவரும் ஆன்லைன் மூலம் ஆர்டர் செய்து போதை மாத்திரைகள் வரவழைத்து அதை உடன் படிக்கும் நண்பர்கள் மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு சப்ளை செய்து வருவதும் தெரியவந்தது. இதையடுத்து இருவரையும் போலீசார் கைது செய்தனர் அவர்களிடம் இருந்து 91 போதை மாத்திரைகள், 4 ஊசி மருந்துகள் மற்றும் மோட்டார் சைக்கிள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது.

202204240932569466 2 college students arrested for selling drugs in Madurai SECVPF

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Follow us on Social Media

19,184FansLike
386FollowersFollow
93FollowersFollow
0FollowersFollow
4,866FollowersFollow
18,200SubscribersSubscribe