மனைவியை கொல்ல கதவில் மின்சாரம் பாய்ச்சி மாமியாரை கொன்ற நபர்..

152726 - 2026

மத்தியபிரதேச மாநிலம் பிடுல் மாவட்டம் சாய்ஹிடா என்ற கிராத்தை சேர்ந்தவருக்கும் அவரது மனைவிக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. மது பழக்கம் கொண்ட அந்த நபர் மது குடித்துவிட்டு மனைவியை அவ்வப்போது தாக்கவும் செய்துள்ளார். இதனிடையே, கணவன் – மனைவி இடையே நேற்று முன் தினம் இரவு மீண்டும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. வாக்குவாதம் முற்றியதையடுத்து அந்த பெண் தனது அம்மா வீட்டிற்கு சென்றுள்ளார்.

இதனால், ஆத்திரமடைந்த பெண்ணின் கணவர் தனது மாமியார் வீட்டிற்கு சென்றுள்ளார். மாமியார் வீட்டின் முன் வாசலில் இரும்பால் ஆன கதவு உள்ளது. இந்நிலையில், சண்டையிட்டுக்கொண்டு வீட்டை விட்டு வெளியேறி மாமியார் வீட்டிற்கு வந்ததால் அந்த நபர் தனது மனைவி மீது மிகுந்த கோபத்தில் இருந்துள்ளார். பின்னர், தனது மனைவியை கொலை செய்ய எண்ணிய அந்த நபர் மாமியர் வீட்டின் இரும்பு கதவு மீது மின்சாரம் பாய்ச்சியுள்ளார். மின்சார ஒயரை இரும்பு கதவில் உரசும்படி வைத்து கதவில் மின்சாரத்தை பாய்ச்சியுள்ளார்.

ஆனால், மனைவியை கொலை செய்ய பின்னிய சதி வலையில் சிக்கி மாமியார் உயிரிழந்துள்ளார். மின்சாரம் பாய்ச்சிய அந்த கதவை அந்த நபரின் 55 வயதான மாமியார் திறந்துள்ளார். அப்போது, உடலில் மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே மாமியார் உயிரிழந்தார்.

இதை அருகே ஒளிந்து நின்று பார்த்துக்கொண்டிருந்த அந்த நபர் அங்கிருந்து தப்பியோடிவிட்டார். இது குறித்து தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். பின்னர், அப்பகுதியில் உள்ள மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. கதவை திறந்தபோது மின்சாரம் பாய்ந்து உயிரிழந்த அந்த பெண்ணை மீட்டு பிரேதபரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும், மனைவியை கொல்ல சதி திட்டமிட்டு கதவில் மின்சாரம் பாய்ச்சி மாமியாரை கொன்றுவிட்டு தப்பியோடிய நபரை போலீசார் தேடி வருகின்றனர். இந்த சம்பவத்தில் தொடர்புடைய நபர்களின் பெயர் உள்ளிட்ட விவரங்களை அதிகாரிகள் வெளியிடவில்லை.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

சரணாகதி அரசல்ல, சாதுர்யமான அரசு!

இந்தியாவில் உள்ள முற்போக்குவாதிகள் பலரும் தங்கள் எரிச்சலை உள்முகமாக திருப்பி உள்ளனர். ஈரானுக்கு எதிரான அமெரிக்க - இஸ்ரேல் போரில் இந்திய அரசு அமைதி காப்பதை கோழைத்தனம் என்று

பஞ்சாங்கம் மார்ச் 20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

முதலமைச்சரின் காரை மறித்து அதிரடி சோதனை; பறக்கும்படை அதிகாரிகளால் பரபரப்பு!

பாண்டிச்சேரி முதல்வரின் காரை அதிரடியாக பரிசோதனை செய்த தேர்தல் பறக்கும் படை – பரபரப்பு

விளாத்திகுளம் விவகாரத்தில் பழைய குற்றவாளி கைது; சந்தேகம் எழுப்பும் அண்ணாமலை!

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் முக்கியக் குற்றவாளியைக் கைது செய்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

Topics

சரணாகதி அரசல்ல, சாதுர்யமான அரசு!

இந்தியாவில் உள்ள முற்போக்குவாதிகள் பலரும் தங்கள் எரிச்சலை உள்முகமாக திருப்பி உள்ளனர். ஈரானுக்கு எதிரான அமெரிக்க - இஸ்ரேல் போரில் இந்திய அரசு அமைதி காப்பதை கோழைத்தனம் என்று

பஞ்சாங்கம் மார்ச் 20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

முதலமைச்சரின் காரை மறித்து அதிரடி சோதனை; பறக்கும்படை அதிகாரிகளால் பரபரப்பு!

பாண்டிச்சேரி முதல்வரின் காரை அதிரடியாக பரிசோதனை செய்த தேர்தல் பறக்கும் படை – பரபரப்பு

விளாத்திகுளம் விவகாரத்தில் பழைய குற்றவாளி கைது; சந்தேகம் எழுப்பும் அண்ணாமலை!

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் முக்கியக் குற்றவாளியைக் கைது செய்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

இன்று யுகாதி! இந்நாளின் சிறப்பு என்ன?

யுகாதி அன்று பல பதார்த்தங்களுடன் விருந்தும் உண்டு. இன்று யுகாதி மற்றும் புத்தாண்டு கொண்டாடும் சனாதன வழி மக்களுக்கு வாழ்த்துகள்!

பஞ்சாங்கம் மார்ச் 19 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

கம்யூனிஸ்ட்களை 5 வருடம் அடக்கி, 5 சீட்டுக்குள் அடிமைப்படுத்திய திமுக.,!

“பாஜக.,வை வீழ்த்துவதே முதன்மை நோக்கம். கூட்டணியில் புதிய கட்சிகள் இணைந்துள்ளதால் தொகுதிகளை குறைத்துக் கொள்ள முதல்வர் கேட்டார்.

Entertainment News

Popular Categories