தஞ்சை அருகே கூட்டு பாலியலில் ஈடுபட்ட 4பேர் கைது..

தஞ்சை அருகே உள்ள குலுங்குளம் சோழகிரிபட்டியை சேர்ந்த 22 வயது இளம்பெண் பிளஸ்-2 முடித்துவிட்டு தஞ்சையில் மளிகை கடையில் வேலை செய்து வருகிறார்.

இவர் வேலை முடிந்து கடையில் இருந்து தஞ்சை புது பஸ்நிலையம் நோக்கி நடத்தி சென்று கொண்டிருந்தார்.

அப்போது அருகில் உள்ள மேட்டுப்பட்டி பகுதியை சேர்ந்த கொடியரசன் என்ற வாலிபர் மோட்டார் சைக்கிளில் சென்று இளம்பெண்ணை மறித்து பேசினார். ஏற்கனவே அறிமுகமான இவர் மோட்டார் சைக்கிளில் வீட்டில் கொண்டு போய் விடுகிறேன் மோட்டார் சைக்கிளில் ஏறு என கூறியுள்ளார்.இதற்கு இளம்பெண் மறுப்பு தெரிவித்ததார். இதனால் அவரது செல்போனை பறித்துக்கொண்டு மிரட்டினார். இதனால் பயந்து போன இளம்பெண் வேறு வழியின்றி மோட்டார் சைக்கிளில் ஏறியுள்ளார்.

பின்னர் இளம்பெண்ணின் வீட்டுக்கு செல்லும் வழியில் மேட்டுப்பட்டியை தாண்டியதும் கொடியரசன் மோட்டார் சைக்கிளை காட்டுப்பகுதிக்கு திருப்பி உள்ளார். இதனால் பயந்துபோன இளம்பெண் சத்தம் போட்டுள்ளார்.இருப்பினும் கொடியரசன் வலுக்கட்டாயமாக அங்குள்ள முந்திரி காட்டுக்கு இளம்பெண்ணை கடத்திச்சென்றார். அங்கு கொடியரசனின் நண்பர்களான சுகுமார், தமிழரசன், கண்ணன் ஆகிய 3 பேர் இருந்தனர். இதனால் அஞ்சி நடுங்கிய இளம்பெண் அங்கிருந்து தப்பிக்க முயன்றார். ஆனால் கொடியரசனும் அவரது நண்பர்கள் 3 பேரும் சேர்ந்து இளம்பெண்ணை பிடித்துக் கொண்டு அவரிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டனர்.

இங்கிருந்து ஓட முயன்றதால் கொன்று போட்டு விடுவோம் என்று மிரட்டல் விடுத்த 4 பேரும் இளம்பெண்ணிடம் 4 பேரும் கூட்டு பாலியலில் ஈடுபட்டதால் அவர்களிடம் இருந்து தப்பிக்க முடியாமல் இளம்பெண் தவித்தார்.

ALSO READ:  பிரசாரத்தில் இருந்த திமுக., வேட்பாளர்; வீட்டில் 122 பவுன் நகை கொள்ளை!

4 பேரும் முந்திரி காட்டுக்குள் வைத்து இளம்பெண்ணை மாறி மாறி கற்பழித்தனர். அவர்களின் பிடியில் இருந்து தப்ப முடியாததால் உடனடியாக இளம்பெண்ணால் அங்கிருந்து வர முடியவில்லை.

நீண்டநேரம் கழித்து இளம்பெண்ணிடம் இப்போது வீட்டுக்கு போ… யாரிடமாவது சொன்னால் நடப்பதே வேறு என்று மீண்டும் 4 பேரும் மிரட்டல்விடுத்துள்ளனர்.

இதையடுத்து முந்திரி தோப்பில் இருந்து நடந்தே வீட்டுக்கு வந்த இளம்பெண் இதுபற்றி தனது உறவினர் ஒருவரிடம் தெரிவித்துள்ளார். அவரது அறிவுறுத்தலின் பேரில் பின்னர் வல்லம் போலீசில் புகார் செய்யப்பட்டது.

