மாணவனை அடித்த ஆசிரியர் தற்காலிக பணியிடை நீக்கம்!

suspended - 2026

புதுக்கோட்டை பேரன்ங்குளம் அரசு உதவிபெறும் தூய மரியன்னை ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வருபவர் நுஜிபூர் ரகுமான்(15). புதுக்கோட்டை அசோக்நகரைச் சேர்ந்த சௌபர் சாதிக் மகன் ஆவார்.

மாணவர்கள் அனைவருக்கும் பள்ளி கணித ஆசிரியர், ரெக்கார்டு நோட் எழுதக் கொடுத்திருக்கிறார். அதில், நுஜிபூர் ரகுமான் ரெக்கார்டு நோட்டை முடிக்காமல் வந்துள்ளார்.. இதனால், கோபமடைந்த கணித ஆசிரியர், நுஜிபுர் ரகுமானை பிரம்பால் அடித்ததாகக் கூறப்படுகிறது.

student - 2026

இதில் மாணவனின் உடலில் முதுகு, கால் உள்ளிட்ட பகுதிகளில் காயம் ஏற்பட்டுள்ளது. இது பற்றி மாணவன் தன் பெற்றோரிடம் கூறியதையடுத்து உடனே அந்த மாணவனை சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு மாணவனுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

தங்கள் பிள்ளையைக் கண்மூடித்தனமாக தாக்கிய ஆசிரியர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என நுஜிபுர் ரகுமானின் பெற்றோர் பள்ளி நிர்வாகத்திடமும் மாவட்ட நிர்வாகத்துக்கும் கோரிக்கை விடுத்தனர்.
இதுபற்றி மாவட்ட முதன்மை கல்வி அலுவலரிடம் கேட்டபோது, `இதுகுறித்து முறையான விசாரணை மேற்கொள்ளப்பட்டு ஆசிரியர் தவறு செய்திருப்பின் அவர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.

student 1 - 2026

மாவட்ட ஆட்சியர் உமாமகேஸ்வரி விடுத்துள்ள அறிக்கையில், “10-ம் வகுப்பு படிக்கும் மாணவரை ஆசிரியர் ஒருவர் காயம் ஏற்படும் வகையில் அடித்ததாக வரப்பெற்ற தகவலின் அடிப்படையில் சம்பந்தப்பட்ட ஆசிரியரை உடனடியாகத் தற்காலிக பணியிடைநீக்கம் செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும், மாவட்டத்தில் அரசு, அரசு உதவிபெறும், சுயநிதி, மெட்ரிக் என அனைத்து பள்ளிகளிலும் மாணவர்கள் உடலளவிலும் மனதளவிலும் எவ்வித பாதிப்பும் ஏற்படாமல் ஆசிரியர்கள் மற்றும் பள்ளித் தலைமையாசிரியர்கள் பார்த்துக்கொள்ள வேண்டும். இதை மீறி செயல்படும் ஆசிரியர்கள் மற்றும் சம்பந்தப்பட்ட பள்ளி தலைமையாசிரியர் மீதும் ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும்” என்றும் எச்சரித்துள்ளார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

Topics

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

ஹிந்து விரோதிகளைத் தோற்கடிக்க… நமக்கான ஆளுமைகளைத் தேர்ந்தெடுப்போம்!

ஜனநாயக கடமையை ஆற்றுவோம்.. 100% வாக்களிப்போம். தமிழகத்தில் நமக்கான ஆளுமையை நாம்...

ஆதிசங்கரரின் சதச்லோகி – எளிய விளக்கம்!

காசியில் ஸ்ரீ பகவத்பாதர் தம் 9 - 12 வயதுக்குள் ப்ரஸ்தானத்ரய பாஷ்யங்களை இயற்றினார். அவற்றில் சொல்லப்பட்ட விஷயங்களை மக்கள் எளிதில் புரிந்து கொள்ள 100 சுலோகங்களில் ஆன சதச்லோகியை இயற்றினார்.

ஆதிசங்கர பகவத்பாதரின் ‘நிர்வாண ஷட்கம்’!

ஆதி சங்கர பகவத் பாதர் இயற்றிய நிர்வாண ஷடகம் மிகவும் பிரபலமான ஒன்று. நிர்வாண எனில் உருவமற்ற. ஷட் எனில் ஆறு என்ற எண்ணிக்கை.

Entertainment News

Popular Categories