ஆளுநர் அதிரடி; பல்கலை. துணைவேந்தர்களுடன் இன்று ஆலோசனை

Published:

சென்னை:

அதிரடி நடவடிக்கைகளுக்கு பெயர் பெற்றுள்ள தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், இன்று தமிழக பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்களுடன்  ஆலோசனை நடத்துகிறார்.

பல்கலைக்கழகங்களில் பரவலாக முறைகேடுகள் நடப்பதாகப் புகார்கள் வந்துள்ளதால், அது குறித்து அவர் ஆலோசனை நடத்தக் கூடும் என்று தெரிகிறது. அண்மையில்,  பல்கலைக் கழகப் பணி நியமனங்களில் முறைகேட்டில் ஈடுபட்டதாகக் குற்றம் சாட்டப்பட்டு கையுடன் பிடிபட்ட கோவை பாரதியார் பல்கலைக்கழகத் துணைவேந்தர் கணபதி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில், தமிழகத்தில் உள்ள அனைத்துப் பல்கலைக் கழக துணைவேந்தர்கள் கூட்டத்தை சனிக்கிழமை இன்று ஆளுநர் பன்வாரிலால் புரோகித் கூட்டியுள்ளார். இது தொடர்பாக மருத்துவம், வேளாண்மை, கால்நடை, அண்ணா பல்கலைக்கழகம், சட்டம் உள்ளிட்ட அனைத்து பல்கலைக் கழக துணைவேந்தர்களுக்கும் அழைப்பு அனுப்பப்பட்டுள்ளது.

ஆளுநர் மாளிகையில் இன்று காலை 10.30க்கு இந்தக் கூட்டம் தொடங்குகிறது. கூட்டத்திற்கு பல்கலைக்கழக வேந்தரும், ஆளுநருமான பன்வாரிலால் புரோகித் தலைமை தாங்குகிறார். கூட்டத்தில் அனைத்து பல்கலைக்கழக துணைவேந்தர்கள் மற்றும் பதிவாளர்கள் கலந்துகொள்கிறார்கள்.

ALSO READ:  தென்காசி வழியே ஓணம் சிறப்பு ரயில்கள் தேவை!

மேலும் இந்தக் கூட்டத்தில் பல்கலைக்கழகங்களில் உள்ள காலிப்பணியிடங்கள் குறித்தும், பல்கலைக்கழகங்களின் வளர்ச்சி திட்டங்கள் குறித்தும் விவாதிக்கப் படவுள்ளதாகக்  கூறப்படுகிறது.

செங்கோட்டை ஸ்ரீராம்
செங்கோட்டை ஸ்ரீராம்https://www.dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img