நாகாலாந்தில் காங்., திரிபுராவில் பாஜக., முன்னிலை! வலுவிழக்கும் கம்யூனிஸ்ட் கோட்டை

புதுதில்லி:

நாகாலாந்து மாநிலத்தில் என்.டி.பி.பி.-பா.ஜ.க. கூட்டணி அதிக தொகுகிளில் முன்னிலையில் உள்ளது. இம்மாநிலத்தில் இக்கூட்டணி ஆட்சியைப் பிடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. திரிபுரா மாநிலத்தில் இடதுசாரிக் கூட்டணி பின்னடவைச் சந்தித்து வருகிறது. பாஜக., திரிபுராவில் முன்னிலையில் உள்ளது.

திரிபுரா மாநிலத்தில் கடந்த மாதம் 18 ஆம் தேதி தேர்தல் நடத்தப்பட்டது. அங்கு 74 சதவீத வாக்குகள் பதிவாயின. மேகாலயா மற்றும் நாகாலாந்து மாநிலங்களில் கடந்த மாதம் 27 ஆம் தேதி தேர்தல் நடந்தது. மேகாலயாவில் 67 சதவீதமும், நாகாலாந்தில் 75 சதவீதமும் வாக்குகள் பதிவாயின.

இந்நிலையில் 3 மாநிலங்களிலும் இன்று காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கி நடைபெற்று வருகிறது. முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டு பின்னர், வாக்குப்பதிவு எந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன.

காலை 9 மணிக்குப் பிறகு முன்னணி நிலவரம் வெளியாகத் தொடங்கியது. 11.30 மணி நிலவரப்படி திரிபுரா மாநிலத்தில் மொத்தமுள்ள 60 தொகுதிகளில் 40 தொகுதிகளில் பாஜக, முன்னிலை பெற்றது. இடதுசாரி கட்சி18 தொகுதிகளில் முன்னிலை பெற்றிருந்தது. அங்கு ஆட்சி அமைக்க 30 தொகுதிகள் பெரும்பான்மை பெற்றிருந்தால் போதும். அந்த வகையில், இடதுசாரிகள் தங்கள் செல்வாக்கை இழந்து வருகின்றனர். நாட்டில் மேற்குவங்கம், கேரளம், திரிபுரா ஆகிய மூன்று மாநிலங்களில்தான் இடதுசாரிகள் ஆட்சி இருந்தது. மேற்கு வங்கத்தில் மம்தா பானர்ஜியிடம் ஆட்சியைப் பறிகொடுத்தனர். தற்போது கேரளத்தில் மட்டுமே இடதுசாரி ஆட்சி உள்ளது. திரிபுராவில் ஆட்சியைப் பறிகொடுக்கின்றனர் கம்யூனிஸ்ட்கள். இதனிடையே வெற்றி முகத்தில் உள்ள பாஜக.,வினர் உற்சாகமாக ஹோலி கொண்டாடினர். தாங்கள் 40க்கும் மேற்பட்ட இடங்களில் வென்று ஆட்சி அமைப்போம் என்று பாஜக., செய்தி தொடர்பாளர் ராம் மாதவ் கூறினார்.

ALSO READ:  சரணாகதி அரசல்ல, சாதுர்யமான அரசு!

மேகாலயாவில் காங்கிரஸ் 23 தொதிகளிலும், என்பிபி 14 தொகுகளிலும், பா.ஜ.க. 5 தொகுதிகளிலும் மற்ற கட்சிகள் 17 இடங்களிலும் முன்னிலை பெற்றன.

நாகாலாந்தில் வாக்கு எண்ணிக்கை தொடங்கியதில் இருந்தே தேசியவாத ஜனநாயக முற்போக்கு கட்சி – பா.ஜ.க. கூட்டணி அதிக இடங்களில் முன்னிலை பெற்றது. 11.30 மணி நிலவரப்படி இந்த கூட்டணி 29 தொகுதிகளில் முன்னிலை பெற்றது. நாகா மக்கள் முன்னணி கூட்டணி 26 தொகுதிகளில் முன்னிலையில் இருந்தது. காங்கிரஸ் 1 தொகுதியிலும், மற்றவை 4 தொகுதிகளிலும் முன்னிலை பெற்றன.