போலீசார் வழக்கு பதிவு செய்து கொடியரசன், சுகுமார், தமிழரசன், கண்ணன் ஆகிய 4 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

images 14 2 - 2026

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

மதுரை டிவிஎஸ் நகர் கோதண்ட ராமர் கோவிலில் மகா சம்ப்ரோக்ஷணம்!

மதுரை மாவட்டம், பழங்காநத்தம் அருகே உள்ள டிவிஎஸ் நகர் பகுதியில் அமைந்துள்ள மதுரை டிவிஎஸ் குடும்பத்திற்கு சொந்தமான அருள்மிகு கோதண்ட ராமர் திருக்கோவிலில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா வெகுவிமரிசையாக நடைபெற்றது.

பஞ்சாங்கம் – ஜூன் 24 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் ஜூன் 23 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

‘தவெக., இன்னுமொரு திமுக., தானா?’ திருப்பரங்குன்ற தீப நிலைப்பாட்டுக்கு இந்து முன்னணி கண்டனம்!

உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை திருப்பரங்குன்றம் மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்றுவது தொடர்பாக வழங்கிய உத்தரவை அமல்படுத்துவதில், புதிதாக பதவி ஏற்றுள்ள தவெகவின் நிலைப்பாட்டை கேட்டிருந்தது. அது குறித்து இன்று தமிழக அரசு சார்பில் தாக்கல் செய்துள்ள பதில் மனுவில் குழப்பமான கருத்துக்களை தெரிவித்துள்ளது.

ஆர்.எஸ்.எஸ்., பதிவு செய்யப்பட்ட அமைப்பா?

ஆர் எஸ் எஸ் தனது பதிவு சான்றிதழைக் காட்ட வேண்டுமென கார்கே கேட்பது பொருள் அற்றது. ஆர் எஸ் எஸ் 100 ஆண்டுகளுக்கு மேலாக இந்த நாட்டில் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. அதில் 75 ஆண்டுகள் இந்திய அரசமைப்பு சட்டத்திற்கு உட்பட்டது.

Topics

மதுரை டிவிஎஸ் நகர் கோதண்ட ராமர் கோவிலில் மகா சம்ப்ரோக்ஷணம்!

மதுரை மாவட்டம், பழங்காநத்தம் அருகே உள்ள டிவிஎஸ் நகர் பகுதியில் அமைந்துள்ள மதுரை டிவிஎஸ் குடும்பத்திற்கு சொந்தமான அருள்மிகு கோதண்ட ராமர் திருக்கோவிலில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா வெகுவிமரிசையாக நடைபெற்றது.

பஞ்சாங்கம் – ஜூன் 24 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் ஜூன் 23 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

‘தவெக., இன்னுமொரு திமுக., தானா?’ திருப்பரங்குன்ற தீப நிலைப்பாட்டுக்கு இந்து முன்னணி கண்டனம்!

உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை திருப்பரங்குன்றம் மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்றுவது தொடர்பாக வழங்கிய உத்தரவை அமல்படுத்துவதில், புதிதாக பதவி ஏற்றுள்ள தவெகவின் நிலைப்பாட்டை கேட்டிருந்தது. அது குறித்து இன்று தமிழக அரசு சார்பில் தாக்கல் செய்துள்ள பதில் மனுவில் குழப்பமான கருத்துக்களை தெரிவித்துள்ளது.

ஆர்.எஸ்.எஸ்., பதிவு செய்யப்பட்ட அமைப்பா?

ஆர் எஸ் எஸ் தனது பதிவு சான்றிதழைக் காட்ட வேண்டுமென கார்கே கேட்பது பொருள் அற்றது. ஆர் எஸ் எஸ் 100 ஆண்டுகளுக்கு மேலாக இந்த நாட்டில் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. அதில் 75 ஆண்டுகள் இந்திய அரசமைப்பு சட்டத்திற்கு உட்பட்டது.

பஞ்சாங்கம் ஜூன் 22 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் ஜூன் 21 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

Entertainment News

Popular Categories