ரெயிலில் கடத்திய ரூ.2 கோடி மதிப்பிலான அம்பர்கிரிசை பறிமுதல் ..

784506 untitled 1 - 2026

நாகர்கோவிலில் இருந்து மும்பைக்கு ரெயிலில் கடத்த முயன்ற ரூ.2 கோடி மதிப்பிலான அம்பர்கிரிசை வனத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

அரியவகை உயிரினமான ஸ்பேம் திமிங்கலத்தின் உமிழ்நீரில்(அம்பர் கிரிஸ்) இருந்து உயர்ரக வாசனை திரவியங்கள் வெளிநாடுகளில் தயாரிக்கப்பட்டு வருகின்றன. மேலும் அதனை மூலப்பொருளாக பயன்படுத்தி மருத்துவத்துறையில் பல்வேறு மருந்துகளும் தயாரிக்கப்படுகிறது. இப்படி பல்வேறு சிறப்புகளை கொண்ட அம்பர்கிரிசின் தேவை உலகம் முழுவதும் அதிகமாக இருப்பதால் சர்வதேச சந்தையில் இதற்கு அதிக மதிப்பு உண்டு. இதனை கடத்தி கள்ளச்சந்தையில் விற்று கோடிக்கணக்கில் பணம் பார்க்கும் கும்பலும் உள்ளன.

இந்த நிலையில் இன்று நாகர்கோவிலில் இருந்து மும்பைக்கு ரெயில் மூலம் திமிங்கலத்தின் உமிழ்நீர் கட்டி கடத்தப்பட இருப்பதாக மாவட்ட வனத்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனைதொடர்ந்து மாவட்ட வனஅதிகாரி ரெயில் நிலையத்து விரைந்து சென்றனர். பின்னர் ரெயில்வே போலீசாரின் உதவியுடன் ரெயில் நிலையத்தில் இருந்து புறப்பட தயாராக இருந்த மும்பை எக்ஸ்பிரஸ் ரெயிலை சோதனை நடத்தினார்கள்.

அப்போது ரெயிலின் முன்பதிவு செய்யப்பட்ட குளிர்சாதன பெட்டியில் ஒன்றில் அதிகாரிகள் மற்றும் போலீசார் சோதனை செய்தபோது அங்கிருந்த வாலிபர் ஒருவாிடம் விசாரித்தனர். அப்போது அவர் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்தால், சந்தேகம் அடைந்த போலீசார் அந்த வாலிபர் வைத்திருந்த பையை சோதனை செய்தனர். அந்த பையில் திமிங்கலத்தின் உமிழ்நீர் கட்டி மறைத்து வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதன் எடை 2 கிலோ ஆகும். இதனை தொடர்ந்து அம்பர்கிரிசை பறிமுதல் செய்த வனத்துறையினர் அந்த வாலிபாரை நாகர்கோவிலில் உள்ள மாவட்ட வனஅலுவலகத்துக்கு விசாரணைக்கு அழைத்துச் சென்றார்கள்.

விசாரணையில், அழகியபாண்டியபுரம் தோனயோர்புரத்தை சேர்ந்த தினகரன் லாசர்( 35) என்பதும், திமிங்கிலத்தின் உமிழ்நீர் கட்டியை ரெயிலில் கடத்தி சென்று மும்பைக்கு விற்க முயன்றதும் தெரியவந்தது.

மேலும் இந்த கடத்தல் சம்பவத்தில் 5 பேருக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது. இதனைதொடர்ந்து தினகரன் மற்றும் பெருவிளை விநாயகர் தெருவை சேர்ந்த அருள்(27), கீழ பெருவிளை மகேஷ்(42), பார்வதிபுரம் திலீப் குமார்(36), ஆசாரிபள்ளம் சதீஷ்(35), தம்மத்து கோணம் சுபா தங்கராஜ்(49) ஆகிய 6 பேரை வனத்துறை அதிகாரிகள் கைது செய்தனர். மேலும் இந்த கடத்தல் சம்பவத்தில் வேறுயாருக்கு தொடர்பு உள்ளதா என அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 07 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – மே 7 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் மே 07 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – மே 7 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

Entertainment News

Popular Categories