வயது 7.. காவல் நிலையத்தில் இருந்து சிறுமிக்கு வந்த சம்மன்! விஷயம் என்ன தெரியுமா?

Screenshot_2020_0820_095817

பொன்னேரியில் 7 வயது சிறுமிக்கு, காவல் நிலையத்திற்கு விசாரணைக்கு வரும்படி போலீசார் சம்மன் வழங்கியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

பொன்னேரி சிவன் கோயில் தெருவில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் சுமார் 50க்கும் மேற்பட்ட மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர். பொன்னேரியை சேர்ந்த சமூக ஆர்வலரும் வழக்கறிஞருமான பாஸ்கரன் என்பவரது மகள் அதிகை முத்தரசியை கடந்த 2018ல் பள்ளியில் சேர்த்தபோது அரசு தொடக்கப் பள்ளியில் குடிநீர், கழிப்பறை, பள்ளி கட்டிடம், விளையாட்டு மைதானம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லாமல் இருந்துள்ளது.

மாணவர்கள் கல்வி கற்பதற்கு உகந்த சூழ்நிலையை ஏற்படுத்தும் வகையில் சுற்றி உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி, கட்டிடத்தை புதுப்பிக்க வேண்டும் என மாணவி அதிகை முத்தரசியும், அவரது தந்தை பாஸ்கரனும் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு ஒன்றை தொடர்ந்தனர்.

கடந்த மார்ச் மாதம் இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கிய உயர் நீதிமன்றம், ஓராண்டிற்குள் ஆக்கிரமிப்புகளை அகற்றி பழைய கட்டிடத்தை இடித்து, புதிய பள்ளிக் கட்டிடம் கட்டி விளையாட்டு மைதானம் உள்ளிட்ட அடிப்படை தேவைகளை செய்து தருமாறு உத்தரவு பிறப்பித்திருந்தது.

எனினும், நீதிமன்ற உத்தரவை பின்பற்றாமல் ஆக்கிரமிப்புகளை அகற்றாமல் பள்ளி கட்டுமான பணிகளை மேற்கொண்டு வருவதாக கூறப்படுகிறது. இதுகுறித்து மாணவி அதிகை முத்தரசி மீண்டும் அதிகாரிகளுக்கு மனு அனுப்பியுள்ளார்.

இந்நிலையில் நேற்று மாலையில் மீஞ்சூர் காவல் நிலையத்தில் இருந்து வந்த காவலர்கள் மாணவி அதிகை முத்தரசியை விசாரணைக்கு மீஞ்சூர் காவல் நிலையம் வருமாறு சம்மன் வழங்கியுள்ளனர்.

7 வயது சிறுமிக்கு காவல் நிலையத்திற்கு விசாரணைக்காக நேரில் வருமாறு போலீசார் சம்மன் அளித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து, காவல்துறை அதிகாரிகள் தரப்பில் கேட்டபோது, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து மனுதாரர் வயது குறிப்பிடாமல் வந்த மனுவை விசாரிப்பதற்காக மனுதாரர் அதிகை முத்தரசியின் வீட்டிற்கு சம்மன் கொண்டு செல்லப்பட்டதாகவும், மனுதாரர் சிறுமி என்பதால் காவல் நிலையத்திற்கு வர வேண்டாம், காவல்துறை அதிகாரிகள் நேரில் வந்து விசாரணை நடத்தி கொள்வதாக தெரிவித்தனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

இருதரப்பு மோதலில் எஸ்பி., சமரசம்; அமைதியாக நடைபெற்ற ஸ்வாமி ஊர்வலம்!

உசிலம்பட்டி அருகே எழுமலை அடுத்துள்ள ஆத்தங்கரைப்பட்டியில் சுமார் 400 ஆண்டுகள் பழமையான இந்து அறநிலையத்துறைக்கு

Topics

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

இருதரப்பு மோதலில் எஸ்பி., சமரசம்; அமைதியாக நடைபெற்ற ஸ்வாமி ஊர்வலம்!

உசிலம்பட்டி அருகே எழுமலை அடுத்துள்ள ஆத்தங்கரைப்பட்டியில் சுமார் 400 ஆண்டுகள் பழமையான இந்து அறநிலையத்துறைக்கு

சிவசைலநாதர் பரமகல்யாணி எழுந்தருள, மீன்பிடி திருவிழா!

ஸ்ரீ சிவசைலநாதரும் ஸ்ரீ பரமகல்யாணி அம்பாளும் மீன்பிடிக்கக் கிளம்பும் திருவிழா!

பஞ்சாங்கம் மே 2 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பக்தர்கள் திரளில் மதுரை – வைகை நதியில் இறங்கிய கள்ளழகர்!

மதுரையில் வைகை நதியில் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கி பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.

Entertainment News

Popular Categories