நாகாலாந்தில் காங்., திரிபுராவில் பாஜக., முன்னிலை! வலுவிழக்கும் கம்யூனிஸ்ட் கோட்டை

புதுதில்லி:

நாகாலாந்து மாநிலத்தில் என்.டி.பி.பி.-பா.ஜ.க. கூட்டணி அதிக தொகுகிளில் முன்னிலையில் உள்ளது. இம்மாநிலத்தில் இக்கூட்டணி ஆட்சியைப் பிடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. திரிபுரா மாநிலத்தில் இடதுசாரிக் கூட்டணி பின்னடவைச் சந்தித்து வருகிறது. பாஜக., திரிபுராவில் முன்னிலையில் உள்ளது.

திரிபுரா மாநிலத்தில் கடந்த மாதம் 18 ஆம் தேதி தேர்தல் நடத்தப்பட்டது. அங்கு 74 சதவீத வாக்குகள் பதிவாயின. மேகாலயா மற்றும் நாகாலாந்து மாநிலங்களில் கடந்த மாதம் 27 ஆம் தேதி தேர்தல் நடந்தது. மேகாலயாவில் 67 சதவீதமும், நாகாலாந்தில் 75 சதவீதமும் வாக்குகள் பதிவாயின.

இந்நிலையில் 3 மாநிலங்களிலும் இன்று காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கி நடைபெற்று வருகிறது. முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டு பின்னர், வாக்குப்பதிவு எந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன.

காலை 9 மணிக்குப் பிறகு முன்னணி நிலவரம் வெளியாகத் தொடங்கியது. 11.30 மணி நிலவரப்படி திரிபுரா மாநிலத்தில் மொத்தமுள்ள 60 தொகுதிகளில் 40 தொகுதிகளில் பாஜக, முன்னிலை பெற்றது. இடதுசாரி கட்சி18 தொகுதிகளில் முன்னிலை பெற்றிருந்தது. அங்கு ஆட்சி அமைக்க 30 தொகுதிகள் பெரும்பான்மை பெற்றிருந்தால் போதும். அந்த வகையில், இடதுசாரிகள் தங்கள் செல்வாக்கை இழந்து வருகின்றனர். நாட்டில் மேற்குவங்கம், கேரளம், திரிபுரா ஆகிய மூன்று மாநிலங்களில்தான் இடதுசாரிகள் ஆட்சி இருந்தது. மேற்கு வங்கத்தில் மம்தா பானர்ஜியிடம் ஆட்சியைப் பறிகொடுத்தனர். தற்போது கேரளத்தில் மட்டுமே இடதுசாரி ஆட்சி உள்ளது. திரிபுராவில் ஆட்சியைப் பறிகொடுக்கின்றனர் கம்யூனிஸ்ட்கள். இதனிடையே வெற்றி முகத்தில் உள்ள பாஜக.,வினர் உற்சாகமாக ஹோலி கொண்டாடினர். தாங்கள் 40க்கும் மேற்பட்ட இடங்களில் வென்று ஆட்சி அமைப்போம் என்று பாஜக., செய்தி தொடர்பாளர் ராம் மாதவ் கூறினார்.

ALSO READ:  தோல்வி பயத்தால் தமிழகத்தில் கலவரத்தை தூண்ட திமுக முயற்சி!

மேகாலயாவில் காங்கிரஸ் 23 தொதிகளிலும், என்பிபி 14 தொகுகளிலும், பா.ஜ.க. 5 தொகுதிகளிலும் மற்ற கட்சிகள் 17 இடங்களிலும் முன்னிலை பெற்றன.

நாகாலாந்தில் வாக்கு எண்ணிக்கை தொடங்கியதில் இருந்தே தேசியவாத ஜனநாயக முற்போக்கு கட்சி – பா.ஜ.க. கூட்டணி அதிக இடங்களில் முன்னிலை பெற்றது. 11.30 மணி நிலவரப்படி இந்த கூட்டணி 29 தொகுதிகளில் முன்னிலை பெற்றது. நாகா மக்கள் முன்னணி கூட்டணி 26 தொகுதிகளில் முன்னிலையில் இருந்தது. காங்கிரஸ் 1 தொகுதியிலும், மற்றவை 4 தொகுதிகளிலும் முன்னிலை பெற்றன.

