தமிழ் பிரசார சபா ஏன் அமையவில்லை?!

kashi tamil sangamam - 2026

ஹிந்தி பிரசார சபா போல்… இவர்களால் தமிழ் பிரசார சபா அமைக்க முடிந்ததா என்று ஒரு கேள்வி எழுப்பப் பட்டிருக்கிறது- சரி நாம் இவர்கள் வழி தமிழ்லயே சொல்வோமே…  தமிழ் பரப்புரை அவை  🙂  – அமைக்க முடிந்ததா?!

நாட்டின் சுதந்திரப் போராட்ட வரலாற்றைப் படித்தவர்களுக்கு ஒன்று நன்றாகப் புரியும்…! 1857 முதல் சுதந்திரப் போராட்டத்தின் பின், பிரிட்டிஷ் கிழக்கிந்தியக் கம்பெனியின் அதிகாரத்தில் இருந்து பிரிட்டிஷ் அரசின் நேரடி கட்டுப்பாட்டில் இந்தியப் பகுதிகள் வந்த பிறகு, மொழி வழி, கலாசார வழி, மத வழிப் பிரிவினைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து செயல்பட்டது பிரிட்டிஷ் அரசு.

அப்படித்தான், ஹிந்தி ஒரு தரப்பு, அடுத்த தரப்பு உருது, மற்ற தரப்பு ஆங்கிலம் என்று மத வழியே மொழிப் பிரிவினை வெளிப்படுத்தப்பட்டது. நாட்டில் ஹிந்துக்களை மொழி வழியே ஒருங்கிணைக்கத்தான் ஹிந்தி என்று பிரசாரம் பலமானது. உண்மையில், நாடெங்கும் உள்ள மக்களை மொழி வழியே ஒருங்கிணைக்க முன்னெடுக்கப்பட்டது இந்தி மொழி. 

ஆயிரம் ஆண்டு பலமான பாரம்பரியமான இலக்கண, இலக்கியச் செழுமை என்று சொல்ல முடியாதபோதும், தேசத்தின் ஒற்றுமை உணர்வு கருதி அறுநூறு ஆண்டுகளுக்கு முந்தைய இலக்கிய மொழி இந்தியை தற்போதைய நாளில் இருந்து சுமார் இருநூறு ஆண்டுகளுக்கு  முந்தைய தேசாபிமானிகள் உரைநடை இலக்கியங்கள், கவிதைகள் படைத்து மக்களிடையே பரப்பினார்கள். அதன் முக்கிய நோக்கம் – தேசம் முழுதுமுள்ள மக்களிடையே ஒற்றுமை உணர்வை வளர்ப்பது! அப்படித்தான் பின்னாளில் மகாத்மா காந்தி ஹிந்தி பிரசார சபா நிறுவி தேசம் முழுதும் ஹிந்தி பரவலாக்கத்தை வளர்த்தார். அதேநேரம், உருது ஒருபுறம் வலிய வளர்க்கப்பட்டதும், தேசத்தில் மத வழி பிரிவினை ஏற்பட்டதும் வரலாறு. 

சரி, இருக்கட்டும்! தமிழ் பிரசார சபா ஏன் தோற்றுவிக்கப்படவில்லை அல்லது வளரவில்லை!? அத்தகைய எண்ணம் இருந்திருந்தால், ஆங்கிலேயன் மத வழி மொழியான ஆங்கிலத்தை ஓஹோவெனத் தூக்கிப் பிடித்து, தமிழை தங்கத்தட்டில் வைத்த ஏதோ ஒன்றென ஒப்புமை கூறி தரம் தாழ்த்தி இன்றைய செல்வச்செழிப்புச் சீமான்களின் கோல்மால்புரக் கோமான்களின் முன்னோடிகளே செய்திருப்பார்களே! ஏன் செய்யவில்லை? அட… இண்டிய நாடு என்ற அளவில் கொண்டு செல்லாவிட்டாலும், திராவிட நாடு என்று சொல்லிக் கொண்டிருந்தார்கள் அல்லவா… அந்தப் பகுதிகளிலாவது தமிழை வளர்க்கவும் பிரசாரம் செய்யவும் செய்திருக்கலாமே!  சுமார் அறுபதாண்டு ஆட்சிக்கட்டிலில் இருந்த  திராவிட இயக்கங்களின் மாநில அரசால் செய்ய முடியாததா? ஏன் செய்யவில்லை? 

பிரதமர் நரேந்திர மோடி வட மாநிலங்களிலும், வெளிநாடுகளிலும், தமது மேடைப் பேச்சுகளின் வாயிலாகவும், நாடாளுமன்றத்திலும், தன் தொகுதியாக காசி தமிழ்ச் சங்கம் மூலம் உ.பி. யிலும், மேற்கொள்ளப்படும் தமிழ் பிரசார உத்தியைக் கூட, செய்து வரும் செயல்களில் சிறிதளவு கூட தமிழகத்தைக் கடந்து திராவிட அரசுகளால் செய்ய முடியவில்லையே! 

எனவே நம் வழி பாரதியின் வழியாகவே இருக்க வேண்டும்! வாழிய செந்தமிழ்! வாழ்க நற்றமிழர்! வாழிய பாரத மணித்திருநாடு!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஏப்ரல் 27 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள்தொகைக் கனக்கெடுப்பு பற்றி, மனதின் குரலில் பிரதமர் மோடி!

வடகிழக்குப் பகுதி நம்மனைவருக்கும் அஷ்டலக்ஷ்மிக்குச் சமானம்.  இங்கே நிறைவாக திறன்கள் இருக்கின்றன, வடகிழக்கின் இயற்கை வனப்பு அனைவரின் கவனத்தையும் ஈர்த்துவிடும். 

பஞ்சாங்கம் ஏப்ரல் 26 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

சபரிமலை கோயிலுக்குள் அனைத்து வயது பெண்களும் நுழையலாமா?

உலக பிரசித்தி பெற்ற கேரளாவில் உள்ள தனித்துவம் வாய்ந்த சபரிமலை சுவாமி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 25 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

Topics

பஞ்சாங்கம் ஏப்ரல் 27 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள்தொகைக் கனக்கெடுப்பு பற்றி, மனதின் குரலில் பிரதமர் மோடி!

வடகிழக்குப் பகுதி நம்மனைவருக்கும் அஷ்டலக்ஷ்மிக்குச் சமானம்.  இங்கே நிறைவாக திறன்கள் இருக்கின்றன, வடகிழக்கின் இயற்கை வனப்பு அனைவரின் கவனத்தையும் ஈர்த்துவிடும். 

பஞ்சாங்கம் ஏப்ரல் 26 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

சபரிமலை கோயிலுக்குள் அனைத்து வயது பெண்களும் நுழையலாமா?

உலக பிரசித்தி பெற்ற கேரளாவில் உள்ள தனித்துவம் வாய்ந்த சபரிமலை சுவாமி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 25 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் ஏப்ரல் 24 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

Entertainment News

Popular Categories