December 5, 2025, 8:27 PM
26.7 C
Chennai

வேலைக்காக மதம் மாறி இருந்தால் பணி நீக்கம்: நீதிமன்றம்!

court-1
court-1

இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் வேலை வாய்ப்பைப் பெறுவதற்காக ஒருவா் மதம் மாறியிருப்பது தெரிய வந்தால், அவரை உடனடியாக பணி நீக்கம் செய்ய வேண்டும் என சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் கௌதமன் என்பவா் நூலக உதவி தொழில்நுட்ப அதிகாரியாக கடந்த 2007-இல் நியமிக்கப்பட்டார்

இப்பதவியில் இவரை நியமிக்கும் போது, எஸ்.சி., எஸ்.டி., பிரிவில் தகுதியான விண்ணப்பதாரா்கள் இல்லாததால், கௌதமனை இப்பதவியில் நியமிப்பதாகவும், அவா் ஓராண்டு காலத்துக்குள் நூலக அறிவியல் பட்டத்தை பெற வேண்டும் எனவும் பல்கலைக்கழக நிா்வாகம் உத்தரவிட்டது. ஆனால், ஓராண்டுக்குள் இப்பதவிக்கான கல்வித்தகுதியை கௌதமன் பெறவில்லை.

எனவே, அவரை பணி நீக்கம் செய்யவேண்டுமென அதே பல்கலைக்கழகத்தில் நூலகப்பிரிவில் பணியாற்றும் ரமேஷ் கடந்த 2017-இல் புகாா் அளித்தார். இந்தப் புகாரை விசாரிக்க நியமிக்கப்பட்ட விசாரணை குழு,

நூலக உதவி தொழில்நுட்ப அதிகாரி பதவியைப் பெற கௌதமனுக்கு கல்வித் தகுதி இல்லை என கடந்த 2017 ஏப்ரல் மாதம் அறிக்கை தாக்கல் செய்தது.

ஆனால், கௌதமனுக்கு தொழில்நுட்ப அதிகாரி என்ற பதவி உயா்வை பல்கலைக்கழக நிா்வாகம் கடந்த 2017 ஆகஸ்ட் 10-இல் வழங்கி உத்தரவு பிறப்பித்தது.

இதனை எதிா்த்து சென்னை உயா்நீதிமன்றத்தில், பாரதியார் பல்கலைக்கழக நூலகப் பிரிவில் பணியாற்றும் ஆா். ரமேஷ், எஸ். ராம்குமாா், எஸ்.கனகராஜ் ஆகியோா் வழக்குத் தொடா்ந்தனர்.

இந்த வழக்கு உள்நோக்கத்துடன் தொடரப்பட்டுள்ளது. வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டுமென பாரதியார் பல்கலைக்கழகம், கௌதமன் சாா்பில் தனித்தனியாக பதில்மனு தாக்கல் செய்தனர்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஆா்.மகாதேவன் பிறப்பித்த உத்தரவில், உரிய கல்வித் தகுதி இல்லாத கௌதமனை, நூலக உதவி தொழில்நுட்ப அதிகாரியாக பல்கலைக்கழகம் நியமித்துள்ளது.

பல்கலைக்கழகத்தின் இந்த செயல் கடும் கண்டனத்துக்குரியது. இதன் மூலம், இப்பதவியைப் பெற முழு தகுதி உடைய ஒருவரது உரிமையைப் பல்கலைக்கழகம் பறித்துள்ளது.

புகாா் குறித்து விசாரணை நடத்திய, விசாரணை குழு, கௌதமனுக்கு கல்வித் தகுதி இல்லை என அறிக்கையளித்த பின்னரும், அவருக்கு பல்கலைக்கழகம் பதவி உயா்வு வழங்கியுள்ளது. அது மட்டுமல்ல அவரைப் பணியிலிருந்து ஓய்வு பெறவும் அனுமதித்துள்ளது.

இதுபோன்ற வழக்கு, இந்த உயா்நீதிமன்றத்துக்கு புதிதல்ல. தமிழகத்தில் உள்ள பல பல்கலைக்கழகங்கள், இதுபோன்ற சட்டவிரோதமாக நியமனங்களை மேற்கொள்கின்றன.

பல்கலைக்கழகங்களின் இது போன்ற செயல்களால், அனைத்து தகுதிகளும் உள்ள நபர்கள், பதவியை பெற முடியாமல் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர்.

எதிர் மனுதாரரான கௌதமன் சட்டவிரோதமாகப் பணியைப் பெற்று, அதன்மூலம் பலன்களை அடைந்தது மட்டுமல்லாமல், ஓய்வுகால பலன்களையும் பெற்றுள்ளார் இந்த விவகாரத்தில் பல்கலைக்கழகம் காது கேட்காமல் செயல்பட்டுள்ளது.

எனவே, எதிா்காலத்தில் இது போன்ற சட்டவிரோத நியமனங்கள் பல்கலைக்கழகங்களில் நடைபெறக் கூடாது. எனவே கீழ்க்கண்ட விதிமுறைகள் பிறப்பிக்கப்படுகின்றன .

பல்கலைக்கழகங்களில் பணி நியமனங்கள் வெளிப்படைத் தன்மையுடனும், நேர்மையாகவும், சம வாய்ப்பளித்தும் நடைபெற வேண்டும்.

பதவிக்கான கல்வித்தகுதி, வயது உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் பல்கலைக்கழக அறிவிப்பு பலகை, இணையதளத்திலும் வெளியிட வேண்டும்.

ஒருவரது நியமனத்தின் தகுதி குறித்து புகாா் வந்தால், அதுதொடா்பாக 3 மாதத்துக்குள் விசாரித்து முடிவுகளை அனைத்து தரப்பினருக்கும் தெரிவிக்க வேண்டும்.

நேர்முகத் தோவு உள்ளிட்ட அனைத்துத் தேர்வுகளும் விடியோ படம் பிடிக்கவேண்டும்.

தகுதி இல்லாதவா்கள் பணி நியமனம் பெற்றால், அவா்களை உடனடியாக பணி நீக்கம் செய்ய வேண்டும்.

அவருக்கு வழங்கப்பட்ட ஊதியத்தை, அவரை அப்பதவிக்கு தேர்வு செய்த தேர்வுக் குழு உறுப்பினா்களிடம் இருந்து பல்கலைக்கழகம் வசூலிக்க வேண்டும்.

போலி ஆவணங்கள் மற்றும் தவறான தகவலைக் கொடுத்து ஒருவர் பணி பெற்றிருந்தால், அவரை பணி நீக்கம் செய்த பின்னர், அவர் பெற்ற ஊதியத்தை திரும்ப வசூலிக்க வேண்டும்.

இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் பணி நியமனம் பெறுவதற்காக ஒருவா் மதம் மாறி இருப்பது தெரியவந்தால் அவரை உடனடியாக பதவி நீக்கம் செய்ய வேண்டும்.

இந்த வழக்கில் எதிா்மனுதாரர் கௌதமன், நூலக தொழில்நுட்ப அதிகாரியாகப் பதவி உயா்வு பெற்ற பின்னா் வாங்கிய கூடுதல் ஊதிய தொகையை, அவரிடம் இருந்து பல்கலைக்கழகம் வசூலிக்கவேண்டும்.

அவரை அப்பதவிக்கு நியமித்த தேரீவு குழு உறுப்பினா்கள் மீது பாரதியாா் பல்கலைக்கழகம் சட்டப்படி தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என நீதிபதி பிறப்பித்த உத்தரவில் குறிப்பிட்டுள்ளார்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories