அனந்தபுரம் அரசு பள்ளியில் மடிக்கணினி திருட்டு!

Published:

govt laptop - 2026

செஞ்சி அடுத்த அனந்தபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் மாணவர்களுக்கு வழங்குவதற்காக கடந்த 10ம் தேதி 216 லேப் டாப்கள் கொண்டு வரப்பட்டன.

இவற்றை அங்குள்ள அறை ஒன்றில் வைத்து பூட்டி வைத்திருந்தனர். கடந்த 19ம் தேதி மாலை 6:00 மணியளவில் அறையின் பூட்டு உடைக்கப்பட்டு 22 லேப் டாப்களை மர்ம நபர்கள் திருடி சென்றுள்ளனர்.

இதுகுறித்து தலைமையாசிரியர் ஆனந்தன் கொடுத்த புகாரின் பேரில், அனந்தபுரம் காவல்துறை வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ALSO READ:  சதுர்த்திக்கு சுதேசி, மண் பிள்ளையாரையே வாங்குங்கள், விற்பனை செய்யுங்கள்: பிரதமரின் அறைகூவல்!

Related articles

Recent articles

spot_img