நாகாலாந்து மற்றும் திரிபுரா மாநிலங்களில் பா.ஜ.க. அதிக இடங்களில் முன்னிலை பெற்று வரும் நிலையில், பா.ஜ.க. நாடாளுமன்றக் குழுக் கூட்டம் இன்று மாலை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தலா 60 தொகுதிகளை உள்ளடக்கிய இந்த 3 மாநிலங்களிலும் தலா 59 தொகுதிகளுக்கு மட்டுமே தேர்தல் நடந்தது. திரிபுராவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு வேட்பாளர் ஒருவர் மரணம் அடைந்ததால் அங்கு ஒரு தொகுதியில் தேர்தல் நடைபெறவில்லை. மேகாலயாவில் தேசியவாத காங்கிரஸ் வேட்பாளர் கொல்லப்பட்டதால் ஒரு தொகுதியில் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது.

ALSO READ:  மீண்டும் உலக சாம்பியன் இந்தியா! நியூஸி,, க்கு எதிராக சூப்பர் வெற்றி

நாகாலாந்தில் வடக்கு அங்காமி – 2 தொகுதியில் போட்டியிட்ட தேசியவாத ஜனநாயக முற்போக்கு கட்சி தலைவர் நெய்பியூ ரியோ போட்டியின்றி வெற்றி பெற்றுவிட்டார். எனவே எஞ்சிய 59 தொகுதிகளுக்கு தேர்தல் நடந்தது

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூன் 05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

உசிலம்பட்டி திருமுருகன் கோயிலில் கும்பாபிஷேகம் கோலாகலம்!

உசிலம்பட்டியில் புகழ்பெற்ற திருமுருகன் திருக்கோவில் புனருந்தாரண அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம்-நூற்றுக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து வழிபாடு செய்தனர்.

வ.வே.சு என்னும் சுதந்திர வீர விளக்கு அணைந்த தினம் இன்று!

அவருக்கு மகாத்மா காந்தியை திரும்ப ஒரு முறை சந்திக்கும் வாய்ப்பு ஏற்பட்டது. அதிதீவிரவாதியான வ.வே.சு. தன் கைத்துப்பாக்கியைக் காந்தியிடம் ஒப்படைத்துவிட்டு அஹிம்சாவாதியாக மாறினார்.

பஞ்சாங்கம் ஜூன் 4 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – ஜூன் 3 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Topics

பஞ்சாங்கம் ஜூன் 05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

உசிலம்பட்டி திருமுருகன் கோயிலில் கும்பாபிஷேகம் கோலாகலம்!

உசிலம்பட்டியில் புகழ்பெற்ற திருமுருகன் திருக்கோவில் புனருந்தாரண அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம்-நூற்றுக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து வழிபாடு செய்தனர்.

வ.வே.சு என்னும் சுதந்திர வீர விளக்கு அணைந்த தினம் இன்று!

அவருக்கு மகாத்மா காந்தியை திரும்ப ஒரு முறை சந்திக்கும் வாய்ப்பு ஏற்பட்டது. அதிதீவிரவாதியான வ.வே.சு. தன் கைத்துப்பாக்கியைக் காந்தியிடம் ஒப்படைத்துவிட்டு அஹிம்சாவாதியாக மாறினார்.

பஞ்சாங்கம் ஜூன் 4 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – ஜூன் 3 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

தாமிரபரணிக் கரை ஆலயத்தில்… வழிபாட்டில் திருவள்ளுவர்!

தெய்வத் தமிழ் வளர்த்த நம் நெல்லையம்பதியில் தாமிரபரணிக் கரை சிவாலயம் ஒன்று திருவள்ளுவரை தெய்வத்தின் வரிசையில் தன்னுள் தாங்கியுள்ளது...

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் வைகாசி தேரோட்டம் கோலாகலம்!

ஜெனகை மாரியம்மன் கோவில் அர்ச்சகர் சண்முகவேல் தலைமையில் அர்ச்சகர்கள் பூஜைகள் செய்தனர் வழிநெடுகிலும் பொதுமக்கள் தேங்காய் உடைத்து ஜெனகை மாரியம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

Entertainment News

Popular Categories