நாகாலாந்து மற்றும் திரிபுரா மாநிலங்களில் பா.ஜ.க. அதிக இடங்களில் முன்னிலை பெற்று வரும் நிலையில், பா.ஜ.க. நாடாளுமன்றக் குழுக் கூட்டம் இன்று மாலை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தலா 60 தொகுதிகளை உள்ளடக்கிய இந்த 3 மாநிலங்களிலும் தலா 59 தொகுதிகளுக்கு மட்டுமே தேர்தல் நடந்தது. திரிபுராவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு வேட்பாளர் ஒருவர் மரணம் அடைந்ததால் அங்கு ஒரு தொகுதியில் தேர்தல் நடைபெறவில்லை. மேகாலயாவில் தேசியவாத காங்கிரஸ் வேட்பாளர் கொல்லப்பட்டதால் ஒரு தொகுதியில் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது.

ALSO READ:  விஜய் தரப்பு செய்த அந்த ஒரு தவறு! தள்ளாடும் தமிழகம்!

நாகாலாந்தில் வடக்கு அங்காமி – 2 தொகுதியில் போட்டியிட்ட தேசியவாத ஜனநாயக முற்போக்கு கட்சி தலைவர் நெய்பியூ ரியோ போட்டியின்றி வெற்றி பெற்றுவிட்டார். எனவே எஞ்சிய 59 தொகுதிகளுக்கு தேர்தல் நடந்தது

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூன் 26 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

வருமானத்தில் கலக்கும் வந்தேபாரத் ரயில்கள்! தென் மாநிலங்களில் அதிக வரவேற்பு!

பாரதத்திலேயே வடிவமைக்கப்பட்டு உருவாக்கப்பட்ட நடுத்தர அதிவேக ரயில் இது. அந்த வகையில் இந்திய ரயில்வே தற்சார்பு நிலையை எட்டி இருப்பதற்கான அடையாளம் தான் வந்தே பாரத் ரயில்களின் வளர்ச்சி!

மதுரை டிவிஎஸ் நகர் கோதண்ட ராமர் கோவிலில் மகா சம்ப்ரோக்ஷணம்!

மதுரை மாவட்டம், பழங்காநத்தம் அருகே உள்ள டிவிஎஸ் நகர் பகுதியில் அமைந்துள்ள மதுரை டிவிஎஸ் குடும்பத்திற்கு சொந்தமான அருள்மிகு கோதண்ட ராமர் திருக்கோவிலில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா வெகுவிமரிசையாக நடைபெற்றது.

பஞ்சாங்கம் – ஜூன் 24 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் ஜூன் 23 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் ஜூன் 26 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

வருமானத்தில் கலக்கும் வந்தேபாரத் ரயில்கள்! தென் மாநிலங்களில் அதிக வரவேற்பு!

பாரதத்திலேயே வடிவமைக்கப்பட்டு உருவாக்கப்பட்ட நடுத்தர அதிவேக ரயில் இது. அந்த வகையில் இந்திய ரயில்வே தற்சார்பு நிலையை எட்டி இருப்பதற்கான அடையாளம் தான் வந்தே பாரத் ரயில்களின் வளர்ச்சி!

மதுரை டிவிஎஸ் நகர் கோதண்ட ராமர் கோவிலில் மகா சம்ப்ரோக்ஷணம்!

மதுரை மாவட்டம், பழங்காநத்தம் அருகே உள்ள டிவிஎஸ் நகர் பகுதியில் அமைந்துள்ள மதுரை டிவிஎஸ் குடும்பத்திற்கு சொந்தமான அருள்மிகு கோதண்ட ராமர் திருக்கோவிலில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா வெகுவிமரிசையாக நடைபெற்றது.

பஞ்சாங்கம் – ஜூன் 24 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் ஜூன் 23 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

‘தவெக., இன்னுமொரு திமுக., தானா?’ திருப்பரங்குன்ற தீப நிலைப்பாட்டுக்கு இந்து முன்னணி கண்டனம்!

உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை திருப்பரங்குன்றம் மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்றுவது தொடர்பாக வழங்கிய உத்தரவை அமல்படுத்துவதில், புதிதாக பதவி ஏற்றுள்ள தவெகவின் நிலைப்பாட்டை கேட்டிருந்தது. அது குறித்து இன்று தமிழக அரசு சார்பில் தாக்கல் செய்துள்ள பதில் மனுவில் குழப்பமான கருத்துக்களை தெரிவித்துள்ளது.

ஆர்.எஸ்.எஸ்., பதிவு செய்யப்பட்ட அமைப்பா?

ஆர் எஸ் எஸ் தனது பதிவு சான்றிதழைக் காட்ட வேண்டுமென கார்கே கேட்பது பொருள் அற்றது. ஆர் எஸ் எஸ் 100 ஆண்டுகளுக்கு மேலாக இந்த நாட்டில் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. அதில் 75 ஆண்டுகள் இந்திய அரசமைப்பு சட்டத்திற்கு உட்பட்டது.

பஞ்சாங்கம் ஜூன் 22 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Entertainment News

Popular Categories